search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கதம்ப புட்டு
    X
    கதம்ப புட்டு

    சத்து நிறைந்த கதம்ப புட்டு

    புட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகள் சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த புட்டு ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - கால் கிலோ
    முளைகட்டிய பச்சை பயறு - 2 டேபிள்ஸ்பூன்
    கேரட் - 3
    பீன்ஸ் - 100 கிராம்
    தேங்காய் துருவல் - கால் கப்
    உப்பு -தேவையான அளவு

    செய்முறை:

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி மாவுடன் பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து புட்டுமாவு பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.

    பின்னர் மாவு கலவையை இட்லி தட்டில் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.

    ஆறியதும் தேங்காய் துருவல், முளைகட்டிய பச்சை பயறு கலந்து சாப்பிடலாம்.

    சூப்பரான புட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×