
பச்சரிசி - 1 கப்
இட்லிஅரிசி - 1 கப்
கடலைபருப்பு - 4 ஸ்பூன்
கல்யாண முருங்கை இலை - 1 கட்டு
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - சிட்டிகை

செய்முறை
கல்யாண முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கீரையை சுத்தம் செய்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும்.
பச்சரிசி, இட்லி அரிசி, கடலைபருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும். பாதி அரைந்ததும் சுத்தம் செய்த கீரை, வற்றல், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.