என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
அற்புதமான மருத்துவ பலன்கள் நிறைந்த புரோக்கோலி
- அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும்.
- கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் செய்யும் தொழிலிலும் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றிக்கொடி பறக்க விட முடியும். ஆகையால் தொழில் சார்ந்த முதலீடுகளில், உடல் சார்ந்த முதலீடும் அவசியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நமது உடலை பாதுகாக்க தேவையான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒன்றாக புரோக்கோலி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
புரோக்கோலி, இதை மார்க்கெட்டிலும், கடைகளில் பார்த்திருப்போம். ஆனால் நம்மில் பலர் அதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று இருப்போம். ஆனால் இதில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. குறிப்பாக பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, போலேட், சல்போரபேன் ஆகியனவும் இருக்கின்றன. புரோக்கோலியின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் புரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
இதய ஆரோக்கியம்
புரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான போலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
சர்க்கரை அளவைச் சீராக்கும்
கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். புரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உடலின் செரிமான சக்திக்கு உதவும். இதைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியம் மேம்படும்; செரிமானம் சீராகும்.
கொழுப்பை குறைக்கும்
`புரோக்கோலி, நம் உடலில் 6 சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது' என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மனஅழுத்தத்தைக் குறைக்க, இதிலிருக்கும் சல்போரபேன் பயன்படுகிறது. மனஅழுத்தத்தின் அறிகுறிகள் தென்பட்டால், சல்போரபேன் நிறைந்த இளசான புரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ரத்தச்சோகையை தடுக்கும்
நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம். இதிலிருக்கும் சல்போரபேன் உடலிலுள்ள நச்சுத் தன்மைக்கு எதிராகச் செயல்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பிரசவகால
ஆரோக்கியம் காக்கும்
பிரசவகாலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை கால்சியம் நிறைந்த உணவுகள். புரோக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கக்கூடியது. இதை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவதால் பிறக்கும் குழந்தையின் மூளை ஆரோக்கியத்துக்கு உதவும்.
புரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த புரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும். புரோக்கோலி தற்போது பெரும்பாலான கடைகளில் விற்பனைக்காக வருவதில்லை. இருப்பினும் இதை தேடி மார்க்கெட்களுக்கு செல்பவர்களும் இருக்கிறார்கள். எனவே இதையறிந்து, விற்பனை வாய்ப்புகளை உருவாக்கியும், நீங்கள் லாபம் பெற முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்