என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
புற்றுநோய் அணுக்களை திறம்பட அழிக்கும் மஞ்சள்: சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்14 July 2020 3:41 AM GMT (Updated: 14 July 2020 3:41 AM GMT)
மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ‘குர்குமின்’ ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை :
சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ‘குர்குமின்’ ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையை பொறுத்தமட்டில் உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், புற்றுநோய் அணுக்களை அழிப்பது முக்கியம் ஆகும்.
அந்தவகையில் மஞ்சள் மற்றும் ‘குர்குமின்‘ கோட்பாடுகள், புற்றுநோய் சிகிச்சையில் நல்ல பலன் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இதை சென்னை ஐ.ஐ.டி. உயிரி தொழில்நுட்பத்துறையை சேர்ந்த பேராசிரியர் ரமா சங்கர் வர்மா தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் புகழ் பெற்ற மருந்தியல் அறிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத ‘குர்குமின்’, ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ‘லுக்மியா’ அணுக்களை திறம்பட அழிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி.யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ‘குர்குமின்’ ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையை பொறுத்தமட்டில் உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், புற்றுநோய் அணுக்களை அழிப்பது முக்கியம் ஆகும்.
அந்தவகையில் மஞ்சள் மற்றும் ‘குர்குமின்‘ கோட்பாடுகள், புற்றுநோய் சிகிச்சையில் நல்ல பலன் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இதை சென்னை ஐ.ஐ.டி. உயிரி தொழில்நுட்பத்துறையை சேர்ந்த பேராசிரியர் ரமா சங்கர் வர்மா தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் புகழ் பெற்ற மருந்தியல் அறிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத ‘குர்குமின்’, ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ‘லுக்மியா’ அணுக்களை திறம்பட அழிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X