search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரைநோய் வருமுன் காக்கும் இயற்கை உணவுகள்
    X

    சர்க்கரைநோய் வருமுன் காக்கும் இயற்கை உணவுகள்

    சர்க்கரைநோய் வந்த பின்னும் அல்லது வருமுன் காப்பதற்கு சித்தர்கள் எளிமையாக இயற்கையான உணவுகளை பற்றி முன்பே நமக்கு குறிப்பிட்டுள்ளார்கள்.
    சர்க்கரைநோய் வந்த பின்னும் அல்லது வருமுன் காப்பதற்கு சித்தர்கள் எளிமையாக இயற்கையான மூலிகைகளை பற்றி முன்பே நமக்கு குறிப்பிட்டுள்ளார்கள்.

    வெந்தயம் : வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். மேலும் வெந்தயக்கீரையை வாரம் 2 முறை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம்.

    நாவல் : நாவல் பழக்கொட்டைகளை காய வைத்து நன்கு இடித்து பொடிசெய்து தினம் 1 தேக்கரண்டி அளவு காலை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்படும், மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்

    மாந்தளிர் : மாமரத்தினுடைய தளிர் இலை களை எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதில் 1 தேக் கரண்டி பொடி எடுத்து கசாயமிட்டு தினமும் காலையில் உணவிற்கு முன் அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

    பாதாம்பருப்பு : தினம் 5 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து தோல் நீக்கி உண்டுவர ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்து கொள்ளும்.
    வெண்டைக்காய்: வெண்டைக்காயை தினம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. சர்க்கரை சத்து அதி களவில் உள்ளவர்கள் 2 வெண் டைக்காயை நீளவாக்கில் அரிந்து அதை 1 டம்ளர் நீரில் இரவு போட்-டு வைத்து மறுநாள் காலையில் குடித்து வருவது நல்லது.

    பாகற்காய் : தினம் 60 மில்லி பாகற்காய் சாறு அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்த சர்க் கரையின் அளவு குறையும். உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்து வருவது நல்லது.

    நெல்லிக்காய் : நெல்லிவற்றலை பொடித்து வைத்து கொண்டு 1/2 தேக்கரண்டி அளவு தினம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத் தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்க உதவும்.



    கொய்யா : சர்க்கரையின் அளவு அதிகம் உள்ள வர்கள் தினம் 2 கொய்யா சாப்பிட்டு வருவது நல்லது. இது நம் உடலில் சர்க்கரையின் அளவு சமநிலையில் வைக்க உதவுகிறது. மேலும் 5 கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து 60 மில்லி காலை, மாலை இரு வேளை குடித்து வர சர்க்கரையின் அளவு குறையும்.

    வெங்காயம்: தினமும் 50 கிராம் பச்சை வெங்காயம் மதிய உணவிற்கு பின் சாப்பிட்டு வர நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தும். இதை தினமும் உணவில் சேர்த்து வருவதால் நம் உடலில் இன்சுலின் ஹார்மோன் சமநிலையில் இருக்கும்.

    ஆவாரை: ஆவாரை சமூலம் காயவைத்து பொடித்து வைத்து கொண்டு தினம் 2 கிராம் அளவு காலை மாலை சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு குறையும்.

    கறிவேப்பிலை : கறிவேப்பிலையை காய வைத்து பொடித்து வைத்து கொண்டு 1 தேக்கரண்டி அளவு காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டுவர இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும், இதனால் பரம்பரையாக ஏற்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

    முருங்கை இலை: முருங்கை இலையை கீரையாக பொரியல் செய்து உணவில் உண்டுவர இதில் அஸ்கார்பிக் ஆசிட் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும். இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் குறைகிறது.

    நித்தியகல்யாணி பூ: 10 நித்தியகல்யாணி பூ எடுத்து கசாயமிட்டு தினம் 60 மில்லி குடித்து வர சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்கும்.

    மஞ்சள் தூள்: தினமும் இரவு 1 டம்ளர் பாலில் 1/2 தேக்கரண்டி மஞ்கள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    பசலைக்கீரை: பசலைக்கீரை வாரம் 3 நாள் தினமும் உணவில் சேர்த்து வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமஅளவில் வைக்க உதவுகிறது. 
    Next Story
    ×