என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தூங்குவதற்கு பயமா?
Byமாலை மலர்22 May 2019 3:18 AM GMT (Updated: 22 May 2019 3:18 AM GMT)
தூக்க பயத்திற்கான அறிகுறிகள் என்னவென்றால் பகல் நேரச் சோர்வு மற்றும் மயக்கம், எரிச்சல், ஊசலாடும் நிலை, வேலை செய்ய முடியாத நிலை, குறைந்த ஞாபக சக்தி ஆகியவை.
போதிய தூக்கமே மனிதனை சுறுசுறுப்பாக வைக்கும். உழைத்து களைத்த மனிதன் இரவு தூக்கத்தில் மட்டுமே நிம்மதி அடைகிறான். உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை தூக்கம். ஆனால் தூங்குவதற்கு சிலர் பயப்படுகிறார்கள்; இந்த அதீத பயத்துக்கு ‘சோம்னி போபியா’ என்று பெயர். அதாவது தூக்கத்தின் போது ஏதாவது நடக்கும் என்ற பயம்.
இதற்கான காரணம் பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பல காரணங்களால் தூக்கம் பற்றிய பயம் தோன்றலாம். கனவுகள் பற்றிய பயம், தூக்கத்தின்போது இறந்து விடுவோமா என்ற அச்சம், பேய்கள் பற்றிய பயம், தூக்கத்தில் நடப்பவர்கள், தூக்கத்தில் பேசுபவர்கள், தூக்கத்தில் பேசும் போது ரகசியங்களை கூறிவிடுவோமோ என்கிற கவலை என ஏராளமான காரணங்களால் பயம் கொள்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களுக்கு தூங்கினால் அவர்களை பேய் கொன்றுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம். அதனால் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கிறார்கள்.
இன்னும் சிலருக்கு, இது சீசன் நோய் போலவும் வரும். அடுத்த நாள் தேர்வு என்றாலோ அல்லது அவர்கள் சந்திக்க விரும்பாத நிகழ்வு ஏதேனும் நடக்கவிருந்தாலோ முந்தைய நாள் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள். திகில் திரைப்படம் பார்ப்பவர்கள், மறைமுகமாக அல்லது எதிர்மறையான அதிர்ச்சிகரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நேசித்தவரின் இழப்பு ஆகியவையும் தூங்க விடாமல் செய்யும்.
தூக்க பயத்திற்கான அறிகுறிகள் என்னவென்றால் பகல் நேரச் சோர்வு மற்றும் மயக்கம், எரிச்சல், ஊசலாடும் நிலை, வேலை செய்ய முடியாத நிலை, குறைந்த ஞாபக சக்தி ஆகியவை. இந்த பயமானது பாதிக்கப்பட்டவரின் தொழில் மட்டும் தனிப்பட்ட வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்பதால் உடனடியாக டாக்டரை கலந்தாலோசிப்பது நல்லது. மேலும் தியானம் மற்றும் யோகா போன்றவை நல்ல தூக்கத்தை தரும். ஆழ்ந்த சுவாசம் மனதை நிதானப்படுத்தும். முறையான சிகிச்சையைவிட, அன்புக்குரியவர்கள் தரும் ஆதரவே இது போன்ற பயங்களுக்கு சரியான மருந்தாகும். தேவைப்பட்டால் மனநல சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம்.
இதற்கான காரணம் பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. பல காரணங்களால் தூக்கம் பற்றிய பயம் தோன்றலாம். கனவுகள் பற்றிய பயம், தூக்கத்தின்போது இறந்து விடுவோமா என்ற அச்சம், பேய்கள் பற்றிய பயம், தூக்கத்தில் நடப்பவர்கள், தூக்கத்தில் பேசுபவர்கள், தூக்கத்தில் பேசும் போது ரகசியங்களை கூறிவிடுவோமோ என்கிற கவலை என ஏராளமான காரணங்களால் பயம் கொள்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களுக்கு தூங்கினால் அவர்களை பேய் கொன்றுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம். அதனால் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கிறார்கள்.
இன்னும் சிலருக்கு, இது சீசன் நோய் போலவும் வரும். அடுத்த நாள் தேர்வு என்றாலோ அல்லது அவர்கள் சந்திக்க விரும்பாத நிகழ்வு ஏதேனும் நடக்கவிருந்தாலோ முந்தைய நாள் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள். திகில் திரைப்படம் பார்ப்பவர்கள், மறைமுகமாக அல்லது எதிர்மறையான அதிர்ச்சிகரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நேசித்தவரின் இழப்பு ஆகியவையும் தூங்க விடாமல் செய்யும்.
தூக்க பயத்திற்கான அறிகுறிகள் என்னவென்றால் பகல் நேரச் சோர்வு மற்றும் மயக்கம், எரிச்சல், ஊசலாடும் நிலை, வேலை செய்ய முடியாத நிலை, குறைந்த ஞாபக சக்தி ஆகியவை. இந்த பயமானது பாதிக்கப்பட்டவரின் தொழில் மட்டும் தனிப்பட்ட வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்பதால் உடனடியாக டாக்டரை கலந்தாலோசிப்பது நல்லது. மேலும் தியானம் மற்றும் யோகா போன்றவை நல்ல தூக்கத்தை தரும். ஆழ்ந்த சுவாசம் மனதை நிதானப்படுத்தும். முறையான சிகிச்சையைவிட, அன்புக்குரியவர்கள் தரும் ஆதரவே இது போன்ற பயங்களுக்கு சரியான மருந்தாகும். தேவைப்பட்டால் மனநல சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X