என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.
    செய்முறை :

    நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

    பலன்கள் :

    நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

    பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.

    சைனஸ், தலை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது இந்த முத்திரை. இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    பெருவிரலின் நுனிப்பகுதியால் ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதியையும் நடுவிரலின் நுனிப்பகுதியையும் மெதுவாக தொட வேண்டும். சுண்டுவிரல் மட்டும் நேராக இருக்க வேண்டும்.

    முதலில் விரிப்பில் அமர்ந்து மோதிர விரலை மடித்து பெருவிரலின் அடிப்பாகத்தைத் தொட வேண்டும்.

    இந்த முத்திரையை 30 நிமிடம் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த முத்திரையை செய்யலாம்.

    பயன்கள் :

    இந்த முத்திரை செய்வதால் சைனஸ் பிரச்சனை குறையும். தலை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது இந்த முத்திரை.
    இந்த முத்திரை அடிவயிறு, பிறப்பு உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கிறது. அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும். கர்ப்பப்பை, சினைப்பை, முட்டை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
    உஜாஸ் என்றால் விடியல் அல்லது புதிய தொடக்கம் என்று அர்த்தம்.

    செய்முறை :

    விரிப்பில் சப்பணம் இட்டு அமர்ந்த வாறோ, கால்களைத் தரையில் நன்கு பதித்தபடி நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். கைகள் உடலைத் தொடக் கூடாது. தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, இரு கை விரல்களையும் கோத்துக் கொள்ள வேண்டும்.

    தினமும் காலை, மாலை இரு வேளையும் 15-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள் :

    அடிவயிறு மற்றும் பிறப்பு உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கிறது. அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும்.

    கர்ப்பப்பை, சினைப்பை, முட்டை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும். ஆண்களின் வீரிய விருத்திக்கு உதவி செய்வதுடன், விந்தணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.

    ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யும்.
    இந்த முத்திரை தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளையும் தீர்க்கும். நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, கழுத்து வலி, கழுத்து எலும்பில் உள்ள சவ்வு தேய்வால் ஏற்படும் தோள்பட்டை, கை வலியை குணமாக்கும்.
    ‘சிரசாசனம்’ என்பது தலைகீழாக நின்று செய்யும் ஆசனம்.

    சிரசாசனம் செய்ய முடியாதவர்களுக்கு ‘மகா சிரசு முத்திரை’ நல்ல மாற்று. சிரசாசனம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அவை அனைத்தும் இந்த முத்திரையைச் செய்வதால் கிடைக்கும். இது உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ளஅனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும்.

    செய்முறை :

    மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் வைத்து அழுத்த வேண்டும். ஆள்காட்டி விரல் நடுவிரல் நுனிகளை கட்டைவிரல் நுனியோடு சேர்த்து வைக்க வேண்டும். சுண்டு விரல் நீட்டி இருக்கவும்.

    விரிப்பில் அமர்ந்து தலை, முதுகுத்தண்டு நிமிர்ந்த நிலையில் தரையில் சம்மணமிட்டு செய்ய வேண்டும். நாற்காலியில் அமர்ந்து பாதங்களை தரையில் பதித்தும் செய்யலாம்.

    படுக்கையில் இருக்கும் நோயாளிகள் தலையணை வைத்து சாய்ந்த நிலையில் செய்யலாம்.

    உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.

    பலன்கள் :

    நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.

    மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல் போதல் பிரச்சனை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    குனிந்து நிமிர்ந்து வேலை செய்வோர், இரு சக்கர வாகனம் ஓட்டுவோர், நீண்ட நேரம் குனிந்து படிக்கும் மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்படும் கழுத்து வலி சரியாகும். கழுத்து இறுக்கமும் நீங்கும்.

    சிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்சனையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.

    இதனால் தலை சார்ந்த அனைத்துத் தொந்தரவுகளும் நீங்கும். தலைவலி, ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) டென்சன் இவைகள் தீரும்.
    இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு சுவாசகோச முத்திரை தீர்வு அளிக்கிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை : முதல் நிலை

    பெருவிரலில் உள்ள அடி ரேகை, நடு ரேகை மற்றும் நுனியைக் கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டுவிரலால் கட்டை விரலின் அடி ரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரலின் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டிவைக்க வேண்டும்.

    இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க, ஆள்காட்டி விரலை 90 டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். கையை கவிழ்த்துவைத்தோ, கீழ்நோக்கியோ செய்யக் கூடாது.

    விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ கால்களை தரையில் ஊன்றியோ, அவசர காலத்தில் படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை செய்யலாம். அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்துகொண்டே இருக்கலாம்.

    ஒவ்வொரு முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

    பலன்கள் :

    குழந்தைகள் முதல் வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இரைப்பிருமல் கட்டுக்குள் வரும்.

    மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்க ஆகியவை குறையும்.

    ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்துவர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சுவிடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும்.

    இரைப்பிருமல் வரத்தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்ய வேண்டும்.

    இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்து வர ஆஸ்துமா வராது. ஆஸ்துமா நோய் வராமல், வருமுன் காக்க இந்த முத்திரை உதவும்.

    இன்ஹேலர், மருந்துகள், மருத்துவர் இல்லாத சமயங்களில் இந்த முத்திரை முதலுதவியாக மூச்சுத்திணறல் குறையும் வரை பயன்படுத்தலாம்.

    சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை சரியாகும்.



    சுவாசகோச முத்திரை செய்முறை :  இரண்டாம் நிலை

    இடதுகை ஆட்காட்டி விரலை நேராக நீட்டவும். இடதுகை சுண்டு விரலை மடக்கி இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்திலும், மோதிரவிரலை கட்டை விரலின் நடுப்பாகத்திலும், நடுவிரலை கட்டை விரலின் நுனியைத் தொட்டமாறும் வைக்கவும். கையை மாற்றி செய்யவும்.

    தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும்

    பலன்கள் :

    ஆஸ்துமா குணமாகும்.

    இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு சுவாசகோச முத்திரை தீர்வு அளிக்கிறது. 
    இந்த முத்திரை செய்து வந்தால் மன அமைதி கிடைக்கும். உடல் அழகுடன் விளங்கும். தியானத்தின் போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடும்.
    செய்முறை :

    விரிப்பில் சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பிறகு, நெஞ்சுக் குழிக்கு நேராக (அனாகத சக்கரத்துக்கு நேராக), கைவிரல்கள் உடலில் ஒட்டாத வண்ணம், ஒரு தாமரை மலர்ந்திருப்பதுபோன்று… அதாவது, இரண்டு கரங்களின் கட்டைவிரல்களும், சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க, மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைத்துக் கொள்ள வேண்டும் (படத்தைப் பார்க்கவும்).

    இனி, கண்களை மூடி 30 நிமிடங்கள் வரையிலும் மெளனமாக அமர்ந்திருக்கலாம். மன இறுக்கம் உள்ளவர்கள், தாமரை மொட்டு மெள்ள இதழ் விரிப்பது போன்று, முதலில் கைகளைக் குவித்து வைத்து, பின்னர் மெது மெதுவாக விரல்களை விரிக்கவும். இவ்வாறு விரிக்க குறைந்தது 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம்.இப்படி, பதினான்கு தடவைகள் செய்யவும்.

    தினமும் அதிகாலை வேளையில் செய்து பயனடையலாம்.

    இந்த முத்திரை பயிற்சி குளிர் காலங்களில் செய்வதை தவிர்க்கவேண்டும். செய்தால் நெஞ்சில் சளி கட்டும்.

    முத்திரைப் பயிற்சிகள் குறைந்தது 15 நிமிடங்களும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம், இங்கு 45 நிமிடங்கள் செய்தால் நோயிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

    பலன்கள் :

    பங்கஜ முத்திரையும் நம் மனதை மலரச் செய்யும். நாம் உலக போகங்களில் உழன்றாலும் ஒட்டியும் ஒட்டாமல் வாழும் வல்லமையைத் தரும். இதுவே ஞானத்தின் முதல் நிலை.

    மனச் சலனம், வீண் கோபம், பதற்றம் ஆகியன நீங்கும். முகப் பொலிவும் தேகத்தில் தேஜஸும் ஏற்படும்.

    தாமரையானது வெளியே குளிர்ச்சியையும் உள்ளே சிறு வெப்பத்தையும் தக்க வைத்திருக்கும் ஒர் அற்புத மலர். அதுபோல உடலைக் குளிர்ச்சியாக்கி, மனதில் தேவையான வெம்மையை தக்கவைத்து, ஆரோக்கியத்தைச் செம்மையாக்கும்.

    மனம் தெளிவடைவதால் சிந்தனையும் வளமாகும், செயல்கள் சிறப்படையும். பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி வளரும், கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

    இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும். வயிற்றில் உள்ள அல்சர் மற்றும் கட்டிகள் உருவாவதை தடுக்கும்.

    நரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும். இரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

    மன அமைதி கிடைக்கும். உடல் அழகுடன் விளங்கும். தியானத்தின் போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடும்.
    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் முத்திரை அல்லது யோகாசனத்தை செய்து நல்லது. இன்று அலர்ஜியை கட்டுப்படுத்தும் பிரம்மார முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை :

    இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும்.

    தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.

    இந்த முத்திரையை விரிப்பில் அமர்ந்து கொண்டோ, சேரில் அமர்ந்து கொண்டோ செய்யலாம்.

    பலன்கள் :

    அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும்.

    இன்றைய காலகட்டத்தில் யோகாசனம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று எந்த ஆசனத்தை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    விருக்‌ஷா ஆசனம்: உடலை ஒருநிலைப்படுத்தும். கால், தொடை, முதுகு, தோள்பட்டையை பலப்படுத்தும். மன ஒருமைப்பாட்டையும் தரும்.

    உதன் ஆசனம்: கால், இடுப்பை பலப்படுத்தும். இந்த ஆசனம் பெண்களுக்கு பயனுள்ளது. கர்ப்பப்பை மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவும்.

    நகுல் ஆசனம்: இடுப்பு மற்றும் முதுகை பலப்படுத்தும். இடுப்பு பகுதியில் சதை பற்றை குறைக்க இந்த ஆசனம் உதவும். செரிமானத்தையும் சீர்படுத்தும்.

    சக்கி சலான் ஆசனம்: நரம்பு மண்டலம், வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளை பலப்படுத்த இந்த ஆசனம் பயன்படும். பிரசவத்திற்கு பிறகு பெண்கள் இந்த ஆசனத்தை செய்து வருவதன் மூலம் தளர்வாக இருக்கும் வயிறு பகுதியை சரிப்படுத்திவிடலாம். மாதவிடாய் கோளாறுகளையும் சரி செய்துவிடும். கர்ப்ப காலங்களில் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் மட்டும் இந்த ஆசனத்தை செய்து வரலாம்.

    பரிவிர்த்தி ஜானு ஆசனம்: கல்லீரல், சிறுநீரகம் மற்றும் வயிற்று பகுதி உறுப்புகளை பலப்படுத்தும். முதுகு வலியை சரி செய்யும். அடிக்கடி தலைவலி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை செய்துவரலாம்.

    கோமுக ஆசனம்: இடுப்பு, தொடை, மார்பு, தோள்பட்டையை பலப்படுத்தும்.

    தனுர் ஆசனம்: முதுகு மற்றும் வயிறை பலப்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகளின் செயல்திறனை அதிகப்படுத்தும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    வியாகராசனம்: முதுகு தண்டை பலப்படுத்தும் ஆசனம் இது. தொடை இடுப்பு மற்றும் வயிற்று பகுதி சதை பிடிப்பை குறைக்கும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும்.

    உதர் ஆசனம்: இடுப்பு சதையை குறைக்கும். தோள்பட்டையை விரிவு படுத்தும். மலச்சிக்கலை சரி செய்யும். நாளமில்லா சுரப்பிகளை துரிதப் படுத்தும்.

    நடராஜ ஆசனம்: உடல் எடையை குறைக்க உதவும். கணுக்கால், தொடை, மார்பு, வயிறு, இடுப்பு பகுதியை பலப் படுத்தும். செரிமானத்தை சரி செய்யும், மன அழுத்தத்தை குறைக்கும்.

    அர்த்த சந்திரா: செரிமானத்தை சீர்படுத்தும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக்குறைக்கும்.

    சக்ராசனம்: இதயத்திற்கு சிறந்த ஆசனம் இது. ஆஸ்துமா உள்ளோருக்கும் பலனளிக்கும். தைராய்டு மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளை துரிதப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். உடல் ஆற்றலை மேம்படுத்தும்.

    ஹாலாசனம்: ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்யும். மலச்சிக்கலையும் போக்கும்.

    சர்வாங்காசனம்: ரத்த மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு இந்த ஆசனம் பலம் தரும். இந்த ஆசனம் செய்யும்போது தொண்டைக்கு அதிக ரத்த ஓட்டத்தை அளித்து தைராய்டு பிரச்சினைகளை சரி செய்யும். காது, மூக்கு மற்றும் தொண்டை பிரச்சினை களுக்கும் நிவாரணம் தரும். முடி உதிர்வை குறைக்கும்.

    விப்ரீத் கரணி: ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். இனப் பெருக்க ஆற்றலை அதிகப்படுத்தும். செரிமானத்தை பலப்படுத்தும். கண், காதுகளுக்கும் இந்த ஆசனம் நலம் பயக்கும்.

    மஹாபந்தன ஆசனம்: நாள் முழுவதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புத்துணர்ச்சியை கொடுக்கும். மன அழுத்தத்தை போக்கும்.

    மஹாமுத்ராசனம்: உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தி உடலை சீராக்கும்.

    சவாசனம் : எந்த ஆசனம் செய்தாலும் இறுதியில் சவாசனம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நாம் பயிற்சி செய்யும்போது இழந்த ஆற்றலை மீண்டும் பெற உடலை ஓய்வு நிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்காக கண்டிப்பாக இறுதியில் இந்த ஆசனம் செய்ய வேண்டும்.
    இந்த ஆசனம் மார்புக்கு நல்லது. சுவாச நோய்களுக்கும் நிவாரணம் தரும். கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் ஏற்படுவதால் தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்யும்.
    விபரீதகரணி`விபரீத’ என்றால் தலைகீழ் என்று பொருள். கரணி என்றால் செயல்பாடு என்று பொருள். நமது உடலை தலைகீழாக புவிஈர்ப்பு சக்தியை நோக்கி வைப்பதால் உடல் உறுப்புகள் வலிமை பெறுகின்றன. முத்திரை பயிற்சியே ஆசனமாக வருவதால் பலன்கள் அதிகம்.

    செய்முறை :

    விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு, மூச்சை உள்ளே இழுக்கவும். உள்ளேயே மூச்சை நிறுத்திக்கொண்டு நீட்டிய கால்களை ஒன்றாக அப்படியே மேலே தூக்க வேண்டும். தூக்கும்போதே இரண்டு கைகளாலும் இடுப்புக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.

    இரு கைகளாலும் இடுப்பைத் தாங்கிய வண்ணம் கால்கள் மட்டும் செங்குத்தாகத் தூக்க வேண்டும். உடல் பாரம் முழுதும் பின் கழுத்து, நெஞ்சின் பின்புறப் பகுதி ஆகியவற்றால் தாங்க வேண்டும். இப்போது மூச்சை நன்கு வெளியே விட வேண்டும்.

    மீண்டும் மூச்சை உள்ளுக்கு இழுத்து வெளியே விட்டு இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் இடுப்பைத் தூக்கிப் பிடிக்கச் சிரமமாக இருக்கும். அப்போது இரண்டு, மூன்று தலையணைகளை இடுப்புப் பக்கம் முட்டுக் கொடுத்துக்கொண்டு பயிற்சி செய்யலாம். அப்போது கைகளுக்கு வேலை இல்லாததால் அவற்றை இரு பக்கமும் கவிழ்ந்தாற்போல வைத்துக் கொள்ளலாம்.

    பலன்கள் :

    இந்த ஆசனம் மார்புக்கு நல்லது. சுவாச நோய்களுக்கும் நிவாரணம் தரும். நரம்புத் தளர்ச்சி, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவை வராது. கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் ஏற்படுவதால் தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்யும்.

    கவனம் :

    * பகலில் 200 எண்ணிக்கைக்கு மேல் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் பகலிலேயே தூக்கம் வரும்.

    * இரவில் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் செய்துவிட்டு, 15 நிமிடங்கள் கழித்து சாப்பாடு சாப்பிட்டு விட்டு, 1 டம்ளர் சூடாக
    தண்ணீர் குடித்து விட்டு படுத்தால், ஆழ்ந்த நித்திரை ஏற்படும்.

    * தலையணையை வைத்து செய்வதுதான் பாதுகாப்பானது... அதிக பலனும் அளிக்கும்.

    * முதுகு வலி, கழுத்து வலி, நீரிழிவு, ஆஸ்துமா, தலைவலி, அதிக ரத்த அழுத்தம் உடையவர்கள், இந்த ஆசனத்தை மட்டும் இரவில்
    செய்து வந்தால் நோய்கள், வலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
    இந்த ஆசனம் முதுகும் கால்களை வலுவடையச்செய்யும். முழங்கால், கணுக்கால் பிடிப்பினை நீக்கும். இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    சுப்த வஜ்ராசனம் `சுப்த’ என்பது வடமொழிச் சொல், இதற்கு சமநிலை என்று பொருள். வஜ்ராசன இருக்கையிலிருந்து அப்படியே உடலை சமநிலைப்படுத்துவதால் இப்பெயர் வழங்கலாயிற்று.

    செய்முறை :

    விரிப்பில் கால்களை நீட்டி உட்கார வேண்டும். வலக்காலை மடக்கி, பாதம் பின்புறம் பார்த்திருக்குமாறு வைக்க வேண்டும். இடக்காலை மடக்கி, இரு பாதங்களையும் ஒன்று சேர்த்து, புட்டங்களை கிடத்தி அமர்ந்து வஜ்ராசன இருக்கைக்கு வர வேண்டும்.

    மூச்சினை உள்ளிழுத்தவாறு முழங்கைகளின் உதவியால் மல்லாந்த நிலையில் உடலைக் கிடத்தவும். சாதாரண சுவாச நிலையில் இரு கைகளையும் மடக்கி ஒன்று மீது ஒன்று வைத்து, தலையைக் கிடத்தவும். இந்த நிலையில் 5 விநாடிகள் நீடிக்கவும். பின் ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள் :

    * முதுகும் கால்களும் வலுவடையும்.

    * முழங்கால், கணுக்கால் பிடிப்பினை நீக்கும்.

    * தைராய்டு சுரப்பிக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

    மனதையும் உடலையும் புத்துணர்வூட்டும். எந்த வகையான மன அழுத்தத்திலிருந்தும் உடனடி நிவாரணம் அளிக்கும்!
    ஜதார பரிவார்டாசனம் இறுகிப்போன மேல் உடல் தளர்வடையும், நன்கு ஓய்வு பெறும். தோள்பட்டை இறுக்கம் குறையும். எண்ண ஓட்டங்கள் குறையும்.
    செய்முறை

    தரையில் படுத்து பாதங்கள் தரையில் பதித்து கால்களை மடித்த நிலையிலோ அல்லது ஒரு சிறிய உயரமான நிலையிலோ வசதியாக வைத்துக்கொள்ளுங்கள். இரு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். சிறிது நேரம் உடலுக்கு ஓய்வு தாருங்கள். கண்களை மூடி, மனதை அமைதிப்படுத்துங்கள். பாய் விரிப்பில் முதுகெலும்பு நன்கு படட்டும். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, மூச்சை மெதுவாக வெளியேவிட்டு, உள்ளிழுங்கள். இதை 6  முறை செய்யவும். பிறகு சில விநாடிகள் அமைதி. கால்களை உயரத்தில் வைத்திருந்தால் அதை எடுத்துவிட்டு, கால்களை மடித்து இடைவெளிவிட்டு பாதங்களைத் தரையில் பதியுங்கள்.

    மூச்சை உள்ளிழுத்தபடியே, ஒரு கையை மேலே தூக்கி, தலைக்கு மேல் கொண்டுசென்று தரையில் வைக்கவும். ஓரிரு விநாடிகள் இடைவெளிக்குப் பின், மூச்சை மெதுவாக வெளியேவிட்டபடி அந்தக் கையை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதேபோல அடுத்த கையில் செய்யவும். 6-6 முறைகள் செய்யலாம்.

    இரு கைகளுடன் அசைவுகள்அடுத்து சில விநாடிகள் இடைவெளிக்குப் பின், மூச்சை உள்ளிழுத்தபடியே இரு கைகளையும் மேல் தூக்கி தரையில் தொடவும். பின்னர், மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குக் கொண்டுவரவும். கைகளைத் தளர்வாக வைத்துக்
    கொள்ளுங்கள். 6 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்

    இறுகிப்போன மேல் உடல் தளர்வடையும், நன்கு ஓய்வு பெறும். தோள்பட்டை இறுக்கம் குறையும். எண்ண ஓட்டங்கள் குறையும்.

    இந்த முத்திரை உணவு செரிமானம் ஆகவும், செரித்த உணவை வெளியேற்றவும் உதவுகிறது. செரிமான உறுப்புக்களான சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரலுக்கு சக்தி அளிக்கிறது.
    செய்முறை :

    வலது கை கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி மற்றும் நடுவிரல் நுனியைத் தொட வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    இடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனிகள் தொட்டு இருக்க வேண்டும். ஆட்காட்டி மற்றும் சுண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    விரிப்பின் மீது சப்பணம் இட்டு அமர்ந்து 15-20 நிமிடங்கள் வீதம், ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யலாம்.

    பலன்கள் :
     
    உணவு செரிமானம் ஆகவும், செரித்த உணவை வெளியேற்றவும் உதவுகிறது. செரிமான உறுப்புக்களான சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரலுக்கு சக்தி அளிக்கிறது.

    நரம்புகளுக்கு ஓய்வு தருகிறது. முக்கியமாக முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்பால் ஏற்படக்கூடிய வலியை (Trigeminal neuralgia) குறைக்கிறது.

    வயிறு உப்பசம், வயிற்றுவலி, வாயுத்தொல்லை, மந்தமான உணர்வு நீங்கும். சுவாசப் பாதையில் உள்ள ஒவ்வாமை சீர் பெற உதவும்.

    உடலுக்குப் புத்துணர்வை அளித்து, மூளைச் செயல்பாட்டைச் சீராக்கி, சோர்வைப் போக்கும்.
    ×