என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளிடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் தேவை...
- சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
- மனமாற்றத்துக்கு சிறு வார்த்தையே தூண்டுதலாக இருக்கும்.
நம் செயல்பாடுகளுக்கும், சிந்தனைக்கும், மனமாற்றத்துக்கும் சிறு வார்த்தையே தூண்டுதலாக இருக்கும். எப்போதும், எந்தச் சூழலிலும் நாம் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் முக்கியமானவை. 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்ற பொன்மொழிக்கு ஏற்ப, நல்லதாக நாம் கூறும் சிறு வார்த்தை, மிகப்பெரிய எதிர்மறை செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது.
குறிப்பாக குழந்தைகளிடம் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகம், அவர்களின் மனநிலையை எளிதில் மாற்றக்கூடியவை. ஏதேனும் ஒரு சிறு முயற்சியில் ஈடுபடும் பலரும், 'நான் நினைக்கும் காரியம் எப்போதும் நிகழாது; அவற்றுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்தாலும் நினைத்தபடி நடக்காது' என்று கூறுவதுண்டு.
இவர்கள் எளிதில் எதிர்மறை மனநிலைக்கு வந்து விடுவார்கள். அப்படியானவர்களைச் சுற்றி எப்போதும் நேர்மறையான வார்த்தைப் பயன்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும். குழந்தைகள் இருக்கும் வீடுகளிலும், நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
நமது வார்த்தைகளைக் கேட்டு குழந்தைகள் வளர்கிறார்கள். கேட்கும் அனைத்து வார்த்தைகளும், அவர்களின் மனதில் எளிதில் பதிந்துவிடும். பின்னர், அவையே அவர்களின் இளமை காலத்தையும் வழி நடத்தும். ஆகையால், நல்லதைப் பேசுவோம், நல்வாழ்வு வாழ்வோம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்