என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஒற்றை குழந்தையை வளர்க்கும் பெற்றோருக்கான ஆலோசனைகள்
Byமாலை மலர்17 July 2021 7:23 AM GMT (Updated: 17 July 2021 7:23 AM GMT)
ஒரே குழந்தை என்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. குழந்தை செய்யும் தவறுகளை நல்ல முறையில் சுட்டிக்காட்டி அறிவுரை கூறி திருத்த வேண்டும்.
மாறிவரும் வாழ்க்கை முறைகள் பொருளாதார நெருக்கடி, நேரமின்னைம போன்ற காரணங்களால் பல பெற்றோர்கள், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஒரு குழந்தையோடு நிறுத்தி கொள்கின்றனர். இரண்டு, மூன்று குழந்தைகளை பெற்று வளர்ப்பதை காட்டிலும் ஒற்றை குழந்தையை வளர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொண்டு வழி நடத்தினால் சிரமங்களை தவிர்த்து மகிழ்ச்சியாக வாழலாம். அதற்கான ஆலோசனைகளை இங்கே பர்ர்ககலாம்.
தனிமையை தவிர்த்தல்
ஒற்றை குழந்தைகள் தனிமையை அதிகமாக உணர்வார்கள். தனியாக வளர்வதால் மற்றவர்களிடம் சகஜமாக பழகுவதற்கு தயங்குவார்கள். அவர்களிடம் பெற்றோர்கள் தோழமை உணர்வோடு பழக வேண்டும். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் அவர்கள் மனம் விட்டு பேசும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும்.
சமூக நடத்தை மற்றும் பகிர்தல்
பொது இடங்களில் மற்றவர்களுடன் நட்பாக பழகுவது, வயதில் மூத்தவர்களை மதித்து நடப்பது, தம்மிடம் இருப்பதை இல்லாதவருடன் பகிர்ந்து கொள்வது போன்ற பண்புகளை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.
தவறை சுட்டிக்காட்டுதல்
ஒரே குழந்தை என்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. குழந்தை செய்யும் தவறுகளை நல்ல முறையில் சுட்டிக்காட்டி அறிவுரை கூறி திருத்த வேண்டும்.
மன்னிப்பு கேட்கப்பழகுதல்
ஏதேனும் தவறு செய்தால், செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். தவறு செய்து விட்டால் பெரியவர், சிறியவர் போன்ற பேதங்களை பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இது குழந்தையிடம் தனி மனித ஓழுக்கத்தை மேம்படுத்தும்.
சுதந்திரம்
ஒரே குழந்தை என்பதால் கைக்குள்ளேயே வைத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். தனியாக சிந்திக்கவும், செயல்படவும் அனுமதிக்க வேண்டும். அவர்களுடைய ஆர்வத்தை தெரிந்து கொண்டு அதை நோக்கி நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.
பணத்தின் மதிப்பை உணர்த்துதல்
குழந்தை கேட்கும் அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தேவை அறிந்து பொருள் வாங்குதல், குடும்ப பொருளாதார நிலை, கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கும் சூழல் என பொருளாதார ரீதியான அனைத்து விஷயங்களையும் சிறு வயதிலிருந்தே புரிய வைக்க வேண்டும்.
சூழலை ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்குதல்
ஒரே குழந்தை என்பதற்காக கல்வி, உணவு, உடை போன்றவற்றுக்காக அதிகமாக செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பழக்கக்கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் சீரான வாழ்க்கை வாழ்வதற்கு கற்றுத்தர வேண்டும்.
தனிமையை தவிர்த்தல்
ஒற்றை குழந்தைகள் தனிமையை அதிகமாக உணர்வார்கள். தனியாக வளர்வதால் மற்றவர்களிடம் சகஜமாக பழகுவதற்கு தயங்குவார்கள். அவர்களிடம் பெற்றோர்கள் தோழமை உணர்வோடு பழக வேண்டும். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் அவர்கள் மனம் விட்டு பேசும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும்.
சமூக நடத்தை மற்றும் பகிர்தல்
பொது இடங்களில் மற்றவர்களுடன் நட்பாக பழகுவது, வயதில் மூத்தவர்களை மதித்து நடப்பது, தம்மிடம் இருப்பதை இல்லாதவருடன் பகிர்ந்து கொள்வது போன்ற பண்புகளை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.
தவறை சுட்டிக்காட்டுதல்
ஒரே குழந்தை என்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. குழந்தை செய்யும் தவறுகளை நல்ல முறையில் சுட்டிக்காட்டி அறிவுரை கூறி திருத்த வேண்டும்.
மன்னிப்பு கேட்கப்பழகுதல்
ஏதேனும் தவறு செய்தால், செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். தவறு செய்து விட்டால் பெரியவர், சிறியவர் போன்ற பேதங்களை பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இது குழந்தையிடம் தனி மனித ஓழுக்கத்தை மேம்படுத்தும்.
சுதந்திரம்
ஒரே குழந்தை என்பதால் கைக்குள்ளேயே வைத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். தனியாக சிந்திக்கவும், செயல்படவும் அனுமதிக்க வேண்டும். அவர்களுடைய ஆர்வத்தை தெரிந்து கொண்டு அதை நோக்கி நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.
பணத்தின் மதிப்பை உணர்த்துதல்
குழந்தை கேட்கும் அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தேவை அறிந்து பொருள் வாங்குதல், குடும்ப பொருளாதார நிலை, கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கும் சூழல் என பொருளாதார ரீதியான அனைத்து விஷயங்களையும் சிறு வயதிலிருந்தே புரிய வைக்க வேண்டும்.
சூழலை ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்குதல்
ஒரே குழந்தை என்பதற்காக கல்வி, உணவு, உடை போன்றவற்றுக்காக அதிகமாக செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பழக்கக்கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் சீரான வாழ்க்கை வாழ்வதற்கு கற்றுத்தர வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X