என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பிள்ளைகளிடம் தமிழை வளர்க்க என்ன செய்ய வேண்டும்
Byமாலை மலர்10 March 2021 6:23 AM GMT (Updated: 10 March 2021 6:23 AM GMT)
எந்த ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தினாலும் தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை கூட கவனமாக தவிர்த்து விடுவது நல்லது.
தாய்மொழி தான் நம்முடைய உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தவும், கலை, பண்பாடு, பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுக்கவும் நமக்கு உதவும் கருவியாகும். பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி தமிழை கற்றுக்கொடுக்கிறார்கள் என கேட்ட போது கிடைத்த வழிமுறைகள் இதோ...
எந்த ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தினாலும் தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை கூட கவனமாக தவிர்த்து விடுவது நல்லது. ஸ்கூல் என்பதை பொதுவாக எல்லோரும் பயன்படுத்தினாலும் பள்ளிக்கூடம் என்று சொல்லிக்கொடுக்கலாம்.
கதைகளை தமிழில் அதிகம் சொல்லிக்கொடுக்கலாம். இலக்கியங்களில் முக்கியத்துவம் பெற்ற கதாபாத்திரங்களை பற்றிய கதைகளை அதிகம் கூறலாம். புத்தகத்தில் இருக்கும் நல்ல தமிழ் வார்த்தைகளை தொடர்ந்து கதைகளில் ஊடாகவே சொல்லி குழந்தைகள் அந்த வார்த்தைகளை பேச்சு மொழியில் பொருத்தி பார்க்க உற்சாகப்படுத்தலாம்.
குழந்தைகள் தமிழ் மொழியை ஆர்வமாக கற்க வேண்டும் என்பதற்காக குட்டி குட்டி கதைகளை சொல்லி வரலாம்.
வீட்டில் சமைக்கும் போது தமிழில் காய்கறிகள் மற்றும் சமையல் பொருள்களின் பெயர்களை அறிமுகப்படுத்தலாம். சில நேரங்களில் படக்கதைகள் உள்ள புத்தகங்களை வாங்கிக்கொடுத்து எழுத்துக்களை வாசிக்க சொல்லி கற்றுக்கொடுக்கலாம். பிள்ளைகளை தமிழில் கதை சொல்ல பழக்கலாம்.
வீட்டில் முடிந்த வரை தமிழிலிலேயே பேச வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். டின்னர், பிரேக்பாஸ்ட் என்று ஆங்கிலத்தில் சொல்கிற வார்த்தைகளை கவனமாக தவிர்க்கலாம். எங்கெல்லாம் யாரிடமெல்லாம் தமிழில் பேச முடியுமோ அங்கெல்லாம் தமிழிலேயே பேசச் சொல்லலாம்.
பாடல்கள் மூலம் இன்றைய குழந்தைகள் எளிதில் தமிழ்மொழியை கற்று கொள்கிறார்கள். எழுதுவது, பார்ப்பது, கேட்பது என்ற மூன்று வகையான கற்றல் வகைகளில் கேட்பதன் மூலம் குழந்தைகள் எளிதாக உள்வாங்கி கொள்கிறார்கள். கூடியவரை தான் நினைப்பதை தாய்மொழியிலேயே கூறுவதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம்.
பிள்ளைகள் தனது தாய் மொழியான தமிழை நன்கு கற்க வேண்டும் என்பதில் பெற்றோர் உறுதியாக இருக்க வேண்டும். வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க, உட்காருங்க அப்படியென்று தமிழில் வரவேற்று உபசரிக்கவும் சொல்லிக் கொடுக்கலாம்.
நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்களை கூட தமிழில் உறவுமுறை சொல்லி மாமா, அத்தை, அண்ணன், அக்கா எனறு தான் அழைக்க வேண்டும் என்று சொல்லி தரலாம். தினமும் 10 நிமிடமாவது திருப்பாவை போன்ற தமிழ் இலக்கியங்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்..
எந்த ஒரு குழந்தைக்கும் பாடத்தின் மூலம் மட்டுமே ஒரு மொழியை கற்பித்து விட முடியாது. தமிழ் மொழியை கற்பிப்பதை விட உள்வாக்கும் சூழ்நிலைகளை அமைத்து தருவதே அதை கற்பிப்பதற்கான சிறந்த வழிமுறையாகும்.
முதலில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி உரையாடுவது மிக முக்கியமானது. சிறு குழந்தைகள் பொதுவாகவே கதைகளை அதிகம் விரும்புவார்கள். ஆங்கிலம் கலக்காமல் கதை சொல்வதன் மூலம் அவர்கள் நிறைய வார்த்தைகளை கற்று கொள்வார்கள். கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள் என்றால் புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்லலாம்.
பேசுவது, கதை சொல்வது மட்டுமல்லாமல், பொங்கல், தீபாவளி என்று விழா நாட்களில் அவை சார்ந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்தி வாசிக்க சொல்வது, போட்டிகள் நடத்தி பரிசளிப்பது என தமிழ் மொழி சார்ந்த ஆர்வத்தை தூண்டலாம்.
எந்த ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தினாலும் தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை கூட கவனமாக தவிர்த்து விடுவது நல்லது. ஸ்கூல் என்பதை பொதுவாக எல்லோரும் பயன்படுத்தினாலும் பள்ளிக்கூடம் என்று சொல்லிக்கொடுக்கலாம்.
கதைகளை தமிழில் அதிகம் சொல்லிக்கொடுக்கலாம். இலக்கியங்களில் முக்கியத்துவம் பெற்ற கதாபாத்திரங்களை பற்றிய கதைகளை அதிகம் கூறலாம். புத்தகத்தில் இருக்கும் நல்ல தமிழ் வார்த்தைகளை தொடர்ந்து கதைகளில் ஊடாகவே சொல்லி குழந்தைகள் அந்த வார்த்தைகளை பேச்சு மொழியில் பொருத்தி பார்க்க உற்சாகப்படுத்தலாம்.
குழந்தைகள் தமிழ் மொழியை ஆர்வமாக கற்க வேண்டும் என்பதற்காக குட்டி குட்டி கதைகளை சொல்லி வரலாம்.
வீட்டில் சமைக்கும் போது தமிழில் காய்கறிகள் மற்றும் சமையல் பொருள்களின் பெயர்களை அறிமுகப்படுத்தலாம். சில நேரங்களில் படக்கதைகள் உள்ள புத்தகங்களை வாங்கிக்கொடுத்து எழுத்துக்களை வாசிக்க சொல்லி கற்றுக்கொடுக்கலாம். பிள்ளைகளை தமிழில் கதை சொல்ல பழக்கலாம்.
வீட்டில் முடிந்த வரை தமிழிலிலேயே பேச வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். டின்னர், பிரேக்பாஸ்ட் என்று ஆங்கிலத்தில் சொல்கிற வார்த்தைகளை கவனமாக தவிர்க்கலாம். எங்கெல்லாம் யாரிடமெல்லாம் தமிழில் பேச முடியுமோ அங்கெல்லாம் தமிழிலேயே பேசச் சொல்லலாம்.
பாடல்கள் மூலம் இன்றைய குழந்தைகள் எளிதில் தமிழ்மொழியை கற்று கொள்கிறார்கள். எழுதுவது, பார்ப்பது, கேட்பது என்ற மூன்று வகையான கற்றல் வகைகளில் கேட்பதன் மூலம் குழந்தைகள் எளிதாக உள்வாங்கி கொள்கிறார்கள். கூடியவரை தான் நினைப்பதை தாய்மொழியிலேயே கூறுவதற்கு குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம்.
பிள்ளைகள் தனது தாய் மொழியான தமிழை நன்கு கற்க வேண்டும் என்பதில் பெற்றோர் உறுதியாக இருக்க வேண்டும். வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க, உட்காருங்க அப்படியென்று தமிழில் வரவேற்று உபசரிக்கவும் சொல்லிக் கொடுக்கலாம்.
நண்பர்கள் வட்டத்தில் உள்ளவர்களை கூட தமிழில் உறவுமுறை சொல்லி மாமா, அத்தை, அண்ணன், அக்கா எனறு தான் அழைக்க வேண்டும் என்று சொல்லி தரலாம். தினமும் 10 நிமிடமாவது திருப்பாவை போன்ற தமிழ் இலக்கியங்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்..
எந்த ஒரு குழந்தைக்கும் பாடத்தின் மூலம் மட்டுமே ஒரு மொழியை கற்பித்து விட முடியாது. தமிழ் மொழியை கற்பிப்பதை விட உள்வாக்கும் சூழ்நிலைகளை அமைத்து தருவதே அதை கற்பிப்பதற்கான சிறந்த வழிமுறையாகும்.
முதலில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி உரையாடுவது மிக முக்கியமானது. சிறு குழந்தைகள் பொதுவாகவே கதைகளை அதிகம் விரும்புவார்கள். ஆங்கிலம் கலக்காமல் கதை சொல்வதன் மூலம் அவர்கள் நிறைய வார்த்தைகளை கற்று கொள்வார்கள். கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள் என்றால் புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்லலாம்.
பேசுவது, கதை சொல்வது மட்டுமல்லாமல், பொங்கல், தீபாவளி என்று விழா நாட்களில் அவை சார்ந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்தி வாசிக்க சொல்வது, போட்டிகள் நடத்தி பரிசளிப்பது என தமிழ் மொழி சார்ந்த ஆர்வத்தை தூண்டலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X