search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்
    X
    குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்

    குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்

    குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.
    1. அதிக கட்டுப்பாடு

    தினமும் துல்லியமாக குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவைப்பது- அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் விழித்தாகவேண்டும் என்பது- டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க நேரம் ஒதுக்குவது- குறிப்பிட்ட நேரத்தில் படித்துதான் ஆகவேண்டும் என்பது, போன்று குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை பெற்றோர் விதிக்கக்கூடாது. அதை குழந்தைகள் மீறும்போது தண்டனை வழங்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு குழந்தைகளை வளர்ப்பவர்கள் அடக்குமுறை எண்ணம் கொண்ட பெற்றோராவர்.

    இத்தகைய பெற்றோரிடம் அடக்குமுறை உணர்வுதான் மேலோங்கியிருக்கும். அன்பு இருக்காது. குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல், அவர்களை பொம்மைபோன்று நினைத்துக்கொண்டு அவர்களை தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க முயற்சிப்பார்கள். தங்கள் விருப்பப்படியே குழந்தைகள் வளரவேண்டும் என்றும் இத்தகைய பெற்றோர்கள் எதிர்பார்ப்பார்கள்.

    எதிர்விளைவுகள்

    இப்படி அடக்குமுறைக்கு உள்ளாகி வளரும் குழந்தைகள் டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோரின் அடக்குமுறை சுபாவத்திற்கு பதிலடி கொடுக்கத்தொடங்கும். இது குடும்பத்திற்குள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கும். அவர்களில் சிலர் மோசமான நண்பர்களால் ஈர்க்கப்பட்டு போதைப் பொருள் பழக்கத்திற்கும் உள்ளாகிவிடக்கூடும். அதுவரை கடுமையான கட்டுப்பாடுகளோடு வளர்ந்து வருகிறவர்களுக்கு டீன்ஏஜில் சுதந்திரம் கொடுக்கும்போது, அவர்கள் அளவற்ற சுதந்திரத்தை அனுபவிக்க முயற்சிப்பார்கள். எல்லையற்ற சுதந்திரத்தை திடீரென்று அனுபவிக்கும் இவர்களிடம் நள்ளிரவில் ஊர் சுற்றுதல், வன்முறை செயல்பாடுகளில் ஈடுபடுதல், அதிக வேகத்தில் கார் ஓட்டுதல் போன்ற முரண்பாடான பழக்கவழக்கங்கள் தோன்றக்கூடும். இது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும் நிலை ஏற்படலாம்.

    2. கவனிப்பின்மை

    பெற்றோர் இருவரும் வேலைபார்ப்பவர்களாக இருக்கும்போது, அவர்கள் கவனம் பெரும்பாலும் வேலையை சுற்றியே இருக்கும். அதனால் குழந்தைகளை அடுத்தவர்கள் பொறுப்பில்விட்டுவிடுவார்கள். தாத்தா-பாட்டி, உறவினர் அல்லது வேலைக்காரர் பொறுப்பில் அந்த குழந்தைகள் வளர்வார்கள். அவ்வப்போது குழந்தைகளை வந்து பார்த்துவிட்டு பரிசு பொருட்கள், பணம் போன்றவற்றை கொடுத்துவிட்டு செல்வார்கள். இப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பெற்றோர் தங்களை கவனிக்கவில்லை என்ற மனக்குறை இருந்துகொண்டிருக்கும். பெற்றோர் புறக்கணிப்பதாக கருதிவிடுவார்கள்.

    எதிர்விளைவுகள்

    பெற்றோரின் அன்பு கிடைக்காத இந்த குழந்தைகளிடம் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை இருக்காது. தாத்தா-பாட்டிகள், அவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளின் விருப்பத்திற்கெல்லாம் வளைந்துகொடுப்பார்கள். அதனால் இத்தகைய குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் தன்மை அதிகமாக இருந்துகொண்டிருக்கும். தாங்கள் விரும்பியதை சாதிக்க ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்வார்கள். குழந்தைகள் பெற்றோரால் வளர்க்கப்படும்போது அவர்களிடமிருந்து பெரும்பாலான வாழ்க்கைப்பாடங்களை பார்த்து, தெரிந்து கற்றுக்கொள்வார்கள். அந்த வாழ்வியல் அறிவு குழந்தைகளுக்கு மிக அவசியம். வேலைக்காரர்களிடமோ, மற்றவர்களிடமோ வளரும் குழந்தைகளுக்கு அத்தகைய வாழ்க்கைப் பாடங்கள் அரைகுறையாகத்தான் கிடைக்கும்.

    பெற்றோரின் முழு கவனிப்பு கிடைக்காத குழந்தைகள், நண்பர்களால் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். நண்பர்களின் பழக்கவழக்கங்கள் அவர்களிடம் உருவாகும். நல்ல நண்பர்கள் கிடைத்தால் அது அதிர்ஷ்டம். தவறான நண்பர்கள் கிடைத்தால் முரண்பாடான பாதைக்கு அவர்களை இழுத்துச்சென்றுவிடுவார்கள்.

    3. பொறுப்பின்மை

    குழந்தைகளின் அனைத்து செயல்களுக்கும் விலை நிர்ணயிக்கக்கூடாது. அதாவது படிப்பதற்கு சாக்லேட் கொடுப்பது, பரீட்சை நன்றாக எழுதுவதற்கு புதிய ஷூ வாங்கிக்கொடுப்பது போன்ற பழக்கங்களை உருவாக்குவது பொறுப்பற்ற செயலாகும். இந்த நிலை நீடித்தால் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு தக்கபடியான பொருட்களை கேட்கத்தொடங்கிவிடும். அது தவறான முன்னுதாரணமாகிவிடும்.

    எதிர்விளைவுகள்

    குழந்தைகளிடம் ‘படிப்பதும், பரீட்சை எழுதுவதும் அவர்கள் எதிர்காலம் சிறந்து விளங்குவதற்காக செய்யப்படும் செயல்’ என்பதை உணர்த்தவேண்டும். அப்படியானால்தான் அவர்களிடம் பொறுப்பு உருவாகும். கிடைக்கும் சாக்லேட்டுக்காகவும், ஷூவுக்காகவும் குழந்தைகள் வேலைபார்க்கத் தொடங்கிவிட்டால், அது அவர்களது எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும். 
    Next Story
    ×