என் மலர்
வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 27 மே 2025
- சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் உற்சவம் ஆரம்பம்.
- ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-13 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அமாவாசை காலை 9.09 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: கார்த்திகை காலை 6.02 மணி வரை பிறகு ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.24 மணி வரை பிறக மிருகசீர்ஷம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி உள்பட முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் உற்சவம் ஆரம்பம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திர வைபவம். திண்டுக்கல் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை, ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-செலவு
மிதுனம்-வரவு
கடகம்-தாமதம்
சிம்மம்-இன்பம்
கன்னி-உறுதி
துலாம்- திடம்
விருச்சிகம்-சிறப்பு
தனுசு- உவகை
மகரம்-ஆதரவு
கும்பம்-அமைதி
மீனம்-பாராட்டு






