என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 ஜூலை 2025
    X

    இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 15 ஜூலை 2025

    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    • ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-31 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி இரவு 10.47 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : சதயம் காலை 7.17 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை.

    ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தல மான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-பெருமை

    சிம்மம்-சுகம்

    கன்னி-முயற்சி

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-வரவு

    தனுசு- சிறப்பு

    மகரம்-தனம்

    கும்பம்-நலம்

    மீனம்-லாபம்

    Next Story
    ×