search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் 27-ந்தேதி தொடக்கம்
    X

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் 27-ந்தேதி தொடக்கம்

    • நவராத்திரி உற்சவம் 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • 5-ந்தேதி அம்மன் சிவன்-பார்வதி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி காமாட்சியம்மன் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதை முன்னிட்டு 23-ந்தேதி கோவிலில் ஆலய சுத்தி எனப்படும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து 26-ந்தேதி கலச ஸ்தாபனம், அங்குரார்ப்பணம், 27-ந்தேதி காமாட்சிதேவி அலங்காரம், 28-ந்தேதி ஆதிபராசக்தி அலங்காரம், 29-ந்தேதி மாவடி சேவா அலங்காரம், 30-ந்தேதி அன்னப்பூர்ணாதேவி அலங்காரம், அக்டோபர் மாதம் 1-ந்தேதி மஹாலட்சுமி அலங்காரம், 2-ந்தேதி சரஸ்வதிதேவி அலங்காரம், 3-ந்தேதி துர்காதேவி அலங்காரம், 4-ந்தேதி மகிஷாசுர மர்த்தினி அலங்காரம், 5-ந்தேதி விஜயதசமியை முன்னிட்டு அம்மன் சிவன்-பார்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் ெதரிவித்தனர்.

    Next Story
    ×