search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவில் தைப்பூச திருவிழா: பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வர தடை
    X

    திருச்செந்தூர் கோவில் தைப்பூச திருவிழா: பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வர தடை

    • தைப்பூசத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    • மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வரக்கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு சாலையில் நடந்து வரும் போது, சாலையின் இடதுபுறமாக வாகனங்கள் வருவதால் பக்தர்கள் மீது மோத வாய்ப்பு உள்ளது. ஆகையால் பக்தர்கள் சாலையின் வலதுபுறமாக நடந்து செல்ல வேண்டும். இதனால் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை கண்டுகொண்டு விபத்து நேரா வண்ணம் பக்தர்கள் தங்களை காத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம்.

    அதே போன்று பாதயாத்திரை பக்தர்கள் முதுகு பகுதி மற்றும் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக பாதயாத்திரை செல்ல வேண்டும். இந்த தைப்பூச திருவிழாவை விபத்து இல்லாமல் பாதுகாப்பான முறையில் வழிபட்டு செல்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்தோ அதனை வெளிப்படுத்தும் வகையிலான கொடிகளோ கொண்டு வரக்கூடாது. சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×