search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரி விழா நாளை மறுநாள் நடக்கிறது
    X

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரி விழா நாளை மறுநாள் நடக்கிறது

    • சிவராத்திரி விழா அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும்.
    • தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

    சிவராத்திரியையொட்டி சனி பிரதோஷ விழாவும் சேர்ந்து வருவதால் அன்று நான்கு கால பூஜையுடன் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி மாலை 6 மணிக்கு கோவிலில் உள்ள அகல் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்படும். இரவு 7 மணிக்கு ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் இருக்கும்படி அமரச் செய்து கோவில் சுற்றுப்பிரகாரத்தில் மூன்று முறை ஸ்ரீபலி விழா நடக்கிறது. பின்னர் தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது. அப்போது தாணுமாலய சாமிக்கு நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு தங்கு அங்கி சார்த்தப்படும். நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால பூஜையும், மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு 3-வது கால பூஜையும், 2.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெறும்.

    அதிகாலை 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீ பலி விழா நடக்கிறது. சிவராத்திரி விழா அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 12 சிவாலயங்களிலும் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடி வரும் பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், திருக்கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×