search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்புல்லாணி கோவில் சிறப்பு அம்சங்கள்
    X

    திருப்புல்லாணி கோவில் சிறப்பு அம்சங்கள்

    • ஆதி ஜெகநாதர் கோவிலில் ராமர் சயன நிலையில் இருப்பது சிறப்பம்சமாகும்.
    • இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது.

    திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவர்கள் வழிபடும் கடவுளாக போற்றப்படுகிறார்கள். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலை குறிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சங்க காலத்திற்கு பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியார்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு தழைத்தோங்கியது.

    அந்த வகையில் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 105-வது தலம் இந்த ஆதி ஜெகநாதர் கோவிலாகும். அனைத்து கோவில்களிலும் ராமபிரான் நின்ற கோலத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    சயனநிலையில் ராமர்

    ஆனால் ஆதி ஜெகநாதர் கோவிலில் ராமர் சயன நிலையில் இருப்பது சிறப்பம்சமாகும். திருமங்கை–யாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இதுதவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ள சேது பாலம் பற்றி பாடியுள்ளனர்.

    பஞ்ச தரிசனம் பூரி தலத்தில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சிதரும் ஜெகநாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது. புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

    ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

    இதுபோன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை தாங்கி நிற்கும் கோவில் சிறப்புகளை அறியவும், பல்வேறு வடிவங்களில் காட்சி தந்து அருள்புரியும் பெருமாளை தரிசிக்கவும் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ஆதி ஜெகநாதர் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

    Next Story
    ×