search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாகாப்புக்கட்டுதலுடன் நாளை தொடங்குகிறது
    X

    பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாகாப்புக்கட்டுதலுடன் நாளை தொடங்குகிறது

    • அக்டோபர் 4-ந்தேதி வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்படுகிறது.

    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நாளை (திங்கட்கிழமை) காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் கோவில் சுத்தம் செய்யப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு உச்சிக்கால பூஜையில் காப்புக்கட்டு நடைபெறுகிறது.

    இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்காரம் நடைபெறுகிறது. மேலும் கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்படுகிறது. அதோடு பக்தி சொற்பொழிவு, கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவின் 9-ம் நாளான அடுத்த (அக்டோபர்) மாதம் 4-ந்தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2.45 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் சென்று வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்பி வருதலும், அர்த்தசாம பூஜையும் நடைபெறுகிறது. அதையடுத்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×