என் மலர்
வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் கொடிமரம் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிப்பதை காணலாம்.
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம்: பக்த கண்ணப்பர் கொடியேற்றம் இன்று மாலை நடக்கிறது
- நாளை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடக்கிறது.
- 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் 26-ந்தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
முதல் நாளான இன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் தீவிர பக்தரான கண்ணப்பருக்கே முதல் பூஜை வழக்கப்படும் என்பதைக் குறிக்கும் வகையில் ஸ்ரீகாளஹஸ்தி அருகே கண்ணப்பர் மலை மீதுள்ள கண்ணப்பர் கோவிலில் கண்ணப்பர் கொடியேற்றம் இன்று மாலை 4 மணியளவில் நடக்கிறது. அத்துடன் அங்குரார்ப்பணமும் நடக்கிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடக்கிறது.
15-ந்தேதி காலை 9 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 8 மணியளவில் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் நான்கு மாட வீதிகளில் உலா.
16-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9 மணியளவில் ராவணசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா.
17-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.
18-ந்தேதி மகா சிவராத்திரி விழா, காலை 10.30 மணியளவில் இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9.30 மணியளவில் தங்க நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், தங்க சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.
19-ந்தேதி காலை 11 மணியளவில் தேரோட்டம், இரவு 8 மணியளவில் நாரதர் புஷ்கரணியில் தெப்போற்சவம்.
20-ந்தேதி காலை 9 மணியளவில அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9 மணியளவில் யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலில் இருந்து மணமக்கள் அலங்காரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு நகரி வீதியில் உள்ள கோவில் திருக்கல்யாண மண்டபத்தை அடைகின்றனர்.
21-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-ஞானப்பிரசுனாம்பிகை தாயார் திருக்கல்யாண உற்சவம். காலை 11 மணியளவில் புதுமண தம்பதியர் அலங்காரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் அம்பாரி வாகனங்களில் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரவு 7 மணியளவில் நடராஜர் (சபாபதி) திருக்கல்யாண உற்சவம்.
22-ந்தேதி காலை 8 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் ஊர்வலமாக புறப்பட்டு கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலம் நிறைவடைந்ததும் இரவு 9 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.
23-ந்தேதி காலை 9 மணியளவில் கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா. மதியம் 12 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் வசந்த உற்சவம். கொடியிறக்கம், இரவு 9 மணியளவில் சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா.
24-ந்தேதி இரவு 8 மணியளவில் பல்லக்கு சேவை (3 பல்லக்குகள்)
25-ந்தேதி இரவு 9 மணியளவில் ஞானப்பிரசுனாம்பிகை மூலவர் சன்னதி எதிரில் உள்ள பள்ளியறையில் ஏகாந்த சேவை.
26-ந்தேதி காலை 9.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவமூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம். இத்துடன் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா முடிகிறது.
மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தெரிவித்துள்ளார்.