search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-26)
    X

    புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-26)

    • சிறப்புகள் நிறைந்த லைலத்துல்கத்ர்
    • ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு இருக்கிறது.

    சிறப்புகள் நிறைந்த லைலத்துல்கத்ர்

    புனித ரமலான் மாதம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது எனில் அதில்தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு இருக்கிறது. அதுதான் கண்ணியமிக்க, பாக்கியமிக்க லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆகும். அதில்தான் இறைவேதங்களில் இறுதி வேதமான திருக்குர்ஆன் வேதம் இறங்கியது.

    இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிரா எனும் குகையில், இறைவனை நாடி தனிமையில் தவம் செய்தபோது, அவரது நாற்பது வயதில் முதல் இறைச்செய்தி இறங்குகிறது.

    அதிலிருந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் மக்காவில் மார்க்கப் பணியில் தம்மை ஈடுபடுத் திக் கொண்டார். பிறகு மதீனாவை நோக்கி அவர் நாடு துறந்து சென்றார். இது ஹிஜ்ரத் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு முறைக்கு ஹிஜ்ரி என்றும் சொல்லப்படுகிறது. கணக்கிடப்படுகிறது.

    ஹிஜ்ரி 2-ம் ஆண்டு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்களுக்கு முதல் இறைச்செய்தி இறங்கி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்த பிறகு தான் புனித ரமலானில் நோன்பு கடமை யாக்கப்பட்டது. நபியவர்களுக்கு முதல்முறையாக இறைச்செய்தி இறங்கியதும் புனித ரமலா னில் அமைந்துள்ள லைலத்துல் கத்ர் என்ற இரவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹிஜ்ரி 2-ம் ஆண்டு நோன்பு கடைப்பிடிக்கப்படுவதற்கு முன்பே ரமலான் மாதமும் இருந்தது. லைலத்துல்கத்ர் எனும் இரவும் இருந்தது. எனினும், புனித ரமலானில் நோன்பு நோற்பது என்பதும், அதில் இறுதிப்பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடி அடைவது என்பதும் ஹிஜ்ரி 2-ம் ஆண்டிலிருந்து முறைப்படுத்தப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு கிடைக்கப்பெற காரணம் யாதெனில், 'யூதர்களில் ஒரு மனிதர் வாழ்ந்தார்.

    அவர் இரவில் இறைவணக்கம் புரிவார். பகலில் அறப்போர் புரிவார். இவ்வாறு அவர் ஆயிரம் மாதங்கள் செய்தார்' என்ற செய்தி நபித்தோழர்களுக்கு கிடைத்த போது ஆச்சரியப்பட்டு இந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்காதா? என ஏங்கினார்கள். அப்போது அவர்களின் ஏக்கத்தை இறைவன் போக்கி இத்தகைய இரவை சன்மானமாக வழங்கினான்.

    'நபி ஜகரிய்யா, நபி ஹிஸ்கீல், நபி அய்யூப், நபி யூஷஃபின்நூன் ஆகிய நான்கு நபிமார் களும் 80 ஆண்டுகள் இறைவணக்கம் புரிந்தார்கள். கண் இமைக்கும் நேரம் கூட இறைவனுக்கு மாறு செய்யவில்லை' என நபி (ஸல்) கூறியபோது, நபித்தோழர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இறைவன் அருளிய இறை வசனத்தை கொண்டு வந்து ஒதிக் காட்டுவார்கள்.

    'மேலும், கண்ணியமிக்க இரவு என்ன என்பதை' உமக்கு அறிவித்தது எது? கண்ணிய மிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (திருக்குர்ஆன் 97:2,3)

    நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினரின் ஆயுட்காலம் முந்தைய சமுதாயத்தினரை விட மிகவும் குறைவு. அவர்களைப் போன்று ஆயுள் முழுவதும் நம்மால் வணங்க இயலாது. நமது இயலாமையை போக்கத்தான் இறை வன் இத்தகைய இரவை ரமலானின் இறுதிப்பத்தில் அமைத்திருக்கின்றான்.

    அந்த இரவை ஆயுளில் ஒரு தடவை அடைந்தாலே போதும். ஆயுள் முழுவதும் அடைந்தால் அதன் நன்மைகளை வார்த்தையால் வர்ணிக்க இயலாது.

    'எவர் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுட னும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குபவரின் முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) கூறினார் கள்'. (நூல்: புகாரி)

    Next Story
    ×