என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை நடக்கிறது
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை நடக்கிறது

    • சிவராத்திரிவிழாவையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம் போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    அதன் பிறகு மகா சிவராத்திரிவிழாவை யொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜையும், 12.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், 1.30 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    மீண்டும் அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×