search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பட்டு வஸ்திரம் பூஜிப்பு
    X

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பட்டு வஸ்திரம் பூஜிப்பு

    • அயோத்தி கும்பாபிஷேக விழா நேற்று விமர்சியாக நடந்தது.
    • ராமர் சிலைக்கு முன்பாக பீடத்தில் சமர்ப்பித்து பூஜை செய்யப்பட்டது.

    திருச்சி:

    அயோத்தி கும்பாபிஷேக விழா நேற்று விமர்சியாக நடந்தது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ராமர் தொடர்பான கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். அந்த வகையில் ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை கடந்த 20-ந் தேதி நேரில் தரிசனம் செய்தார்.

    அப்போது அயோத்தி ராமருக்கு ரங்கநாதருக்கு சாத்தப்பட்ட பட்டு வேஷ்டிகள், தாயாரின் திருப்பாவாடை, திருமஞ்சன கைலி போன்ற பகுமானங்கள் பட்டர்கள் சார்பில் பிரதமரிடம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை அயோத்தியில் பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் நடந்த சிறப்பு பூஜையின் போது பிரதமரிடம் வழங்கப்பட்ட ரங்கநாதருக்கு சாற்றிய பட்டு வஸ்திரம் பால ராமர் சிலைக்கு முன்பாக பீடத்தில் சமர்ப்பித்து பூஜை செய்யப்பட்டது.

    இந்த புகைப்படங்களை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கநாதர் பக்தர்கள், பொதுமக்கள், சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலராமர் சிலைக்கு மேலே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் போன்று பள்ளி கொண்ட பெருமாள் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×