என் மலர்tooltip icon

    வழிபாடு

    மரங்கள் வழிபாட்டில் இவ்வளவு அதிர்ஷ்டமா?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மரங்கள் வழிபாட்டில் இவ்வளவு அதிர்ஷ்டமா?

    • மரங்கள் தெய்வீகத் தன்மைகளை கொண்டவை.
    • மர வழிபாடு என்பது காலம் காலமாக இருந்துள்ளது.

    மர வழிபாடு என்பது காலம் காலமாக இருந்துள்ளது. முன் ஒரு காலத்தில் மர வழிபாட்டின் தத்துவம் என்னவென்றே தெரியாமல் இருந்த மக்கள் பின்னாட்களில் குருமார்களும், பெரியோர்களும் செய்து வந்திருந்த போதனைகளினால் ஈர்க்கப்பட்டு பசுமையான மரங்களில் தெய்வங்கள் குடிகொண்டுள்ள தாக நம்பி மர வழிபாட்டை கடைப்பிடித்து வந்தார்கள்.

    அதன் இன்னொரு முக்கியமான காரணம் முன்காலத்தில் நாட்டுப்புறங்களில் இருந்த ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் மரங்களின் அடியில் அமைந்து இருந்ததினால் மரங்கள் தெய்வீகத் தன்மைகளை கொண்டவையாக உள்ளன என்பதாக மக்கள் நம்பினார்கள். மர வழிபாடு காலப்போக்கில் இயற்கை வழிபாடு என்பதாக கருதப்பட்டது.

    மகிழமரம்

    இதை ஞான மரம் என்று புகழ்வார்கள். வியாழக்கிழமை தோறும் இந்த மரத்தை குருவாக எண்ணி பூஜை செய்து வருவோருக்கு அறிவுக்கூர்மை கிடைக்கும்.

    கொன்றை மரம்

    இந்த மரத்தை பிரணவ மரம் என்று சொல்வார்கள். இந்த மரத்தை முருகரை மனதில் நினைத்து செவ்வாய், சஷ்டி காலங்களில் பூஜை செய்து வணங்கிட துஷ்ட சக்திகள் நம்மிடம் அண்டாது.

    குறுந்த மரம்

    வாஸ்து பரிகாரமாகிய இந்த மரத்தை வாஸ்து குறைபாடு உள்ள வீட்டின் தோட்டத்தில் வளர்க்க வேண்டும்.

    வெள்ளை மந்தாரை

    இந்த மரத்தை பூஜை செய்து வருவோருக்கு நினைத்ததை கொடுக்கும் தன்மை கொண்டது.

    சம்தானக மரம்

    இது நந்தி விருட்சம். இந்த மரத்தை வளர்த்து பூஜித்து வந்தால் பிள்ளைகள் நல்லவர்களாக வளர்ந்து உயர்ந்த நிலையை அடைவார்கள்.

    பும்சிக மரம்

    சந்தான பாக்கியத்தை தரக்கூடிய இந்த விஷேச தெய்வ விருட்சத்தை பூஜித்து வந்தால் மலடியும் குழந்தை பெறுவாள்.

    அரிசந்தன மரம்

    இந்த மரத்தை தோட்டத்தில் வளர்ப்பவர்களுக்கு சோதனை நிறைய வந்தாலும், அருகில் வந்ததும் மறைந்துவிடும்.

    பன்னீர்பூ மரம்

    இந்த மரத்தை வீட்டில் வணங்கி வருபவர்களுக்கு வாகன விபத்துகள் தடுக்கப்படும்.

    பெருந்தும்பை

    தனலட்சுமி என்றும் இதற்கு பெயர் உண்டு. இதை வணங்குவதால் பிறரால் நமக்கு வரும் எதிர்ப்புகள், தீய செயல்கள் அகலும்.

    ஜலம்தரா செடி

    தொட்டால் சிணுங்கி செடியை தனலட்சுமி செடி என்று கூறுவார்கள். அந்த செடி வளர்க்கும் இடத்தில் நல்ல செல்வவளம் பெறுகும்.

    குடும்பநல செடி

    தொட்டால் சிணுங்கி செடியும், துளசி செடியும் ஒரே தொட்டியில் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்து வந்தால் கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.

    அகண்ட வில்வம்

    இதற்கு அதிஷ்ட மரம் என்று இன்னொரு பெயர் உண்டு. திங்கள் கிழமை தோறும் பூஜை செய்து வந்தால் வீடு அதிஷ்டகரமாக விளங்கும். சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.

    விடத்தலை மரம்

    ஆரோக்கியமாக வாழவும், நோய்கள் நீங்கி நிம்மதி பிறக்கவும் இம்மரத்தை பூஜை செய்து வர வேண்டும். இந்த மரத்தை சனீஸ்வர மரம் என்று கூறுவர். சனீஸ்வரனின் 71/2 காலம் மற்றும் அர்த்தாஷ்டம சனி காலத்தில் இந்த விருட்ச பூஜை பலன் தரும்.

    திருமண மரம்

    பின்னை மரம் தான் திருமண பேற்றைத்தரும் தெய்வ விருட்சமாக திகழ்கிறது. திருமணம் தடைபட்டுக்கொண்டே வரும் ஆண், பெண் இருவரும் இந்த மரத்தை பூஜை செய்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

    கதம்ப மரம்

    இந்த மரம் தீய சக்திகளை விரட்டும் சக்தி கொண்டது.

    செல்வ மரம்

    கருநெல்லி மரத்தை செல்வமரம், லட்சுமி மரம் என்று கூறுவர். இந்த மரத்தை வளர்த்து வணங்கி வர செல்வ வளம் பெறுகும்.

    சவுபாக்கிய மரம்

    செண்பக மரத்தை சவுபாக்கிய விருட்சம் என்றும் கூறுவர். இந்த மரத்தை அஷ்டோத்திரம் சொல்லி வழிபட குடும்பத்தில் சவுபாக்கிய நிலை உருவாகும்.

    Next Story
    ×