search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குழந்தை வரம் அருளும் ஆதிஜெகநாதர் கோவில்
    X

    குழந்தை வரம் அருளும் ஆதிஜெகநாதர் கோவில்

    • தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோவிலில் உள்ளது.
    • பிரசாதமாக தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும்.

    கோசலை நாட்டை ஆண்ட தசரச சக்கரவர்த்தி தான் மணம் முடித்த கோசலை மூலம் சாந்தா என்ற மகளை பெற்றெடுத்தார். பின்னர் அந்த மகளை அதே நாட்டு மன்னருக்கு தத்துக்கொடுத்து விட்டார். அதன் பின்னர் சாந்தாவின் கணவரும், முனிவருமான ரிஷ்யசிருங்கர் நடத்திய புத்திர வேள்வியின் மூலமாக தசரதனுக்கு கோசலை, சுமித்திரை மற்றும் கைகேயி ஆகிய மூன்று மனைவிகளுக்கு முறையே ராமன், பரதன், லட்சுமணன் மற்றும் சத்துருக்கணன் ஆகிய 4 பிள்ளைகள் பிறந்தனர்.

    முன்னதாக தசரதன் மகப்பேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60 ஆயிரம் மனைவிகள் இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று மனமுருகி வேண்டினார். அப்போது அவருக்கு காட்சி அளித்த ஆதி ஜெகநாதபெருமாள் ஒரு மந்திரத்தை சொல்ல பாராயணம் செய்யுமாறு அருளினார்.

    பின்பு தசரதன் இத்தலத்தில் நாக பிரதிஷ்டை (அதாவது இப்போது அந்த சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சன்னதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின் புத்ரகமோஷ்டி யாகம் செய்ய பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை, தசரதனுக்கு பெருமாள் உபதேசம் செய்தபின், தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோவிலில் உள்ளது.

    இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோவிலுக்கு வந்து அங்கு தரப்படும் நாகர் சிலைக்கு ஒரு நாள் முழுவதும் கண வனும், மனைவியும் உபவாசம் இருந்து ஜலக்கிரீடை செய்ய வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து விட்டு, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடி நாக பிரதிஷ்டை செய்து வருகிறார்கள். ஏராளமானோர் குழந்தை வரம் பெற்று தம்பதி சமேதராக மீண்டும் கோவிலுக்கு பிள்ளைகளுடன் வந்து சுவாமியை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.

    Next Story
    ×