search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது
    X
    திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது

    திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்கியது

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா வருகின்ற 13- தேதி வரை நடக்கிறது
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா வருகின்ற 13- தேதி வரை நடக்கிறது அதில் நேற்று முதல் 11-ந்தேதி வரை 9 நாட்கள் வசந்த உற்சவமாகவும், 12-ந்தேதி, விசாக விழாவும் நடக்கிறது திருவிழாவின் முதல் நாளான நேற்று மாலையில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கும், சண்முகர் சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத சண்முக பெருமானுக்கும் காப்பு கட்டுதல் நடைபெற்றது.

    மேலும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சுவாமிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதேபோல தினமும் இரவு 7 மணியளவில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 12-ந் தேதி விசாக விழா கொண்டாடப்படுகிறது.விழாவையொட்டி மதுரை மாநகர் மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராம பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக பால்குடம், பன்னீர் குடம், பறவைக் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி என்று பல்வேறு வித விதமான காவடிகள் எடுத்துவந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். அப்போது குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். வருகின்ற 13-ந்தேதி மொட்டையரசு திடலுக்கு சுவாமி புறப்பாடுநடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    Next Story
    ×