என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழா தேரோட்டம்
Byமாலை மலர்20 May 2022 8:32 AM GMT (Updated: 20 May 2022 8:32 AM GMT)
ஆதீன கட்டளை தம்பிரான்கள் முன்னிலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது.
மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 12ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தொடர்ந்து பட்டணப் பிரவேச விழாவை யொட்டி முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.
சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் ஆதீன கட்டளை தம்பிரான்கள் முன்னிலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தருமபுர ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வருகிற 22ந் தேதி புகழ்பெற்ற பட்டணப் பிரவேசமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றர்.
மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 12ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தொடர்ந்து பட்டணப் பிரவேச விழாவை யொட்டி முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கியது.
சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினர். அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் ஆதீன கட்டளை தம்பிரான்கள் முன்னிலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தருமபுர ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், வருகிற 22ந் தேதி புகழ்பெற்ற பட்டணப் பிரவேசமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X