search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாமிதோப்பு அன்பு வனத்தில் நடக்கும் 110 நாள் தவவேள்வி
    X
    சாமிதோப்பு அன்பு வனத்தில் நடக்கும் 110 நாள் தவவேள்வி

    சாமிதோப்பு அன்பு வனத்தில் நடக்கும் 110 நாள் தவவேள்வி

    சாமிதோப்பு அன்புவனத்தில் உள்ள அன்பு பதியில் ஒவ்வொரு வருடமும் வைகாசி முதல் ஆவணி மாதம் வரை 110 நாட்கள் தொடர்ந்து தவவேள்வி நடைபெறுவது வழக்கம்.
    சாமிதோப்பு அன்புவனத்தில் உள்ள அன்பு பதியில் ஒவ்வொரு வருடமும் வைகாசி முதல் ஆவணி மாதம் வரை 110 நாட்கள் தொடர்ந்து தவவேள்வி நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருட தவம் வேள்வி கடந்த 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துவங்கியது. துவக்க நிகழ்ச்சியை முன்னிட்டு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து யுகப்படிப்பும் நடைபெற்றது.

    பின்னர் தவ வேள்வியினை அன்புவன நிறுவனத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பேராசிரியர் தர்மரஜினி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    மும்பை நகர் அய்யா வைகுண்டர் ஐவர் குழு தலைவர் அய்யாவு முன்னிலை வகித்தார். வரலாற்று ஆய்வாளர் ஆண்ட்ரூ மைக்கேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் மகாராஜன், செல்லையா பணிவிடை யாளர் வென்னிமல் உட்பட அய்யாவழி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தவ வேள்வியில் அய்யா வைகுண்டர் வகுத்துத் தந்த மூன்று நீதங்களும் தழைத்து, முப்பத்திரண்டு அறமும் வளர்வதற்கு, அய்யாவழி முறைப்படி 9-ம் ஆண்டிற்கான தவவேள்வி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த தவவேள்வியில் மனிதநேயம், உலக சமாதானம், சீரான வாழ்வு, கல்வி, தொழில், வணிகம், வேளாண்மை, வளர்ச்சி, அரசியல், ஆன்மீகம் மற்றும் சமூகம் காக்கவும் ஒவ்வொரு நாளும் அந்தந்த துறை சார்பில் அதனுடைய அதிகாரிகள் தலைமையில் தவம் வேள்வி நடைபெறுகிறது.

    தமிழக, கேரள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். கல்வி வளர்ச்சி வேண்டுதல் நாளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா இலவசமாக வழங்கப்படுகிறது.
    Next Story
    ×