என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருவண்ணாமலை பவுர்ணமியையொட்டி 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம்
Byமாலை மலர்17 May 2022 3:51 AM GMT (Updated: 17 May 2022 3:51 AM GMT)
கிரிவலம் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் நண்பகல் 12.15 மணி அளவில் தொடங்கி நேற்று காலை 10.20 மணி அளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் பகலில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பகலில் அடித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலைக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு வரை திருவண்ணாமலையில் மிதமான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடையை பிடித்தப்படி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
மழையின் காரணமாக திருவண்ணாமலை நகரில் நேற்று முன்தினம் இரவு குடை விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி வரை லேசான சாரல் மழை பெய்தது. இருப்பினும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
நேற்று காலை வரை பவுர்ணமி நீடித்ததால் 2-வது நாளாக நேற்று பகலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொது மற்றும் கட்டண தரிசனம் வழி கோவிலுக்குள் மட்டுமின்றி சாலை வரை நீண்டு காணப்பட்டது.
பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் நண்பகல் 12.15 மணி அளவில் தொடங்கி நேற்று காலை 10.20 மணி அளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் பகலில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
பகலில் அடித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலைக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு வரை திருவண்ணாமலையில் மிதமான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடையை பிடித்தப்படி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
மழையின் காரணமாக திருவண்ணாமலை நகரில் நேற்று முன்தினம் இரவு குடை விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி வரை லேசான சாரல் மழை பெய்தது. இருப்பினும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
நேற்று காலை வரை பவுர்ணமி நீடித்ததால் 2-வது நாளாக நேற்று பகலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொது மற்றும் கட்டண தரிசனம் வழி கோவிலுக்குள் மட்டுமின்றி சாலை வரை நீண்டு காணப்பட்டது.
பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X