என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடு இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்15 May 2022 2:30 AM GMT (Updated: 14 May 2022 6:40 AM GMT)
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் ராம நாம பிரார்த்தனை இன்று தொடங்குகிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
கோவில்கொடி மரத்துக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசம் உருவாக்கும் பணிகள் சென்னையில் நடந்து வருகிறது. மூலவரின் கடுசர்கரையோக சிலையை முழுமைப்படுத்தும் மருந்துக்கலவைகள் மாத்தூர் மடத்தில் தயாரிக்கப்பட்டு, திருவட்டாருக்கு கொண்டு வரப்படுகிறது. அத்துடன் பெருமாளின் சிலைக்குரிய இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது. சுற்றுப்பகுதியில் விளக்குகள் பொருத்தும் பணி பாதியளவு முடிந்துள்ளது.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபிஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற உள்ளது. 16-ந் தேதி கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜைகள், 17-ந் தேதி அதிகாலையில் கணபதி ஹோமம், மாலையில் பகவதி சேவை, 18-ந் தேதி காலை கணபதி ஹோமம், சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் போன்றவை நடக்கிறது. மேலும் வருகிற 25-ந் தேதி சர்ப்பபலி பூஜை நடைபெறும்.
கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் ராம நாம பிரார்த்தனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 41 நாட்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராம நாம பிரார்த்தனை நடைபெறும்.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டுதல் செய்ய உள்ளனர்.
கோவில்கொடி மரத்துக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசம் உருவாக்கும் பணிகள் சென்னையில் நடந்து வருகிறது. மூலவரின் கடுசர்கரையோக சிலையை முழுமைப்படுத்தும் மருந்துக்கலவைகள் மாத்தூர் மடத்தில் தயாரிக்கப்பட்டு, திருவட்டாருக்கு கொண்டு வரப்படுகிறது. அத்துடன் பெருமாளின் சிலைக்குரிய இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகிறது. சுற்றுப்பகுதியில் விளக்குகள் பொருத்தும் பணி பாதியளவு முடிந்துள்ளது.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபிஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற உள்ளது. 16-ந் தேதி கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜைகள், 17-ந் தேதி அதிகாலையில் கணபதி ஹோமம், மாலையில் பகவதி சேவை, 18-ந் தேதி காலை கணபதி ஹோமம், சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் போன்றவை நடக்கிறது. மேலும் வருகிற 25-ந் தேதி சர்ப்பபலி பூஜை நடைபெறும்.
கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் ராம நாம பிரார்த்தனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 41 நாட்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராம நாம பிரார்த்தனை நடைபெறும்.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டுதல் செய்ய உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X