என் மலர்tooltip icon

    வழிபாடு

    அட்சய திருதியை: இன்று செய்ய வேண்டிய தானங்கள்
    X
    அட்சய திருதியை: இன்று செய்ய வேண்டிய தானங்கள்

    அட்சய திருதியை: இன்று செய்ய வேண்டிய தானங்கள்

    அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. அந்த வகையில் என்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்...
    * தண்ணீர் தானம் செய்தால் செல்வம் சேரும்.

    * பாய், படுக்கை தானம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    * புத்தாடை தானம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும்.

    * குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலை உண்டாகும்.

    * சந்தனம் தானம் செய்தால் விபத்துக்களில் இருந்து தப்பலாம்.

    * தாம்பூலம் தானம் செய்தால் நாட்டை ஆளும் பாக்கியத்தைப் பெறலாம்.

    * தேங்காய் தானம் செய்தால் பித்ருக்களுக்கு நல்லது.

    * தயிர், மோர் தானம் செய்தால் உயர் கல்வி யோகம் கிடைக்கும்.

    * வெள்ளிக்குடத்தில் துளசி, வெற்றிலை கலந்து புனித நீரை தானமாக கொடுத்தால் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யலாம்.

    * செருப்பு தானம் செய்தால் மறைவுக்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கும்.

    * குடைகள் தானம் செய்தால் வாழ்வில் உள்ள தடைகள் அகலும்.

    * கோதுமை தானம் செய்தால் மழை பெய்து சுபீட்சம் உண்டாகும்.

    * உணவு தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும்.

    * பழ வகைகள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

    * ஏழைகளுக்கு தேவையானதை கொடுத்தால் ராஜயோக வாழ்க்கை கிடைக்கும்.

    * ஏழைகளுக்கு போர்வை மற்றும் ஆடைகள் தானம் செய்தால் உடல் நலம் சீராகும். நோய், நொடிகள் வராது.

    * மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைத்து கொடுத்தால் கல்விச் செல்வம் வளரும்.

    * உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்து, அகால மரணம் ஏற்படாது.

    இதையும் படிக்கலாம்....அட்சய திருதியை: இன்று புதிய பொருட்கள் வாங்க உகந்த நேரம்
    Next Story
    ×