
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து கடந்த 1-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மாசிப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்தநிலையில் மாதந்தோறும் அமாவாசை விழா அன்று இரவு வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்திக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) அமாவாசை அன்று வெளிப்பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் நடைபெற உள்ளது. 25 மாதங்களுக்குப் பிறகு வெளியில் உள்ள ஊஞ்சலில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.