
இந்த கோவில் பங்குனித் திருவிழா கடந்த 9-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சாமி பூப்பந்தல் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது.
இதுபோல் தினமும் காலை கணபதி ஹோமம், மற்றும் காலை, மாலை நேரத்தில் சாமி பல்வேறு வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சிகள் நடந்தது.
4-ம் திருவிழா 12-ம் தேதி நடந்தது. அன்று மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த 15-ந்தேதி 7-ம் திருவிழா நடந்தது. அன்று மாலை சமயச் சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு தோல்பாவை கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதனையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று இரவு 9 மணிக்கு சப்தாவர்ணமும், வெள்ளி கருடவாகனத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடக் கிறது. 10-ம் திருவிழா நாளை (18-ந்தேதி) நடக்கிறது.
இதில் முக்கிய நிகழ்ச்சியாக இரவு 11 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.