என் மலர்
வழிபாடு

ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி பவனி
ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி பவனி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவத்தில் 4-வது நாளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து புஷ்கரணிக்குக் கொண்டு வரப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து புஷ்கரணிக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி, 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
புஷ்கரணியில் பவனி வந்த தெப்பத்தின் உள்ளே மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர். புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி, 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
புஷ்கரணியில் பவனி வந்த தெப்பத்தின் உள்ளே மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர். புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
Next Story