என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தடையை கண்டு கொள்ளாமல் திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள்
Byமாலை மலர்16 Feb 2022 7:19 AM GMT
கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை.இதனால் மிகவும் உற்சாகமுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரி வலத்திற்கு புகழ் பெற்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று இரவு 10.30 மணி வரை மாசிமாதபவுர்ணமி காலமாகும். இந்த பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.அவர்கள் வழக்கம்போல் 14 கி.மீ. தூரம் நடந்து சென்று கிரிவலம் வந்தனர்.
கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை.இதனால் மிகவும் உற்சாகமுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட அனைத்து மாவட்டங் களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அனைத்து கடைகளிலும் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் நேற்று இரவு நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டதால் மாட வீதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று இரவு 10.30 மணி வரை மாசிமாதபவுர்ணமி காலமாகும். இந்த பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.அவர்கள் வழக்கம்போல் 14 கி.மீ. தூரம் நடந்து சென்று கிரிவலம் வந்தனர்.
கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை.இதனால் மிகவும் உற்சாகமுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட அனைத்து மாவட்டங் களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அனைத்து கடைகளிலும் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் நேற்று இரவு நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டதால் மாட வீதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X