என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
5 நாட்களுக்கு பிறகு திறப்பு: திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
Byமாலை மலர்19 Jan 2022 9:22 AM GMT (Updated: 19 Jan 2022 9:22 AM GMT)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. பக்தர்கள் ஆர்வமுடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் கடந்த 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதனால் பொங்கல் பண்டிகை காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பவுர்ணமி கிரிவலம் செல்லவும் கடந்த 2 நாட்களாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தினமும் கிரிவலம் சென்று வந்தனர் .போலீசார் தடுத்து நிறுத்திய போதிலும் கிராமங்கள் வழியாக பக்தர்கள் சென்றனர்.
தற்போது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் திருவண்ணாமலை வந்துள்ளனர். அவர்கள் விடுதியில் தங்கி இருந்து ரமணாஸ்ரமம் உள்ளிட்ட பல ஆசிரமங்களுக்கு சென்று வழிபாடுகளை செய்து வருகின்றனர். அவர்கள் தினமும் இருசக்கர வாகனங்களில் கிரிவலம் வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. பக்தர்கள் ஆர்வமுடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று வெளியூர் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் இருந்தனர். காலையில் கூட்டம் குறைவாக இருந்தாலும் நேரம் செல்ல செல்ல அதிகரித்தது.
இதனால் பொங்கல் பண்டிகை காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பவுர்ணமி கிரிவலம் செல்லவும் கடந்த 2 நாட்களாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதனைப் பொருட்படுத்தாமல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தினமும் கிரிவலம் சென்று வந்தனர் .போலீசார் தடுத்து நிறுத்திய போதிலும் கிராமங்கள் வழியாக பக்தர்கள் சென்றனர்.
தற்போது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் திருவண்ணாமலை வந்துள்ளனர். அவர்கள் விடுதியில் தங்கி இருந்து ரமணாஸ்ரமம் உள்ளிட்ட பல ஆசிரமங்களுக்கு சென்று வழிபாடுகளை செய்து வருகின்றனர். அவர்கள் தினமும் இருசக்கர வாகனங்களில் கிரிவலம் வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கடந்த 5 நாட்களுக்கு பிறகு இன்று பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. பக்தர்கள் ஆர்வமுடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று வெளியூர் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
உள்ளூர் பக்தர்கள் அதிகளவில் இருந்தனர். காலையில் கூட்டம் குறைவாக இருந்தாலும் நேரம் செல்ல செல்ல அதிகரித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X