என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
Byமாலை மலர்12 Jan 2022 9:03 AM GMT (Updated: 12 Jan 2022 9:03 AM GMT)
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெறுகிறது.
இதையடுத்து வைகுண்ட வாசல் வழியாக காலை 7 மணிக்கு வி.ஐ.பி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து காலை, மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
இதையடுத்து காலை 9 மணிக்கு சாதாரண பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி நாளை முதல் வரும் 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரூ.300 கட்டண தரிசனத்தில் 12 ஆயிரம் பக்தர்கள், இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேர் என மொத்தம் 27 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்கள், தோமாலை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட உற்சவ டிக்கெட் பெற்றவர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
திருப்பதியில் நேற்று 23,744 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,017 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இதையடுத்து வைகுண்ட வாசல் வழியாக காலை 7 மணிக்கு வி.ஐ.பி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து காலை, மாலை 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
இதையடுத்து காலை 9 மணிக்கு சாதாரண பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சொர்க்கவாசல் திறப்பையொட்டி நாளை முதல் வரும் 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு ரூ.300 கட்டண தரிசனத்தில் 12 ஆயிரம் பக்தர்கள், இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்கள், உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேர் என மொத்தம் 27 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதேபோல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்கள், தோமாலை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட உற்சவ டிக்கெட் பெற்றவர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
திருப்பதியில் நேற்று 23,744 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,017 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X