search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவண்ணாமலையில் இன்று காலை கிரிவலம் வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    திருவண்ணாமலையில் இன்று காலை கிரிவலம் வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    திருவண்ணாமலையில் தடையை மீறி பக்தர்கள் கிரிவலம்

    வழக்கமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமே கிரிவலம் செல்கின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவுர்ணமியில் இன்றும், நாளையும் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதனை மீறி பக்தர்கள் அதிகாலை முதல் இன்று கிரிவலம் வருகின்றனர். கிரிவலப்பாதையில் போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்த போதிலும் மாற்று வழியில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகளவில் வருகை தரும் பக்தர்கள் கிரிவலம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

    வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்கின்றனர். போலீசார் முயன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க முடியவில்லை.

    வழக்கமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமே கிரிவலம் செல்கின்றனர். சில பக்தர்கள் மாட வீதிகளை வலம் வந்து விட்டு சென்று விடுகின்றனர்.

    பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு ரூ.50 தரிசன கட்டணத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொது தரிசனத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் வருகை காரணமாக திருவண்ணாமலையில் வியாபாரம் களைகட்டியுள்ளது.
    Next Story
    ×