search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருத்தணி கோவிலில் 1 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி
    X
    திருத்தணி கோவிலில் 1 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி

    திருத்தணி கோவிலில் 1 டன் மலர்களால் புஷ்பாஞ்சலி: இன்று திருக்கல்யாணம் நடந்தது

    இன்று காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து தினசரி காவடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி விழா நேற்று மாலை நடைபெற்றது.

    கொரோனா அச்சறுத்தல் காரணமாக லட்சார்ச்சனை ரத்து செய்யப்பட்டது. பக்தர் கள் உட்கார்ந்து தரிசிக்க கோவில் நிர்வாகம் தடை விதித்து இருந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம், வைர கிரீடம், பச்சைக் கல் மரகத மாலை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருத்தணி மா.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் புஷ்பங்கள் அடங்கிய கூடைகளை மலைக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    சுமார் ஒரு டன் எடையுள்ள பல்வேறு வகையான பூக்களால் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நடத்தி தீப ஆராதனை செய்யப்பட்டது.

    இன்று காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×