search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கோவில்
    X
    திருச்செந்தூர் கோவில்

    இன்றும், நாளையும் திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம்: போலீசார் வேண்டுகோள்

    சூரசம்ஹாரம் நடைபெறும் இன்றும்(செவ்வாய்க்கிழமை), திருக்கல்யாணம் நடைபெறும் நாளையும் (புதன்கிழமை) பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில், சூரசம்ஹாரம் நடைபெறும் இன்றும்(செவ்வாய்க்கிழமை), திருக்கல்யாணம் நடைபெறும் நாளையும் (புதன்கிழமை) பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை. ஆகவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வரவேண்டாம்.

    கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி, யூடியூப் இணைய தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
    Next Story
    ×