என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்5 Nov 2021 4:04 AM GMT (Updated: 5 Nov 2021 4:04 AM GMT)
கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி யாகசாலை பூஜைக்கு புறப்படுதல் நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலை பூஜை ஆரம்பம், உச்சிகால அபிஷேகம், யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஏனினும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்காக ஆன்லைன் மூலமாக 5 ஆயிரம் பக்தர்கள், நேரில் வருபவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி தங்க சப்பரத்தில் கோவிலை சுற்றி திருவீதி உலா வந்தார்.
2-ம் திருவிழாவான இன்று முதல் 5-ம் திருவிழாவான 8-ந்தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மதியம் விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 10-ந்தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி யாகசாலை பூஜைக்கு புறப்படுதல் நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலை பூஜை ஆரம்பம், உச்சிகால அபிஷேகம், யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஏனினும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்காக ஆன்லைன் மூலமாக 5 ஆயிரம் பக்தர்கள், நேரில் வருபவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாலையில் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி தங்க சப்பரத்தில் கோவிலை சுற்றி திருவீதி உலா வந்தார்.
2-ம் திருவிழாவான இன்று முதல் 5-ம் திருவிழாவான 8-ந்தேதி வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மதியம் விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 10-ந்தேதி இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X