search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கூஷ்மாண்டதேவி அலங்காரத்தில் காட்சி
    X
    ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கூஷ்மாண்டதேவி அலங்காரத்தில் காட்சி

    ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கூஷ்மாண்டதேவி அலங்காரத்தில் காட்சி

    ஸ்ரீகாளஹஸ்தி கோவில் நவராத்திரி விழாவில் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரில் பொம்மை கொலு அருகில் கூஷ்மாண்டதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரில் பொம்மை கொலு அருகில் கூஷ்மாண்டதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதைத்தொடர்ந்து மாலை 7.30 மணியளவில் உற்சவர் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் கூஷ்மாண்டதேவி அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள பாலஞானாம்பாள் சன்னதி வரை ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்கு தாயாருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதில் கோவில் நிர்வாக அதிகாரி ெபத்தி.ராஜு மற்றும் வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×