search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தங்கி சேவை அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளினார்.
    X
    முத்தங்கி சேவை அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளினார்.

    ராமேசுவரம் கோவில் ஆடி திருவிழாவில் இன்று அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி

    ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவும், பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றன.
    ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் அம்பாள் பல வாகனங்களில் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன. அதுபோல் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவும், பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காகவும் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆடித்திருவிழாவின் 10-வது நாள் மற்றும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைதொடர்ந்து சிவதீர்த்தத்தில் அம்பாள் தீர்த்தமாடும் நிகழ்ச்சி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றன.

    திருவிழாவின் 11-வது நாள் நிகழ்ச்சியாக இன்று(புதன்கிழமை) பகல் 3 மணி முதல் 4 மணிக்குள் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் வைத்து நடைபெறுகின்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(வியாழக்கிழமை) இரவு 7 முதல் 8 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. வழக்கமாக ஆடி திருக்கல்யாண திருவிழாவின் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராம தீர்த்தம் பகுதியில் அமைந்துள்ள தபசு மண்டபத்தில் வைத்துதான் சாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக தபசு மண்டகபடியில் மாலை மாற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக கோவிலுக்குள்ளேயே இன்று நடத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.அதுபோல் இன்று நடைபெறும் மாலை மாற்றுதல் மற்றும் நாளை நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியை காணவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×