
சுவாமி-அம்பாள் தேர்களை வடம் பிடித்து கோவில் இணைஆணையர் (பொறுப்பு) தனபால், தக்கார் ராஜா குமரன் சேதுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னே செல்ல தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீற்றிருந்த பெரிய தேர்கள் இழுக்கப்பட்டன.
4 ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்கள் பகல் 11.15 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தன.
மாலை 5 மணி அளவில் சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து திட்டக்குடி பகுதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் 10-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாசி மாத அமாவாசையையொட்டி பகல் 1 மணிக்கு கோவிலில் இருந்து சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.