search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரத வீதிகளில் வலம் வந்த சுவாமி-அம்பாள் தேர்களை படத்தில் காணலாம்.
    X
    ரத வீதிகளில் வலம் வந்த சுவாமி-அம்பாள் தேர்களை படத்தில் காணலாம்.

    ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்கள்

    மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி, ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர்கள் வலம் வந்தன. இன்று அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

    சுவாமி-அம்பாள் தேர்களை வடம் பிடித்து கோவில் இணைஆணையர் (பொறுப்பு) தனபால், தக்கார் ராஜா குமரன் சேதுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னே செல்ல தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீற்றிருந்த பெரிய தேர்கள் இழுக்கப்பட்டன.

    4 ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்கள் பகல் 11.15 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தன.

    மாலை 5 மணி அளவில் சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து திட்டக்குடி பகுதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் 10-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாசி மாத அமாவாசையையொட்டி பகல் 1 மணிக்கு கோவிலில் இருந்து சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    Next Story
    ×