என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தேரில் பவனி: இரவு தெப்போற்சவம் நடந்தது
Byமாலை மலர்13 March 2021 4:06 AM GMT (Updated: 13 March 2021 4:06 AM GMT)
மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளாள நேற்று தேரோட்டம் நடந்தது. தேர்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிைக தாயார் எழுந்தருளி பவனி வந்தனா்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் லிங்கோத்பவ தரிசனம் நடந்தது. மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தேரோட்டம் நடந்தது.
ஒரு தேரில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதேபோல் மற்றொரு தேரில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மட்டும் தனியாக எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சிவன் கோவில் அருகில் நெப்பல மண்டபத்தில் உற்சவர்களுக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை ெசய்தனர்.
தேரோட்டத்தை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜூ ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள், சாரண-சாரணியர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ெவள்ளத்தில் தேர்கள் பவனி வந்தன.
தேர்களுக்கு முன்னால் கோலாட்டம், மயிலாட்டம், ெசண்டை மேளம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் சிவன் கோவில் அருகில் உள்ள நாரதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது. தெப்பத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஒரு தேரில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதேபோல் மற்றொரு தேரில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மட்டும் தனியாக எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சிவன் கோவில் அருகில் நெப்பல மண்டபத்தில் உற்சவர்களுக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை ெசய்தனர்.
தேரோட்டத்தை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜூ ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள், சாரண-சாரணியர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ெவள்ளத்தில் தேர்கள் பவனி வந்தன.
தேர்களுக்கு முன்னால் கோலாட்டம், மயிலாட்டம், ெசண்டை மேளம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் சிவன் கோவில் அருகில் உள்ள நாரதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது. தெப்பத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X