
இதைத் தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவில் முன்மண்டபத்தில் மாலை 6 மணிக்கு மாதர் சங்கத்தினரால் மாக்கோலம், பூக்கோலமிடப்பட்டது. மேலும் பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர் கோட்டை மாரியம்மனுக்கு சந்தனகாப்பு, பூஜை, நைவேத்தியம் நடத்தப்பட்டது. மேலும் கோவில் கலையரங்கில் நண்பர்கள் இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இதில் உறவின்முறை தலைவர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் பூமண்டலம், உதவி செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாதர் சங்கத்தினர் செய்து இருந்தனர்.