search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டை மாரியம்மன்
    X
    கோட்டை மாரியம்மன்

    கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா: அம்மன் நாகல்நகர் புறப்பாடு மாற்றம்

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அம்மனின் நாகல்நகர் புறப்பாடு நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு அம்மனின் நாகல்நகர் புறப்பாடு நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறும்போது, கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி நாகல்நகர் பகுதிகளில் திருக்கண் மண்டகப்படியில் கலந்துகொண்டு இரவு தங்கல் நடைபெறுவது வழக்கம். சுமார் 2 நாட்கள் நடைபெறும் இந்த புறப்பாடு இந்த ஆண்டு ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு அம்மன் சகடை வாகனத்தில் புறப்பாடாகி நாகல்நகர் சந்தைப்பேட்டை காளியம்மன் கோவிலை வந்தடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று மாலையில் புறப்பாடாகி கோவிலை வந்தடையும் என்றனர்.
    Next Story
    ×