search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி சப்பரத்தில் காந்திமதி அம்பாள் வீதி உலா
    X

    நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி சப்பரத்தில் காந்திமதி அம்பாள் வீதி உலா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 6-ம் நாள் நேற்று காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 24-ந் தேதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் நெல்லையப்பர் சுவாமி, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்து வருகிறது. விழாவின் 6-ம் நாள் நேற்று காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    காலை அம்பாள் வெள்ளி சப்பரத்தில் உள் பிரகாரத்தில் வீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு அம்பாள் வெளி பிரகாரத்தில் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வருதல் நடந்தது. டவுன் நான்கு ரதவீதியிலும் சுற்றி வந்து கோவிலை அடைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். 
    Next Story
    ×