search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    புதன் பகவான்
    X
    புதன் பகவான்

    புதன் கிழமை சொல்ல வேண்டிய மந்திரங்கள்

    கல்வி, ஞானம், தனம் உள்ளிட்டவற்றை பெருகச் செய்யும் கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் கிழமைகளில் பின்வரும் மந்திரங்களை சொல்லி வந்தால் புதன் பகவானின் அருளையும் ஆசியையும் பெறலாம்.
    ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் அவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் கல்வியாளர்களாகவும் இறை பக்தி மிக்கவர்களாகவும் இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்கிறது. குடும்பத்தில் அமைதியை அருள்கிறது. வியாபாரத்தில் நஷ்டத்தை போக்கி, லாபம் கிடைக்க துணை செய்கிறது. கல்வி, ஞானம், தனம் உள்ளிட்டவற்றை பெருகச் செய்யும் கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் கிழமைகளில் பின்வரும் மந்திரங்களை சொல்லி வந்தால் புதன் பகவானின் அருளையும் ஆசியையும் பெறலாம்.

    புதன் மந்திரம்:

    ப்ரிங்கு கலிகா ச்யாம்
    ருபேணா ப்ரதிமம் புதம்
    ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
    தம் புதம் ப்ரணமாம் யஹம்

    புதன் காயத்ரி மந்திரம் :

    ஓம்  கஜத்துவ ஜாய  வித்மஹே
    சுக ஹஸ்தாய தீமஹி
    தன்னோ புத : பிரசோதயாத்

    புதன் கிழமைகளில் பெருமாளை வணங்கிவிட்டு, நவகிரகங்களை வழிபட்டுவிட்டு பிறகு புதன் பகவானை நோக்கி வழிபட வேண்டும். காலையில் குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி, பெருமாளை வணங்கிவிட்டு அதைத் தொடர்ந்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். பிறகு புதன் கிரகத்துக்குரிய மந்திரம், காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும். பச்சைப் பயறை வேகவைத்து பசுக்களுக்கு அளிப்பது நல்லது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் புதனின் அனுக்கிரகங்களைப் பெறலாம்.

    இந்த பாடலை பாடி புதன் அருளைப் பெற உங்க எல்லோருக்காகவும் பிராத்திக்கிறேன். புதன் கிழமை அன்று நாராயணணை வழிபட்டு பின்னர் நவக்கிரகங்களை வணங்கி, பின் புதன் பகவான் முன் நின்று வழிபட வேண்டும். இப்படிச் செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம். இந்த மந்திரங்கள் கெட்ட சக்தியை விரட்டும் ஆற்றல் கொண்டது.

    பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி ,இஷ்ட தெய்வத்தை வணங்க, பெருமாளை வழிபடவும். புதன்கிழமை பச்சை பயறு வேக வைத்துப் பசு மாட்டுக்குக் கொடுக்கலாம். அல்லது புதன் ஓரைகளில் வீட்டில் விளக்கேற்றி புதன் பகவானை மனதார வேண்டி வந்தால் பலன் கிடைக்கும்.
    Next Story
    ×