என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் பெறலாம்.
    வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
    தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    அதஸு புஷ்பஸங்காசம் ஹாரநூபுர சோபிதம்
    ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்த்ர நிபாநநம்
    விலஸத் குண்டலதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம்
    பர்ஹி பிஞ்சாவசூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீ மூத ஸந்நிபம்
    யாதவானாம் சிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    ருக்மிணீ கேலிசம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம்
    அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம்!
    ஸ்ரீநிகேதம் மஹேஸ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வந்மாலா விராஜிதம்
    சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

    க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
    கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி
    துர்க்கா தேவியின் சக்தி வாய்ந்த ஸ்ரீ துர்கா ஆபதுத்தாராஷ்டகம் சொல்லி வந்தால் ஆபத்துகள் வராமல் தப்பிக்கலாம்.
    நமஸ்தே சரண்யே சிவே ஸானுகம்பே
    நமஸ்தே ஜகத்வ்யாபிகே விச்வரூபே
    நமஸ்தே ஜகத்வந்த்ய - பாதாரவிந்தே
    நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

    நமஸ்தேஜகத்சிந்த்யமானஸ்வரூபே
    நமஸ்தே மஹாயோகினி ஞானரூபே
    நமஸ்தே நமஸ்தே ஸதானந்தரூபே
    நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

    அநாதஸ்ய தீனஸ்ய த்ருஷ்ணாதுரஸ்ய
    பயார்த்தஸ்ய பீதஸ்ய பத்தஸ்ய ஜந்தோ:
    த்வமேகா கதிர்தேவி நிஸ்தாரகர்த்ரீ
    நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

    அரண்யே ரணே தாருணே சத்ருமத்யே
    (அ)நலே ஸாகரே ப்ராந்தரே ராஜகேஹே
    த்வமேகா கதிர்தேவி நிஸ்தார நௌகா
    நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

    அபாரே மஹாதுஸ்தரே (அ)த்யந்தகோரே
    விபத்ஸாகரே மஜ்ஜதாம் தேஹபாஜாம்
    த்வமேகா கதிர்தேவி நிஸ்தாரஹேதுர்
    நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

    நம சண்டிகே சண்டதுர்த்தண்ட லீலா
    ஸமுத்கண்டிதா கண்டிதாசேஷ சத்ரோ
    த்வமேகா கதிர்தேவி நிஸ்தாரபீஜம்
    நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

    த்வமேவாக பாவாத்ருதா ஸத்யவாதிந்ய
    ஜாதாஜிதா க்ரோதனாத் க்ரோதநிஷ்டா
    இடாபிங்களா த்வம் ஸூஷூம்னா ச நாடீ
    நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

    நமோ தேவி துர்க்கே சிவே பீமநாதே
    ஸரஸ்வத் யருந்தத் யமோக ஸ்வரூபே
    விபூதி: சசீ காலராத்ரிஸ்ஸதிஸ்த்வம்
    நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

    சரணமஸி ஸூராணாம் ஸித்த வித்யாதராணாம்
    முனி மனுஜ பசூநாம் தஸ்யுபிஸ்த்ராஸினாம்
    ந்ருபதிக்ருஹகதானாம் வ்யாதிபி: பீடிதானாம்
    த்வமஸி சரணமேகா தேவி துர்க்கே ப்ரஸீத

    இதம் ஸ்தோத்ரம் மயா ப்ரோக்த மாபதுத்தாரஹேதுகம்
    த்ரிஸந்த்யமேகஸந்த்யம் வா படனாத் கோரஸங்கடாத்
    முச்யதே நாத்ர ஸந்தேஹோ புவி ஸ்வர்க்கே ரஸாதலே
    ஸ்ர்வம் வா ச்லோகமேகம் வா ய: படேத் பக்திமான் ஸதா

    ஸஸர்வம் துஷ்க்ருதம் த்யக்த்வா ப்ராப்னோதி பரமம் பதம்
    படனாதஸ்ய தேவேசி கிம் ந ஸித்யதி பூதலே

    ஸ்தவராஜமிதம் தேவி ஸம்க்ஷபாத்கதிதம் மயா 
    செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும் ஒருவர்.
    ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா

    – என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.

    ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி
    ஹனுமதே, லம்லம்லம்லம்
    கைல ஸம்பத்கராயஸ்வாஹா.

    – என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது அரச மரத்தடியில் அல்லது சீதாராமர் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.
    ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு சொல்ல வேண்டிய தியான ஸ்லோகம் இது.
    மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |
    மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
    அத்யஸ்த ஊர்த்வ கரயோ : சுப சங்க சக்ரே |
    வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||

    பொருள்: மாலை, கமண்டலம், உடுக்கை, ஈட்டி, சங்கு, சக்கரம் இவற்றைக் தம் ஆறு கரங்களில் தாங்கியவரும் அத்ரி மகரிஷியின் மகனுமான ஸ்ரீ தத்தாத்ரேயரே தியானிக்கிறேன்.
    ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
    1. விதேஹி தேவி கல்யாணம்
    விதேஹி விபுலாம் ச்ரியம்
    ரூபம் தேஹி ஜயம் தேஹி
    யசோ தேஹி த்வி÷ஷா ஜஹி.

    2. பத்னீம் மனோரமாம் தேஹி
    மானோவ்ருத்தனு ஸாரீனீம்
    தாரினீம் துர்கஸம்ஸார
    ஸாகரஸய குலோத்பவாம்.

    3. விதேஹி தேவி கல்யாணம்
    விதேஹி விபுலாம் ச்ரியம்
    ரூபம் தேஹி ஜயம் தேஹி
    யசோதேஹி த்விஷா ஜஹி
    சிவனுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி ஆண்ட குருமணி தன் தாள்வாழ்க
    ஆகமம் ஆகிநின்று, அண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன், இறைவன் அடிவாழ்க

    வேகம் கெடுத்தாண்ட, வேந்தன் அடிவெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன், பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்தன், பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழும், கோன்கழல்கள் வெல்க
    சிரங்குவிவார் ஓங்குவிக்கும், சீரோன் கழல்வெல்க

    ஈசன் அடிபோற்றி, எந்தை அடிபோற்றி
    நேசன் அடிபோற்றி, சிவன் சேவடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும், மன்னன் அடிபோற்றி
    சீரார் பெருந்துறை, நம் தேவன் அடிபோற்றி

    ஆராத இன்பம், அருளும் மலைபோற்றி
    சிவன் அவன் என்சிந்தையுள், நின்ற அதனால்
    அவன் அருளாலே, அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
    முந்தை வினை முழுதும், ஓய உரைப்பன்யான்

    கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி
    விண்நிறைந்து மண்நிறைந்து, மிக்காய், விளங்கொளியாய்
    எண்இறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன்

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
    செல்லா நின்ற, இத்தாவர சங்கமந்துள்

    எல்லாப் பிறப்பும், பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள், கண்டுஇன்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

    வெய்யாய் தணியாய், இயமானன் ஆம்விமலா
    பொய்யாயின எல்லாம், போய் அகல வந்தருளி
    மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

    ஆக்கம், அளவிறுதி, இல்லாய், அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய, நின்ற மறையோனே

    கறந்தபால் கன்னலொடு, நெய் கலந்தாற்போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள், தேன்ஊறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும், எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான், வல்வினையேன் தன்னை

    மறைந்திட மூடிய, மாய இருளை
    அறம்பாவம் என்னும், அருங்கயிற்றால் கட்டிப்
    புறந்தோல்போர்த் தெங்கும், புழுஅழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது, வாயில் குடிலை
    மலங்கப் புலனைந்தும், வஞ்சனையைச் செய்ய

    விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
    கலந்தஅன்பு ஆகிக், கசிந்துள் உருகும்
    நலந்தான் இலாத, சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க், கிடந்த அடியேற்குத்

    தாயிற் சிறந்த, தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார், அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப், பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சங்கெடப்

    பேராது நின்ற, பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே, அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து, ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும், இல்லானே உள்ளானே

    அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாம்
    சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

    நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்உணர்வே
    போக்கும் வரவும், புணர்வும்இலாப் புண்ணியனே
    காக்கும் எம்காவலனே, காண்பரிய பேர்ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே, அத்தா மிக்காய்நின்ற
    தோற்றச் சுடர்ஒளியாய்ச், சொல்லாத நுண்உணர்வாய்

    மாற்றமாம் வையகத்தின், வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்
    ஊற்றான உண்ணார், அமுதே உடையானே
    வேற்று விகார, விடக்குடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா, அரனேயோ என்றென்று

    போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்யானார்
    மீட்டிங்கு வந்து, வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக், கட்டழிக்க வல்லானே
    நள்இருளில் நட்டம், பயின்றாடும் நாதனே
    தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே

    அல்லல் பிறவி, அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச், சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின், பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின், உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.
    உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.
    அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.

    சனி துதி

    சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
    மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
    சச்சரவின்றி சனீஸ்வரத் தேவா
    இச்செகம் வாழ இன்னருள் தா! தா!
    முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலானோர்கள்
    மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமை அல்லால்வே றுண்டோ
    கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
    சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.
    சகலரும் துதித்திடும் சனியே போற்றி
    புகலரும் துயரம் துடைப்பாய் போற்றி
    நிகரில்லாப் புகழினைத் தருவாய் போற்றி
    செகமெலாம் நலம் பெற அருள்வாய் போற்றி!

    செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாக இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம்.
    அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பிறந்ததேதி அல்லது கிழமையில் செய்வது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.

    செவ்வாய் துதி

    சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
    குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
    மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
    அங்காரகனே அவதிகள் நீக்கு
    வசனம்நல் தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை
    புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
    நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும்
    குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.
    செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
    திவ்விய சுகமதை தருவாய் போற்றி
    கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
    அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.
    குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.
    குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.

    குணமிகு வியாழ குருபகவானே!
    மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
    பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
    கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!
    மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
    நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
    நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
    இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
    வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
    குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
    புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
    உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி!
    ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
    சீலமாய் வாழ சீரருள் புரியும்
    ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
    சூரியா போற்றி சுந்தரா போற்றி
    வீரியா போற்றி வினைகள் களைவாய்
    ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி
    நாளும் நன்றே நல்குவாய் போற்றி
    சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி
    காலம் முழுவதும் அருள்வாய் போற்றி
    செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்க இந்த கேது பகவான் துதியை தினமும் சொல்லி வரலாம்.
    பொன்னையின் உரத்தில் கொண்டோன் புலவர்தம் பொருட்டால் ஆழி
    தன்னையே கடைந்து முன்னத் தண்ணமுது அளிக்கலுற்ற
    பின்னநின் சுரவாலுண்ட பெட்பினிற் சிரம்பெற்றூ உய்ந்தாய்
    என்னையாள் கேதுவே இவ்விரு நிலம் போற்றத்தானே
    நிறைமதி குறைத்த கேதுவே போற்றி
    தலைவிதி எழுத்தை கலைப்பாய் போற்றி
    பிறைபோல் சூழ்நலம் வளர்ப்பாய் போற்றி
    குறையெலாம் மறைந்திட அருள்வாய் போற்றி.

    - கேது பகவானுக்கு உகந்த இந்த துதியை தினமும் சொல்லி வந்தால் காரியத்தடைகள் நீங்கும்.
    பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று ஆயுள் பருவங்களை அளிப்பதும் மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம்.
    த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரஞ்ச த்ரியாயுதம்
    த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்
    காசி க்ஷேத்ர நிவாஸஞ்ச காலபைரவ தர்சனம் கயாப்ரயாகேத்வேத்ருஷ்ட்வா ஏகபில்வம் சிவார்ப்பணம்

    பால்யம், யௌவனம், வயோதிகம் ஆகிய மூன்று ஆயுள் பருவங்களை அளிப்பதும் மூன்று ஜென்ம பாவங்களைப் போக்குவதும் இந்த வில்வ இலையின் தனி குணம். இந்த வில்வத்தை பரமேஸ்வரா, உமக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.

    காசி என்ற மகா புண்ணிய தலத்தில் வசித்தல், அங்குள்ள காலபைரவரை தரிசித்தல், கயை, பிரயாகை போன்ற தலங்களுக்கு சென்று தரிசித்தல் ஆகியவற்றால் எத்தனை புண்ணியம் சேருமோ அவை அத்தனையும் இந்த ஒரே ஒரு வில்வ இலையை ஈசனுக்கு அர்ப்பணிப்பதால், உன்னைச் சேரும்.      
    ×