என் மலர்
இஸ்லாம்
முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான அரபு கோத்திரத்தினர், இப்போருக்குப் பின் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
முஃத்தா என்ற இடத்தில் நடந்த போரில் மூவாயிரம் பேர் கொண்ட முஸ்லிம் வீரர்கள் இரண்டு லட்ச வீரர்களுடன் சரிக்குச் சமமாக நின்று சண்டையிட்டனர்.
தளபதியாகப் பொறுப்பேற்று முன்னேறிய ஸைத்(ரலி) கொடியை ஏந்தி கடுமையாகப் போர் புரிந்து வீரமரணமடைந்தார். அவர் கொல்லப்பட்டதும் அக்கொடியை ஜஅஃபர்(ரலி) பற்றினார். ஜஅஃபர்(ரலி) உடல் முழுக்க ஈட்டிக் காயங்களும் வாட்களின் காயங்களுமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட விழுப்புண்களைப் பெற்று வீர மரணமடைந்தார். அதன் பிறகு கொடியை ஏந்த முன் வந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களையும் எதிரிகள் வெட்டிக் கொன்றனர்.
நபித் தோழர்கள் கொல்லப்பட்ட செய்தி மதீனாவை எட்டுவதற்கு முன்பே, இதையெல்லாம் இறை அறிவிப்பின் மூலமாக அறிந்த நபி(ஸல்) அவர்கள், நேரில் நின்று காண்பதுபோல் மதீனாவில் உள்ளவர்களுக்கு நேர்முக வர்ணணையாக விவரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
ஜஅஃபர்(ரலி) வீட்டுப் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுவதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி வந்தது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்கள் அவ்வாறு அழுவதைத் தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். ஒப்பாரி வைத்து அழுவது காரணமா மய்யித் (சடலம்) வேதனை செய்யப்படுகிறது என்று அறிவித்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) வீரமரணமடைந்து கீழே விழுந்தவுடன் மக்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். கொடியைக் கையில் எடுத்த காலித் (ரலி) எதிரிகளுடன் கடுமையாகப் போராடினார்கள். காலித்(ரலி) அவர்களின் ஒன்பது வாட்கள் உடைந்து, அகலமான யமன் நாட்டு வாள் ஒன்று மட்டும் கையில் உடையாமல் எஞ்சியிருந்தது. காலித்(ரலி) முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார்.
மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று அதிர்ந்தனர். அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது. முஸ்லிம்கள் ஏதோ சதி செய்கின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதையும் விரட்டுவதையும் விட்டுவிட்டு பின்வாங்கி, தங்களது நாடுகளுக்குத் திரும்பி விட்டனர்.
காலித் இப்னு வலீத்(ரலி) தலைமையில் முஸ்லிம்கள் அபார வெற்றி பெற்றனர். பேராற்றல் மிக்க ரோமர்களை முஸ்லிம்கள் வென்றார்கள் என்றால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவி கிடைக்கிறது. அவர்களது தலைவர் உண்மையில் அல்லாஹ்வின் தூதரே என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரிய சான்றென்று, முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான அரபு கோத்திரத்தினர், இப்போருக்குப் பின் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
ஸஹீஹ் புகாரி 4:64:4260,4266, 2:23:1246, 1291,1299, 4:61:3630, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
தளபதியாகப் பொறுப்பேற்று முன்னேறிய ஸைத்(ரலி) கொடியை ஏந்தி கடுமையாகப் போர் புரிந்து வீரமரணமடைந்தார். அவர் கொல்லப்பட்டதும் அக்கொடியை ஜஅஃபர்(ரலி) பற்றினார். ஜஅஃபர்(ரலி) உடல் முழுக்க ஈட்டிக் காயங்களும் வாட்களின் காயங்களுமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட விழுப்புண்களைப் பெற்று வீர மரணமடைந்தார். அதன் பிறகு கொடியை ஏந்த முன் வந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களையும் எதிரிகள் வெட்டிக் கொன்றனர்.
நபித் தோழர்கள் கொல்லப்பட்ட செய்தி மதீனாவை எட்டுவதற்கு முன்பே, இதையெல்லாம் இறை அறிவிப்பின் மூலமாக அறிந்த நபி(ஸல்) அவர்கள், நேரில் நின்று காண்பதுபோல் மதீனாவில் உள்ளவர்களுக்கு நேர்முக வர்ணணையாக விவரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
ஜஅஃபர்(ரலி) வீட்டுப் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுவதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி வந்தது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்கள் அவ்வாறு அழுவதைத் தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். ஒப்பாரி வைத்து அழுவது காரணமா மய்யித் (சடலம்) வேதனை செய்யப்படுகிறது என்று அறிவித்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) வீரமரணமடைந்து கீழே விழுந்தவுடன் மக்கள் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். கொடியைக் கையில் எடுத்த காலித் (ரலி) எதிரிகளுடன் கடுமையாகப் போராடினார்கள். காலித்(ரலி) அவர்களின் ஒன்பது வாட்கள் உடைந்து, அகலமான யமன் நாட்டு வாள் ஒன்று மட்டும் கையில் உடையாமல் எஞ்சியிருந்தது. காலித்(ரலி) முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார்.
மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று அதிர்ந்தனர். அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது. முஸ்லிம்கள் ஏதோ சதி செய்கின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதையும் விரட்டுவதையும் விட்டுவிட்டு பின்வாங்கி, தங்களது நாடுகளுக்குத் திரும்பி விட்டனர்.
காலித் இப்னு வலீத்(ரலி) தலைமையில் முஸ்லிம்கள் அபார வெற்றி பெற்றனர். பேராற்றல் மிக்க ரோமர்களை முஸ்லிம்கள் வென்றார்கள் என்றால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவி கிடைக்கிறது. அவர்களது தலைவர் உண்மையில் அல்லாஹ்வின் தூதரே என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரிய சான்றென்று, முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான அரபு கோத்திரத்தினர், இப்போருக்குப் பின் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
ஸஹீஹ் புகாரி 4:64:4260,4266, 2:23:1246, 1291,1299, 4:61:3630, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!
சிக்கனம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல மாறாக, அல்லாஹ்வின் அருட்கொடைகளை பயன்படுத்துவதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில், பணம் மற்றும் பொருட்களை சேமிப்பதைவிட இயற்கை வளங்களை பாதுகாப்பதும் அவற்றை சிக்கனமாக செலவு செய்வதும் நம் அனைவரின் கடமையாக இருக்கிறது.
தண்ணீர், உணவு பண்டங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தேவைக்கு உட்பட்டே செலவு செய்ய வேண்டும்.
‘மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரலாம்’ என்பது அறிஞர்கள் கருத்தாக உள்ளது.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (திருக்குர்ஆன் 7:31)
தேவைக்கு அதிகமாக செலவு செய்வதும் வீண் விரயமாகவே கருதப்படும். இன்று நாம் பார்க்கிறோம், நம் நாட்டில் திருமணம் போன்ற விசேஷங்களில், அளவுக்கு அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. சாப்பிடும் தட்டுகளில் ஒருபக்கம் வீணாகிறது என்றால், மறுபக்கம், உணவு பரிமாற தயாராகும் பகுதிகளில் உணவுப்பொருட்கள் வீணா கிறது.
உணவு வீணாவதைப்பற்றி எவ்வித கவலையும் யாருக்கும் இல்லை. ஆனால், ஒருவேளை உணவு இன்றி இந்த உலகத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டு கிறது.
உணவு தயாரிப்பவர்களுக்கும், பரிமாறுபவர்களுக்கு உணவு சிக்கனத்தைப்பற்றி நாம் அறிவுறுத்த வேண்டும். அரிசி தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு என இயற்கை வளங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வரு கிறோம். எனவே, நாம் மிக கவனமாக இயற்கை வளங்களை கையாளவேண்டும்.
இஸ்லாம் ஒருபோதும், வீண்விரயத்தை விரும்புவதில்லை. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்துகளை விட்டுச் செல்ல வேண்டும். சொத்து கள் என்பது பணம் மற்றும் வீடுகள் மட்டுமல்ல இயற்கை வளங்களும்தான்.
தன் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை இஸ்லாம் ஆதரிக்கிறது. இதுகுறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘உங்கள் பிள்ளைகளை யாசகர் களாக விட்டுச் செல்வதைவிட செல்வந்தர்களாக விட்டுச் செல்வது மேலானது’ என்றார்கள்.
இது நம் குடும்ப உறுப்பினர்களுக் கானது என்று மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது, வருங்கால சந்ததிகளை எவ்வகையிலும் ஏழைகளாகவோ அல்லது இயற்கை வளங்களை பயன்படுத்த இயலாதவர்களாகவோ ஆக்கிவிடக்கூடாது. இது ஒரு மிகப்பெரிய சமுதாய பொறுப்பாகும்.
எனவே, இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த சந்ததிகளும் பயன்படுத்த விட்டுக்கொடுப்போம்.
அல்லாஹ் தன் திருமறையில், ‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடு கிறான்.
தண்ணீரை சேமிக்காததால் இறைவனின் கோபமும் நம்மீது விழுகிறது. இறைவனை வணங்குவதற்கு முன்பு செய்யப்படும் ‘ஒளு’ (கை, கால்களை தண்ணீரைக்கொண்டு கழுவி சுத்தம் செய்வது) செய்யும்போது கூட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த தோழர் ஒருவர், ‘தண்ணீர் தான் நிறைய இருக் கிறதே’ என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பொங்கி வழியும் நதிக்கரையாயிருந்தாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அருளினார்கள் என்றால், தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை நாம் உணரவேண்டும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்தியபின், ‘இறைவா! நீயே புகழுக்குரியவன், உன்னுடைய தனிப்பெரும் கருணையால்தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய். எங்கள் பாவங் களை நீ மனதில் கொண்டிருப்பாயானால், நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்’ என்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!
கமால்பாஷா, வி.களத்தூர்.
தற்போதைய காலகட்டத்தில், பணம் மற்றும் பொருட்களை சேமிப்பதைவிட இயற்கை வளங்களை பாதுகாப்பதும் அவற்றை சிக்கனமாக செலவு செய்வதும் நம் அனைவரின் கடமையாக இருக்கிறது.
தண்ணீர், உணவு பண்டங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தேவைக்கு உட்பட்டே செலவு செய்ய வேண்டும்.
‘மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக வரலாம்’ என்பது அறிஞர்கள் கருத்தாக உள்ளது.
அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (திருக்குர்ஆன் 7:31)
தேவைக்கு அதிகமாக செலவு செய்வதும் வீண் விரயமாகவே கருதப்படும். இன்று நாம் பார்க்கிறோம், நம் நாட்டில் திருமணம் போன்ற விசேஷங்களில், அளவுக்கு அதிகமான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. சாப்பிடும் தட்டுகளில் ஒருபக்கம் வீணாகிறது என்றால், மறுபக்கம், உணவு பரிமாற தயாராகும் பகுதிகளில் உணவுப்பொருட்கள் வீணா கிறது.
உணவு வீணாவதைப்பற்றி எவ்வித கவலையும் யாருக்கும் இல்லை. ஆனால், ஒருவேளை உணவு இன்றி இந்த உலகத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டு கிறது.
உணவு தயாரிப்பவர்களுக்கும், பரிமாறுபவர்களுக்கு உணவு சிக்கனத்தைப்பற்றி நாம் அறிவுறுத்த வேண்டும். அரிசி தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு என இயற்கை வளங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வரு கிறோம். எனவே, நாம் மிக கவனமாக இயற்கை வளங்களை கையாளவேண்டும்.
இஸ்லாம் ஒருபோதும், வீண்விரயத்தை விரும்புவதில்லை. அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்துகளை விட்டுச் செல்ல வேண்டும். சொத்து கள் என்பது பணம் மற்றும் வீடுகள் மட்டுமல்ல இயற்கை வளங்களும்தான்.
தன் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை இஸ்லாம் ஆதரிக்கிறது. இதுகுறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, ‘உங்கள் பிள்ளைகளை யாசகர் களாக விட்டுச் செல்வதைவிட செல்வந்தர்களாக விட்டுச் செல்வது மேலானது’ என்றார்கள்.
இது நம் குடும்ப உறுப்பினர்களுக் கானது என்று மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது, வருங்கால சந்ததிகளை எவ்வகையிலும் ஏழைகளாகவோ அல்லது இயற்கை வளங்களை பயன்படுத்த இயலாதவர்களாகவோ ஆக்கிவிடக்கூடாது. இது ஒரு மிகப்பெரிய சமுதாய பொறுப்பாகும்.
எனவே, இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த சந்ததிகளும் பயன்படுத்த விட்டுக்கொடுப்போம்.
அல்லாஹ் தன் திருமறையில், ‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடு கிறான்.
தண்ணீரை சேமிக்காததால் இறைவனின் கோபமும் நம்மீது விழுகிறது. இறைவனை வணங்குவதற்கு முன்பு செய்யப்படும் ‘ஒளு’ (கை, கால்களை தண்ணீரைக்கொண்டு கழுவி சுத்தம் செய்வது) செய்யும்போது கூட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த தோழர் ஒருவர், ‘தண்ணீர் தான் நிறைய இருக் கிறதே’ என்று கூற, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பொங்கி வழியும் நதிக்கரையாயிருந்தாலும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அருளினார்கள் என்றால், தண்ணீர் சிக்கனத்தின் அவசியத்தை நாம் உணரவேண்டும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் அருந்தியபின், ‘இறைவா! நீயே புகழுக்குரியவன், உன்னுடைய தனிப்பெரும் கருணையால்தான் நீ எங்களுக்கு சுவையான தண்ணீரை வழங்குகின்றாய். எங்கள் பாவங் களை நீ மனதில் கொண்டிருப்பாயானால், நீ உப்பு கரிக்கும் நீராகவும், கசப்பான நீராகவும் ஆக்கியிருப்பாய்’ என்று பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், இறைவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் நாம் இருப்போம், இறையருளைப்பெறுவோம்!
கமால்பாஷா, வி.களத்தூர்.
அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம்.
புஸ்ராவின் ஆட்சியாளருக்கு இறை அழைப்பு விடுக்க நபி(ஸல்) கடிதம் ஒன்றை எழுதி அதை அல்ஹாரிஸ் இப்னு உமைர் அல்அஸ்தி (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஆனால் அவர் கொல்லப்பட்டார். தூதர்களைக் கொலை செய்வது அரசியல் குற்றங்களில் மிகக் கடுமையானதாகவும் மிகக் கொடியதாகவும் கருதப்பட்டது. தனது தூதர் கொல்லப்பட்டதை, பகிரங்கப் போருக்கான அழைப்பாகக் கருதி நபி(ஸல்) 3000 வீரர்கள் கொண்ட பெரும் படையை அனுப்பி வைத்தார்கள்.
இப்போருக்கு ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நபி(ஸல்) நியமித்தார்கள். 'ஸைத் கொல்லப்பட்டால் ஜஅஃபர் தலைமையேற்கட்டும்! ஜஅஃபர் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமையேற்கட்டும்' என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.
போருக்குச் சென்றவர்களிடம் நபி(ஸல்) கூறிய அறிவுரையாவது “அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில், அல்லாஹ்வின் உதவியுடன் போர் செய்யுங்கள். குழந்தைகளை, பெண்களை, வயது முதிர்ந்தவர்களை, சர்ச்சுகளில் இருக்கும் மதகுருக்களைக் கொல்லாதீர்கள். எந்த மரங்களையும் வெட்டாதீர்கள், கட்டடங்களை இடிக்காதீர்கள்.
எதிரிப்படையில் ரோமர்களுடன் மற்ற கோத்திரத்தினரும் கைக்கோர்த்து இரண்டு லட்சம் பேர்களாகத் திரண்டனர். அதை அறிந்த முஸ்லிம்கள் பீதியடைந்து ‘இது பற்றி நபிகளாருக்கு அறிவிக்கலாமா, ஏதேனும் யோசனையைக் கேட்கலாமா..’ என்ற குழப்பத்திலிருந்த போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) “நாம் எதிரிகளோடு போரிடுவது நமது ஆயுதங்களையும் ஆற்றலையும் கொண்டுதானே தவிர எண்ணிக்கையைக் கொண்டல்ல. அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம். தயங்காமல் புறப்படுவோம், வெற்றி அல்லது வீரமரணத்தை அடைவோம்” என்று வீரமாக உரையாற்றினார்.
எதிரியைக் களம் காண இஸ்லாமியப் படை புறப்பட்டது. இது முஃத்தா என்ற இடத்தில் நிகழ்ந்ததால் இப்போருக்கு முஃத்தா என்று பெயர் வந்தது.
ஸஹீஹ் புகாரி 4:64:4261, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
இப்போருக்கு ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நபி(ஸல்) நியமித்தார்கள். 'ஸைத் கொல்லப்பட்டால் ஜஅஃபர் தலைமையேற்கட்டும்! ஜஅஃபர் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தலைமையேற்கட்டும்' என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.
போருக்குச் சென்றவர்களிடம் நபி(ஸல்) கூறிய அறிவுரையாவது “அல்லாஹ்வை நினைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில், அல்லாஹ்வின் உதவியுடன் போர் செய்யுங்கள். குழந்தைகளை, பெண்களை, வயது முதிர்ந்தவர்களை, சர்ச்சுகளில் இருக்கும் மதகுருக்களைக் கொல்லாதீர்கள். எந்த மரங்களையும் வெட்டாதீர்கள், கட்டடங்களை இடிக்காதீர்கள்.
எதிரிப்படையில் ரோமர்களுடன் மற்ற கோத்திரத்தினரும் கைக்கோர்த்து இரண்டு லட்சம் பேர்களாகத் திரண்டனர். அதை அறிந்த முஸ்லிம்கள் பீதியடைந்து ‘இது பற்றி நபிகளாருக்கு அறிவிக்கலாமா, ஏதேனும் யோசனையைக் கேட்கலாமா..’ என்ற குழப்பத்திலிருந்த போது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) “நாம் எதிரிகளோடு போரிடுவது நமது ஆயுதங்களையும் ஆற்றலையும் கொண்டுதானே தவிர எண்ணிக்கையைக் கொண்டல்ல. அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம். தயங்காமல் புறப்படுவோம், வெற்றி அல்லது வீரமரணத்தை அடைவோம்” என்று வீரமாக உரையாற்றினார்.
எதிரியைக் களம் காண இஸ்லாமியப் படை புறப்பட்டது. இது முஃத்தா என்ற இடத்தில் நிகழ்ந்ததால் இப்போருக்கு முஃத்தா என்று பெயர் வந்தது.
ஸஹீஹ் புகாரி 4:64:4261, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.
தர்மம் பற்றிய முழுமையான ஞானம் பெற்று, செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்ற நல்லடியார்களாக நம்மை இறைவன் ஏற்றுக் கொள்வானாக.
‘தர்மம்’ என்ற சிந்தனையை ஒரு சிறு வட்டத்திற்குள் வைத்தே மனிதன் வாழ்ந்து வருகிறான். ஆனால் அதன் விசாலம் கற் பனைக் கும் எட்டாத அளவு பரவி இருப்பதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பணம் படைத்தவன், இல்லாதவனுக்கு கொடுப்பது தான் ‘தர்மம்’ என்று கருதப்படுகிறது. அறிவு படைத்தவன் பிறருக்கு பாடம் சொல்லி கொடுப்பது, வலிமை படைத்தவன் தன் உறவுகளை தீயவர்களிடம் இருந்து காப்பது, சிரமப்படுபவர் களுக்கு அவர்கள் மீட்சி பெற உதவுவது என்று வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பிறருக்கு உதவுவது கூட தர்மத்தின் ஒரு அங்கம் தான்.
தர்மச்செயல் அல்லது தர்ம சிந்தனை குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இஸ்லாம் தனது இறைமறையில் விரிவாக விளக்கியுள்ளது. அதுபோல அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தர்மம் குறித்தும், தர்மச்செயல் குறித்தும் இவ்வாறு விளக்கியுள்ளார்கள்:
‘உன் சகோதரனை சந்திக்கும் போது முகமன் சொல்லி புன்னகைப்பது கூட தர்மம் தான்’.
‘பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் கிடக்கும் முள்ளை எடுத்து பாதுகாப்பான வழியை ஏற்படுத்துவது அல்லது தடங்கலாய் கிடக்கும் மரங்களை, கற்களை அப்புறப்படுத்துவது, ஏன் அற்ப உயிரான சிறு எறும்பு பாதையில் ஊர்ந்து செல்லுமானால் அதற்கு வழிவிட்டு, அது தன் எல்லையை அடையும் வரை மனிதன் தன்னிடத்தில் தாமதித்து நிற்பதும் தர்மம் தான்’.
அல்லாஹ் விரும்பும் வகையில் நமது தர்மங்கள் அமைய வேண்டும் என்றால் சில வரைமுறைகளையும், கட்டளைகளையும் நிர்ணயம் செய்கின்றான்.
ஒருவன் தர்மம் செய்கின்ற அந்தஸ்தை அடைகிறான் என்றால் அது அல்லாஹ் அவனுக்கு அளித்த பிச்சை. அதுபோன்று, தன் தேவைக்காக ஒருவன் உன்னை நாடி வருகிறான் என்றால் அவன் தாழ்ந்தவன் அல்ல. உனக்கு அல்லாஹ் அருளிய அருட்கொடைகளை கொண்டு நீ ஆற்ற வேண்டிய ‘ஜகாத்’ என்ற கடமையை எளிதாய் நிறைவேற்ற அவன் மூலம் உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை தரும் அவனும் ஒரு வகையில் உனக்கு தர்மம் செய்கிறான்.
இது தொடர்பான உன்னதமான விளக்கத்தை அல்லாஹ் தன் அருள்மறையிலே இவ்வாறு பதிவு செய்திருக்கின்றான்:
அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவதைத் தவிர வேறு எதற்காகவும் நீங்கள் செலவு செய்வதில்லையே! எனவே எந்த நல்ல பொருளை (இறைவழியில்) நீங்கள் செலவு செய்தாலும் அதற்குரிய நிறைவான கூலி உங்களுக்குக் கொடுக்கப்படும்; மேலும் நீங்கள் (ஒரு போதும்) அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (2:272)
‘மனிதன் தர்மம் செய்து விட்டான்’ என்ற ஒற்றை காரணத்திற்காக அவன் பெருமை கொள்ள எந்தவித தகுதியும் இல்லாதவன் என்பதை மிக அழகாக இங்கே எடுத்தியம்புகிறது அருள்மறை. ‘பெருமை கொள்ளாதீர்கள்’ என்று சொன்ன அருள்மறை அடுத்து சொல்கிறது, ‘தானம் செய்வதற்கு நல்லவற்றையே தேர்வு செய்யுங்கள்’ என்று.
“நல்லவற்றையே நீங்கள் தர்மமாக செலவு செய்யுங்கள், அவற்றில் கெட்டவற்றை கொடுக்க நினைக்காதீர்கள். ஏனென்றால் கெட்டுப்போன பொருட்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால் அவற்றை நீங்கள் வெறுப்புடன் கண்களை மூடியவர்களாகவே தவிர வாங்கிக் கொள்ள மாட்டீர்களே. ஆகவே நீங்கள் விரும்பாத பொருட்களை பிறருக்கு தர்மமாக கொடுக்காதீர்கள்”. (திருக்குர் ஆன் 2:267)
தேவை என்று ஒருவன் தன் வாசலில் வந்து விட்டால், நமக்கு தேவையில்லை என்று ஆகி விட்டதையோ அல்லது பழையதையோ, கெட்டுப்போனதையோ கொடுக்க முன் வருவது தான் மனித இயல்பாக இருக்கிறது. ஆனால் அல்லாஹ், ‘அவ்வாறு செய்யாதே’ என்று கட்டளையிட்ட பிறகு அதைச் செய்தால், அதற்கு நன்மை கிடைக்காது. மேலும் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ததால் ஏற்படும் பாவச் சுமையும் அவர் மீது விழுந்து விடும்.
தர்மத்தின் அடுத்த கட்டளையாக அல்லாஹ் இவ்வாறு அறிவிக்கின்றான்:
“அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர் அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர் களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை, அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்”. (2:262)
“கனிவான சொல்லும், (விரும்பாத விஷயங்களை) மன்னித்து விடுவதும், மனம் புண்படச் செய்யும் தானத்தைவிடச் சிறப்புடையனவாகும். மேலும் அல்லாஹ் தன்னிறைவுள்ளவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கின்றான்”. (2:263)
எந்த தர்மத்தைச் செய்தாலும் அதை பிறருக்கு சொல்லி காட்டி, வாங்கியவனின் கண்ணியத்தை குலைப்பதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அதற்குப்பதிலாக, அவரிடம் இனிய சொற் களைச் சொல்லி, அவர்களை சமாதானம் செய்வதையே இறைவன் விரும்புகிறான்.
தர்மம் யாருக்குச் செய்ய வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக விளக்கியுள்ளது. வறுமையின் பிடியில் சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருப்பவர்களில் சிலர், ‘ஏற்பது இகழ்ச்சி’ என்கின்ற ஒரே காரணத்திற்காக தங்கள் வறுமையை வெளிக்காட்டாமல், இறைவனை நம்பி வைராக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அது போன்ற இறைபக்தியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தர்மம் செய்வது, தர்மத்தில் சாலச்சிறந்தது என்கிறது திருக்குர்ஆன். இதுபற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
“அவர்கள் மக்களிடத்தில் வருந்தியும் கேட்கமாட்டார்கள். இத்தகைய ஏழைகளுக்கு நீங்கள் நல்லதில் இருந்து எதைச் செலவு செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன் கறிந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தருவான்”. (2:273)
அடுத்து அல்லாஹ் தர்மத்தின் இரண்டு நியதிகளைச் சொல்லித் தருகிறான். ‘தர்மம் என்பதை வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுங்கள் என்றும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் செய்யுங்கள்’ என்றும் சொல்கிறான்.
“நீங்கள் செய்யும் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே. ஏனெனில் அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டும். ஆயினும் நீங்கள் அதனை மறைத்தே கொடுப்பது, அதுவும் ஏழைகளுக்கு கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அந்த இருவகை தர்மமும் உங்கள் பாவங்களுக்கு பரிகாரம் ஆகும். நீங்கள் செய்யும் வெளிப்படையான மற்றும் மறைவான அனைத்தும் அல்லாஹ் நன்கு அறிவான்”. (2:271)
‘ஒருவன் குதிரை மேல் வந்து தர்மம் கேட்டாலும், அவனிடம் ஏன் எதற்கு என்று விளக்கம் கேட்காமல் கொடுத்துவிடுங்கள். அவர்கள் உள் அந்தரங்களை அல்லாஹ்வே அறிந்தவனாக இருக்கின்றான்’ என்று கண்மணி நாயகமும் நவின்றுள்ளார்கள்.
தர்மம் பற்றிய முழுமையான ஞானம் பெற்று, செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்ற நல்லடியார்களாக நம்மை இறைவன் ஏற்றுக் கொள்வானாக.
-எம்.முஹம்மது யூசுப், உடன்குடி.
பணம் படைத்தவன், இல்லாதவனுக்கு கொடுப்பது தான் ‘தர்மம்’ என்று கருதப்படுகிறது. அறிவு படைத்தவன் பிறருக்கு பாடம் சொல்லி கொடுப்பது, வலிமை படைத்தவன் தன் உறவுகளை தீயவர்களிடம் இருந்து காப்பது, சிரமப்படுபவர் களுக்கு அவர்கள் மீட்சி பெற உதவுவது என்று வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பிறருக்கு உதவுவது கூட தர்மத்தின் ஒரு அங்கம் தான்.
தர்மச்செயல் அல்லது தர்ம சிந்தனை குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இஸ்லாம் தனது இறைமறையில் விரிவாக விளக்கியுள்ளது. அதுபோல அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தர்மம் குறித்தும், தர்மச்செயல் குறித்தும் இவ்வாறு விளக்கியுள்ளார்கள்:
‘உன் சகோதரனை சந்திக்கும் போது முகமன் சொல்லி புன்னகைப்பது கூட தர்மம் தான்’.
‘பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் கிடக்கும் முள்ளை எடுத்து பாதுகாப்பான வழியை ஏற்படுத்துவது அல்லது தடங்கலாய் கிடக்கும் மரங்களை, கற்களை அப்புறப்படுத்துவது, ஏன் அற்ப உயிரான சிறு எறும்பு பாதையில் ஊர்ந்து செல்லுமானால் அதற்கு வழிவிட்டு, அது தன் எல்லையை அடையும் வரை மனிதன் தன்னிடத்தில் தாமதித்து நிற்பதும் தர்மம் தான்’.
அல்லாஹ் விரும்பும் வகையில் நமது தர்மங்கள் அமைய வேண்டும் என்றால் சில வரைமுறைகளையும், கட்டளைகளையும் நிர்ணயம் செய்கின்றான்.
ஒருவன் தர்மம் செய்கின்ற அந்தஸ்தை அடைகிறான் என்றால் அது அல்லாஹ் அவனுக்கு அளித்த பிச்சை. அதுபோன்று, தன் தேவைக்காக ஒருவன் உன்னை நாடி வருகிறான் என்றால் அவன் தாழ்ந்தவன் அல்ல. உனக்கு அல்லாஹ் அருளிய அருட்கொடைகளை கொண்டு நீ ஆற்ற வேண்டிய ‘ஜகாத்’ என்ற கடமையை எளிதாய் நிறைவேற்ற அவன் மூலம் உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை தரும் அவனும் ஒரு வகையில் உனக்கு தர்மம் செய்கிறான்.
இது தொடர்பான உன்னதமான விளக்கத்தை அல்லாஹ் தன் அருள்மறையிலே இவ்வாறு பதிவு செய்திருக்கின்றான்:
அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவதைத் தவிர வேறு எதற்காகவும் நீங்கள் செலவு செய்வதில்லையே! எனவே எந்த நல்ல பொருளை (இறைவழியில்) நீங்கள் செலவு செய்தாலும் அதற்குரிய நிறைவான கூலி உங்களுக்குக் கொடுக்கப்படும்; மேலும் நீங்கள் (ஒரு போதும்) அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (2:272)
‘மனிதன் தர்மம் செய்து விட்டான்’ என்ற ஒற்றை காரணத்திற்காக அவன் பெருமை கொள்ள எந்தவித தகுதியும் இல்லாதவன் என்பதை மிக அழகாக இங்கே எடுத்தியம்புகிறது அருள்மறை. ‘பெருமை கொள்ளாதீர்கள்’ என்று சொன்ன அருள்மறை அடுத்து சொல்கிறது, ‘தானம் செய்வதற்கு நல்லவற்றையே தேர்வு செய்யுங்கள்’ என்று.
“நல்லவற்றையே நீங்கள் தர்மமாக செலவு செய்யுங்கள், அவற்றில் கெட்டவற்றை கொடுக்க நினைக்காதீர்கள். ஏனென்றால் கெட்டுப்போன பொருட்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால் அவற்றை நீங்கள் வெறுப்புடன் கண்களை மூடியவர்களாகவே தவிர வாங்கிக் கொள்ள மாட்டீர்களே. ஆகவே நீங்கள் விரும்பாத பொருட்களை பிறருக்கு தர்மமாக கொடுக்காதீர்கள்”. (திருக்குர் ஆன் 2:267)
தேவை என்று ஒருவன் தன் வாசலில் வந்து விட்டால், நமக்கு தேவையில்லை என்று ஆகி விட்டதையோ அல்லது பழையதையோ, கெட்டுப்போனதையோ கொடுக்க முன் வருவது தான் மனித இயல்பாக இருக்கிறது. ஆனால் அல்லாஹ், ‘அவ்வாறு செய்யாதே’ என்று கட்டளையிட்ட பிறகு அதைச் செய்தால், அதற்கு நன்மை கிடைக்காது. மேலும் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ததால் ஏற்படும் பாவச் சுமையும் அவர் மீது விழுந்து விடும்.
தர்மத்தின் அடுத்த கட்டளையாக அல்லாஹ் இவ்வாறு அறிவிக்கின்றான்:
“அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர் அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர் களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை, அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்”. (2:262)
“கனிவான சொல்லும், (விரும்பாத விஷயங்களை) மன்னித்து விடுவதும், மனம் புண்படச் செய்யும் தானத்தைவிடச் சிறப்புடையனவாகும். மேலும் அல்லாஹ் தன்னிறைவுள்ளவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கின்றான்”. (2:263)
எந்த தர்மத்தைச் செய்தாலும் அதை பிறருக்கு சொல்லி காட்டி, வாங்கியவனின் கண்ணியத்தை குலைப்பதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அதற்குப்பதிலாக, அவரிடம் இனிய சொற் களைச் சொல்லி, அவர்களை சமாதானம் செய்வதையே இறைவன் விரும்புகிறான்.
தர்மம் யாருக்குச் செய்ய வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக விளக்கியுள்ளது. வறுமையின் பிடியில் சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருப்பவர்களில் சிலர், ‘ஏற்பது இகழ்ச்சி’ என்கின்ற ஒரே காரணத்திற்காக தங்கள் வறுமையை வெளிக்காட்டாமல், இறைவனை நம்பி வைராக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அது போன்ற இறைபக்தியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தர்மம் செய்வது, தர்மத்தில் சாலச்சிறந்தது என்கிறது திருக்குர்ஆன். இதுபற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
“அவர்கள் மக்களிடத்தில் வருந்தியும் கேட்கமாட்டார்கள். இத்தகைய ஏழைகளுக்கு நீங்கள் நல்லதில் இருந்து எதைச் செலவு செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன் கறிந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தருவான்”. (2:273)
அடுத்து அல்லாஹ் தர்மத்தின் இரண்டு நியதிகளைச் சொல்லித் தருகிறான். ‘தர்மம் என்பதை வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுங்கள் என்றும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் செய்யுங்கள்’ என்றும் சொல்கிறான்.
“நீங்கள் செய்யும் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே. ஏனெனில் அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டும். ஆயினும் நீங்கள் அதனை மறைத்தே கொடுப்பது, அதுவும் ஏழைகளுக்கு கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அந்த இருவகை தர்மமும் உங்கள் பாவங்களுக்கு பரிகாரம் ஆகும். நீங்கள் செய்யும் வெளிப்படையான மற்றும் மறைவான அனைத்தும் அல்லாஹ் நன்கு அறிவான்”. (2:271)
‘ஒருவன் குதிரை மேல் வந்து தர்மம் கேட்டாலும், அவனிடம் ஏன் எதற்கு என்று விளக்கம் கேட்காமல் கொடுத்துவிடுங்கள். அவர்கள் உள் அந்தரங்களை அல்லாஹ்வே அறிந்தவனாக இருக்கின்றான்’ என்று கண்மணி நாயகமும் நவின்றுள்ளார்கள்.
தர்மம் பற்றிய முழுமையான ஞானம் பெற்று, செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்ற நல்லடியார்களாக நம்மை இறைவன் ஏற்றுக் கொள்வானாக.
-எம்.முஹம்மது யூசுப், உடன்குடி.
நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் உம்ராவை முடித்துவிட்டு மக்காவிலிருந்து வெளியேறிய போது, உஹுதுப் போரில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஹம்ஸா(ரலி) அவர்களின் மகள் “சாச்சா, சாச்சா!” என்று தனது சிறிய தந்தையான முஹம்மது நபியை நோக்கி ஓடிவந்தார். தந்தையை இழந்திருந்த அந்தக் குழந்தையை அரவணைத்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.
அச்சிறுமியைப் பார்த்த அலீ(ரலி) பரிவோடு அவளுடைய கையைப் பிடித்து அவர் மனைவி ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவள் உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை இடுப்பில் சுமந்து கொள்' என்று கூறினார்கள்.
ஆனால் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் அந்த அனாதைச் சிறுமியை, 'நானே வளர்ப்பேன்' என்று ஒருவரோடொருவர் சச்சரவு செய்தனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். இவள் என் சிறிய தந்தையின் மகள்' என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள் மட்டுமல்ல இவளுடைய சிற்றன்னை அதாவது இவளுடைய தாயின் சகோதரி என் மனைவி' என்று கூறினார்கள். ஸைத்(ரலி), 'இவள் என் சகோதரரின் மகள்' என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று தீர்ப்பளித்தார்கள். 'சிற்றன்னையே தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள், அதனால் அவள் ஜஅஃபர் வீட்டுக்குச் செல்வதே சரியாக இருக்கும்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்' என்று ஆறுதலாகச் சமாதானப்படுத்தினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்' என்றார்கள் நபி(ஸல்). ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர். எம்மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ளவர்’ என்றும் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு அதன் அருகில் ‘ஸஃப்’ என்ற இடத்தில் தங்கினார்கள்.
இந்த உம்ராவிற்கு ‘உம்ரத்துல் கழா’ என்று கூறப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சென்ற ஆண்டு உம்ராவை நிறைவேற்ற முடியாமல் போனதற்குப் பகரமாக இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டதால் இப்பெயர் வந்தது. இரண்டாவது, ஹுதைபிய்யாவின் போது செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்த உம்ரா அமைந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது.
ஸஹீஹ் புகாரி 3:53:2699, அர்ரஹீக் அல்மக்தூம்
-ஜெஸிலா பானு.
அச்சிறுமியைப் பார்த்த அலீ(ரலி) பரிவோடு அவளுடைய கையைப் பிடித்து அவர் மனைவி ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவள் உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை இடுப்பில் சுமந்து கொள்' என்று கூறினார்கள்.
ஆனால் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் அந்த அனாதைச் சிறுமியை, 'நானே வளர்ப்பேன்' என்று ஒருவரோடொருவர் சச்சரவு செய்தனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். இவள் என் சிறிய தந்தையின் மகள்' என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள் மட்டுமல்ல இவளுடைய சிற்றன்னை அதாவது இவளுடைய தாயின் சகோதரி என் மனைவி' என்று கூறினார்கள். ஸைத்(ரலி), 'இவள் என் சகோதரரின் மகள்' என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று தீர்ப்பளித்தார்கள். 'சிற்றன்னையே தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள், அதனால் அவள் ஜஅஃபர் வீட்டுக்குச் செல்வதே சரியாக இருக்கும்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்' என்று ஆறுதலாகச் சமாதானப்படுத்தினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்' என்றார்கள் நபி(ஸல்). ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர். எம்மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ளவர்’ என்றும் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு அதன் அருகில் ‘ஸஃப்’ என்ற இடத்தில் தங்கினார்கள்.
இந்த உம்ராவிற்கு ‘உம்ரத்துல் கழா’ என்று கூறப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சென்ற ஆண்டு உம்ராவை நிறைவேற்ற முடியாமல் போனதற்குப் பகரமாக இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டதால் இப்பெயர் வந்தது. இரண்டாவது, ஹுதைபிய்யாவின் போது செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்த உம்ரா அமைந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது.
ஸஹீஹ் புகாரி 3:53:2699, அர்ரஹீக் அல்மக்தூம்
-ஜெஸிலா பானு.
பெற்றோரை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தி மரியாதை செய்ய வேண்டும் என்பது குறித்து வல்ல இறைவன் தனது அருள்மறையான திருக்குர்ஆனில் கூறியிருக்கிறது என்று பார்க்கலாம்.
பெற்றோரும், பிள்ளைகளும் இன்றைய சமூகத்தில் கீரியும், பாம்பும் போல் இருக்கின்றனர். முதுமை அடைந்த பெற்றோரை புறக்கணிப்பதையே சிலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். வயதான பெற்றோருக்கு உண்ண உணவு கொடுக்காமல், உடுத்துவதற்கு உடை கொடுக்காமல் சில பிள்ளைகள் அவர்களை அடித்து விரட்டி விடுகின்றனர்.
பெற்றோரை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தி மரியாதை செய்ய வேண்டும் என்பது குறித்து வல்ல இறைவன் தனது அருள்மறையான திருக்குர்ஆனில் கூறியிருப்பதாவது:
“(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறிய போதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங் கள்”.
“அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி ‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!’ என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்”. (திருக்குர்ஆன் 17:23,24)
சில பிள்ளைகள் பெற்றோரை மரியாதையாக அழைக்காமல் ‘வா, போ, அவன், இவன்’ என்று அழைக்கின்றனர். இப்படி மரியாதைக் குறைவாக அழைக்கக் கூடாது என்றும் திருக்குர்ஆனின் வசனம் தடை செய்கிறது.
இறைத்தூதர் நூஹ் இறைவனிடம், “என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கைக் கொண்டவனாக என்னுடைய வீட்டில் நுழைந்தவனுக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக. இந்த அநியாயக்காரர்களுக்கும் அழிவை தவிர நீ அதிகப்படுத்தாதே (என்றும் பிரார்த்தித்தார்)”. (திருக்குர்ஆன் 71:28).
இறைத்தூதர் நூஹ் தனது பெற்றோருக்காக பிரார்த்தனை செய்ததை இறைவன் எடுத்துக்காட்டி நீங்களும் உங்கள் பெற்றோருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நமக்கு பாடம் நடத்துகிறான்.
பெற்றோருக்கு பிள்ளைகள் ஏன் நன்மை செய்ய வேண்டும். அதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு தெரிவிக்கின்றான்.
“மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: ‘இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்பு கிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்’ என்று கூறுவான்”. (46:15)
இறைத்தூதர் யூசுப் தனது பெற்றோரை நீண்ட காலம் பிரிந்திருந்தார். பின்னர் அவர்களை சந்தித்தபோது தனது சிம்மாசனத்தில் அவர்கள் இருவரையும் அமர வைத்து அழகு பார்த்த செய்தியை ‘தமது பெற்றோரை தமது சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்கு பணிந்தனர்’ என்று இறைவன் திருக்குர்ஆனில் (12:100) எடுத்துக் காட்டுகிறான்.
இதன் மூலம் பிள்ளைகள் பெற்றோரை உயர்ந்த இடத்தில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்த வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது:
‘அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது. பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்’ (2:83),
“(நபியே! பொருட்களில்) ‘எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)’ என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) ‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்”. (2:215).
“ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதரே! நான் அழகிய நட்பு கொள்வதற்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்? என்று கேட்டான். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனது தாய் என்றார்கள். பின்பு யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு யார்? என நான் கேட்டேன். உனது தாய் என்றார்கள். பிறகு யார்? எனக் கேட்டேன். உனது தந்தை என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)
இன்றைய பிள்ளைகளுக்கு நண்பர்கள் தான் பெரிதாகத் தெரிகிறார்கள். அவர்களுக்கு பிறகு தான் பெற்றோர் என அவர்கள் நினைக்கின்றனர். நட்பு கொள்வதற்கு உலகிலேயே சிறந்தவள் தாய் தான். அவளுக்கு பிறகு தந்தை, இந்த இருவர் போல பிள்ளைகளிடம் அன்பு பாராட்டுபவர்களும், நலன் நாடுபவர்களும் இருக்கவே முடியாது. இதை பிள்ளைகள் உணர்ந்து நடக்க முற்படும் போது அவர்கள் எல்லா நிலையிலும் உயர்ந்தவராகவே இருப்பர்.
ஒரு மனிதனின் இறுதி இலக்கு மறுமையில் சொர்க்கத்தை அடைவதாகவே இருக்கும். இந்த உலகில் ஒருவர் தோற்று விட்டால் அவரை கை தூக்கி விடுவதற்கு சிலர் இருப்பார்கள். சிலர் யாருடைய தயவும் இல்லாமல் தானாகவே கூட எழுந்து விடுவார்கள். அதே சமயம் ஒரு மனிதன் மறுமையில் தோற்று விட்டால் அவனால் அதிலிருந்து மீளவும் முடியாது. கை தூக்கி விடுவதற்கும் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த உலகத்தில் பெற்றோரை நல்ல முறையில் பேணுவதன் மூலம் மறுமையில் வெற்றி பெற முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
இறைவனின் இந்த கட்டளைகளை ஏற்று, பெற்றோருக்கு நன்மை செய்யும் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!
எஸ். அமீர் ஜவஹர், காரைக்கால்.
பெற்றோரை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தி மரியாதை செய்ய வேண்டும் என்பது குறித்து வல்ல இறைவன் தனது அருள்மறையான திருக்குர்ஆனில் கூறியிருப்பதாவது:
“(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறிய போதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங் கள்”.
“அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி ‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!’ என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்”. (திருக்குர்ஆன் 17:23,24)
சில பிள்ளைகள் பெற்றோரை மரியாதையாக அழைக்காமல் ‘வா, போ, அவன், இவன்’ என்று அழைக்கின்றனர். இப்படி மரியாதைக் குறைவாக அழைக்கக் கூடாது என்றும் திருக்குர்ஆனின் வசனம் தடை செய்கிறது.
இறைத்தூதர் நூஹ் இறைவனிடம், “என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கைக் கொண்டவனாக என்னுடைய வீட்டில் நுழைந்தவனுக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக. இந்த அநியாயக்காரர்களுக்கும் அழிவை தவிர நீ அதிகப்படுத்தாதே (என்றும் பிரார்த்தித்தார்)”. (திருக்குர்ஆன் 71:28).
இறைத்தூதர் நூஹ் தனது பெற்றோருக்காக பிரார்த்தனை செய்ததை இறைவன் எடுத்துக்காட்டி நீங்களும் உங்கள் பெற்றோருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நமக்கு பாடம் நடத்துகிறான்.
பெற்றோருக்கு பிள்ளைகள் ஏன் நன்மை செய்ய வேண்டும். அதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு தெரிவிக்கின்றான்.
“மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: ‘இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்பு கிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்’ என்று கூறுவான்”. (46:15)
இறைத்தூதர் யூசுப் தனது பெற்றோரை நீண்ட காலம் பிரிந்திருந்தார். பின்னர் அவர்களை சந்தித்தபோது தனது சிம்மாசனத்தில் அவர்கள் இருவரையும் அமர வைத்து அழகு பார்த்த செய்தியை ‘தமது பெற்றோரை தமது சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்கு பணிந்தனர்’ என்று இறைவன் திருக்குர்ஆனில் (12:100) எடுத்துக் காட்டுகிறான்.
இதன் மூலம் பிள்ளைகள் பெற்றோரை உயர்ந்த இடத்தில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்த வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது:
‘அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது. பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்’ (2:83),
“(நபியே! பொருட்களில்) ‘எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)’ என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) ‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்”. (2:215).
“ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதரே! நான் அழகிய நட்பு கொள்வதற்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்? என்று கேட்டான். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனது தாய் என்றார்கள். பின்பு யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு யார்? என நான் கேட்டேன். உனது தாய் என்றார்கள். பிறகு யார்? எனக் கேட்டேன். உனது தந்தை என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)
இன்றைய பிள்ளைகளுக்கு நண்பர்கள் தான் பெரிதாகத் தெரிகிறார்கள். அவர்களுக்கு பிறகு தான் பெற்றோர் என அவர்கள் நினைக்கின்றனர். நட்பு கொள்வதற்கு உலகிலேயே சிறந்தவள் தாய் தான். அவளுக்கு பிறகு தந்தை, இந்த இருவர் போல பிள்ளைகளிடம் அன்பு பாராட்டுபவர்களும், நலன் நாடுபவர்களும் இருக்கவே முடியாது. இதை பிள்ளைகள் உணர்ந்து நடக்க முற்படும் போது அவர்கள் எல்லா நிலையிலும் உயர்ந்தவராகவே இருப்பர்.
ஒரு மனிதனின் இறுதி இலக்கு மறுமையில் சொர்க்கத்தை அடைவதாகவே இருக்கும். இந்த உலகில் ஒருவர் தோற்று விட்டால் அவரை கை தூக்கி விடுவதற்கு சிலர் இருப்பார்கள். சிலர் யாருடைய தயவும் இல்லாமல் தானாகவே கூட எழுந்து விடுவார்கள். அதே சமயம் ஒரு மனிதன் மறுமையில் தோற்று விட்டால் அவனால் அதிலிருந்து மீளவும் முடியாது. கை தூக்கி விடுவதற்கும் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த உலகத்தில் பெற்றோரை நல்ல முறையில் பேணுவதன் மூலம் மறுமையில் வெற்றி பெற முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
இறைவனின் இந்த கட்டளைகளை ஏற்று, பெற்றோருக்கு நன்மை செய்யும் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!
எஸ். அமீர் ஜவஹர், காரைக்கால்.
உம்ரா பயணிகள் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் உறையிலிடப்பட்ட வாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட்டனர்.
நபித் தோழர்கள் பல படைப் பிரிவுகளாகப் பிரிந்து பல இடங்களுக்குச் சென்றிருந்தவர்களெல்லாம் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை முடித்துவிட்டு மதீனா திரும்பினர். நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட அனைவரும் உம்ராவிற்குச் செல்ல தயாராகும்படி கட்டளையிட்டார்கள்.
நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க மிக ஆர்வமாக மக்கள் உம்ரா செய்யப் புறப்பட்டனர். தங்களுடன் குர்பானிக்காக ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். குறைஷிகள் ஒப்பந்தத்தை மீறலாம் அல்லது ஏதேனும் மோசடி செய்யலாம் அதனால் போர் வீரர்களுடன் ஆயுதங்களையும் தயாராக எடுத்துச் சென்றனர். ஆனால் மக்காவில் நுழைவதற்கு முன்பே ஆயுதங்களை ஓர் இடத்தில் வைத்து அதற்குக் காவலாளிகளை நியமித்துவிட்டு, உம்ரா பயணிகள் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் உறையிலிடப்பட்ட வாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட்டனர்.
இறைவனைப் புகழ்ந்தவார்களாகத் தல்பியாவை முழங்கிக் கொண்டு முஸ்லிம்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை வேடிக்கைப் பார்த்தவர்களாக ‘மதீனாவில் தோன்றிய காய்ச்சலால் பலவீனப்பட்ட நிலையில் ஒரு குழு நம்மிடம் வந்துள்ளது’ என்று கிண்டலாகப் பேசிக் கொண்டனர்.
அப்போது பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் ‘வலது தோள்பட்டை வெளியில் தெரியும்படி இஹ்ராமுடைய ஆடையை அணிந்து, கஅபாவை வலம்வருகையில் மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கியவாறு ஓடுங்கள், நம் பலத்தை இணை வைப்போர் பார்க்கட்டும்’ என்று கூறினார்கள். அதன்படி முஸ்லிம்களும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும், மற்ற நான்கு சுற்றுகள் சாதாரணமாக நடந்தும் சுற்றினர். இதைப் பார்த்து இணைவைப்பாளர்கள் ஆச்சர்யப்பட்டனர் “இவர்கள் வீரமுள்ளவர்களாகவே இருக்கின்றனர், பலவீனப்படவில்லை” என்றும் கிசுகிசுத்துக் கொண்டனர்.
நபி(ஸல்) மற்றும் தோழர்கள் தவாஃபை அதாவது கஅபாவை வலம் வந்த பிறகு ‘ஸஃபா, மர்வா’ என்ற இரு மலைகளுக்கு மத்தியில் ‘ஸயீ’ செய்தனர். ஹாஜர்(அலை) தண்ணீருக்காக இந்த இரு மலைகளுக்கு இடையே ஓடியதை நினைவு கூறும் வகையில் இங்கு ‘ஸயீ’ செய்தனர். அதன்பின் அந்த இடத்தில் குர்பானிக்குக் கொண்டு வந்திருந்த பிராணியை அறுத்தனர். அதற்குப் பின் நபி(ஸல்) தங்களது தலைமுடியை சிரைத்து மொட்டை அடித்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர்.
ஆயுதங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்தவர்களை நபிகளாரின் கட்டளைக்கேற்ப உம்ரா செய்ய அனுப்புவதற்காக, உம்ரா நிறைவேற்றியவர்கள் மக்காவிற்கு வெளியில் சென்று பாதுகாவலர்களை உம்ராவை நிறைவேற்ற அனுப்பி வைத்தனர்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். குறைஷிகள் நான்காவது நாள் காலையில் அலீயிடம் வந்து, “தவணை முடிந்துவிட்டது. உமது தோழரை வெளியேறும்படி சொல்” என்று கூறினர். நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறினார்கள்.
ஸஹீஹ் புகாரி 4:64:4256, 2:25:1602
- ஜெஸிலா பானு.
நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க மிக ஆர்வமாக மக்கள் உம்ரா செய்யப் புறப்பட்டனர். தங்களுடன் குர்பானிக்காக ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். குறைஷிகள் ஒப்பந்தத்தை மீறலாம் அல்லது ஏதேனும் மோசடி செய்யலாம் அதனால் போர் வீரர்களுடன் ஆயுதங்களையும் தயாராக எடுத்துச் சென்றனர். ஆனால் மக்காவில் நுழைவதற்கு முன்பே ஆயுதங்களை ஓர் இடத்தில் வைத்து அதற்குக் காவலாளிகளை நியமித்துவிட்டு, உம்ரா பயணிகள் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் உறையிலிடப்பட்ட வாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட்டனர்.
இறைவனைப் புகழ்ந்தவார்களாகத் தல்பியாவை முழங்கிக் கொண்டு முஸ்லிம்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை வேடிக்கைப் பார்த்தவர்களாக ‘மதீனாவில் தோன்றிய காய்ச்சலால் பலவீனப்பட்ட நிலையில் ஒரு குழு நம்மிடம் வந்துள்ளது’ என்று கிண்டலாகப் பேசிக் கொண்டனர்.
அப்போது பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் ‘வலது தோள்பட்டை வெளியில் தெரியும்படி இஹ்ராமுடைய ஆடையை அணிந்து, கஅபாவை வலம்வருகையில் மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கியவாறு ஓடுங்கள், நம் பலத்தை இணை வைப்போர் பார்க்கட்டும்’ என்று கூறினார்கள். அதன்படி முஸ்லிம்களும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும், மற்ற நான்கு சுற்றுகள் சாதாரணமாக நடந்தும் சுற்றினர். இதைப் பார்த்து இணைவைப்பாளர்கள் ஆச்சர்யப்பட்டனர் “இவர்கள் வீரமுள்ளவர்களாகவே இருக்கின்றனர், பலவீனப்படவில்லை” என்றும் கிசுகிசுத்துக் கொண்டனர்.
நபி(ஸல்) மற்றும் தோழர்கள் தவாஃபை அதாவது கஅபாவை வலம் வந்த பிறகு ‘ஸஃபா, மர்வா’ என்ற இரு மலைகளுக்கு மத்தியில் ‘ஸயீ’ செய்தனர். ஹாஜர்(அலை) தண்ணீருக்காக இந்த இரு மலைகளுக்கு இடையே ஓடியதை நினைவு கூறும் வகையில் இங்கு ‘ஸயீ’ செய்தனர். அதன்பின் அந்த இடத்தில் குர்பானிக்குக் கொண்டு வந்திருந்த பிராணியை அறுத்தனர். அதற்குப் பின் நபி(ஸல்) தங்களது தலைமுடியை சிரைத்து மொட்டை அடித்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர்.
ஆயுதங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்தவர்களை நபிகளாரின் கட்டளைக்கேற்ப உம்ரா செய்ய அனுப்புவதற்காக, உம்ரா நிறைவேற்றியவர்கள் மக்காவிற்கு வெளியில் சென்று பாதுகாவலர்களை உம்ராவை நிறைவேற்ற அனுப்பி வைத்தனர்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். குறைஷிகள் நான்காவது நாள் காலையில் அலீயிடம் வந்து, “தவணை முடிந்துவிட்டது. உமது தோழரை வெளியேறும்படி சொல்” என்று கூறினர். நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறினார்கள்.
ஸஹீஹ் புகாரி 4:64:4256, 2:25:1602
- ஜெஸிலா பானு.
வீட்டில் உள்ள முதியோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் தமது இல்லத்திலேயே வைத்து கண்ணின் இமை போன்று அவர்களை பாதுகாக்க வேண்டும்.
மனிதர்களுக்கு முத்தான மூன்று பருவங்கள் உண்டு. அவை 1) குழந்தைப் பருவம், 2) இளமைப்பருவம், 3) முதுமைப்பருவம். இவற்றில் இளமைப்பருவம் என்பது சுயமாக இயங்கும் ஆற்றல் உள்ள, அபார சக்திமிக்க, அழகான பருவமாக அமைந்திருக்கிறது. மற்ற இரண்டு பருவங்களான குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பிறரைச் சார்ந்திருக்கிறது. முதியோர்கள் ஒருவகையில் குழந்தைகளைப் போன்றவர்கள் என்று இறைவசனம் நயமாக எடுத்துரைக்கிறது.
‘நாம் எவரையும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகின்றோம். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?’ (திருக்குர்ஆன் 36:68)
மனிதன் குழந்தையாகப் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சியை அடைகின்றான். ஒரு குறிப்பிட்ட வயோதிகப் பருவத்தை அடைந்த பிறகு, குழந்தையைப் போன்றே நலிந்த நிலைக்கு தள்ளப்படுகின்றான். நடையில், பார்வையில், பேச்சில், செயலில் ஒவ்வொன்றிலும் முதியவர்கள் குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள். இத்தகைய உடல் மாற்றத்தை இறைவன் திருக்குர்ஆனில் பதிவு செய்துள்ளதை காண்போம்.
‘அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக் கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக் கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 30:54)
‘உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனம் தரும் முதுமை வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டுமென்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 16:70)
முதியவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் ‘நரைமுடி’ ஏற்படுவது போன்றவை அனைத்தும் கண்ணியத்தின் அறிகுறிகளாகும். அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதின் குறியீடுகளாகும்.
“நபி (ஸல்) அவர்கள் நரைமுடிகளைப் பிடுங்குவதைத் தடுத்தார்கள். மேலும் ‘அது இறைவிசுவாசியின் ஒளி’ என்றும் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அமர்பின்ஷுஜப் (ரலி) திர்மிதி)
“நம்மில் பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவரும், சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாதவரும் என் சமுதாயத்தைச் சார்ந்தவரல்லர்! என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : உப்பாதாபின் ஸாமித் (ரலி) அஹ்மது)
முதியோர்களை முதன்மைப்படுத்துவோம்
நன்மை - தீமை, லாப - நஷ்டம், இன்பம் - துன்பம், உயர்வு - தாழ்வு, வெற்றி - தோல்வி போன்ற வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் முதியோர்களிடம் முதன்மையாக ஆலோசனை கேட்க வேண்டும். முதியோர்கள் ஒரு சமூகத்தின் விலைமதிக்க முடியாத நட்சத்திரங்கள்: பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் முதல் மரியாதை கொடுக்க வேண்டும்.
‘அப்துல்லாஹ் பின் ஸஹ்ல், (ரலி) அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் கைபர் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அன்று அங்கு (முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே) சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (கைபருக்குச் சென்றதும்) அவர்களிருவரும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர்’.
‘அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் கொல்லப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி விழுந்து கிடக்க, அங்கு முஹய்யிஸா வந்தார்கள். பிறகு அவர்களை அடக்கம் செய்தார்கள். இதன்பிறகு, கொல்லப்பட்டவரின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல், முஹய்யிஸா, அவரது சகோதரர் ஹீவைய்யிஸாவும் நபியவர்களிடம் வருகை புரிந்தார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக்கொண்டே சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘பெரியவர்களைப் பேசவிடு, பெரியவர்களைப் பேசவிடு’ என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல் (ரலி) வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர் (வாய் மூடி) மவுனமானார். பிறகு முஹய்யிஸாவும், ஹீவைய்யிஸாவும் நபியிடம் அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் (ரலி) கொல்லப்பட்டது குறித்து பேசினார்கள்’. (அறிவிப்பாளர் : ஸஹ்ல்பின் அபீ ஹஸ்மா (ரலி) புகாரி : 3173)
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் கனவில் பல் துலக்கும் குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாக என்னைக் கண்டேன். என்னிடம் இருவர் வந்தனர் இருவரில் ஒருவர் மற்றொருவரை விட பெரியவராக இருந்தார். எனவே, நான் அந்தக் குச்சியை சிறியவருக்கு வழங்கிவிட்டேன். அப்போது எனக்கு, ‘பெரியவரிடம் கொடுப்பீராக’ என்று கூறப்பட்டது. நானும் அவ்விருவரில் பெரியவருக்கு அதை வழங்கிவிட்டேன்”. (அறிவிப்பாளர் : இப்னுஉமர் (ரலி) நூல் : முஸ்லிம்)
‘ஒரு கூட்டத்துக்கு தலைமையேற்று தொழுகை நடத்தக் கூடியவர் யாரென்றால் அவர்களில் மிக அதிகமாக திருக்குர்ஆனை ஓதியவராக இருக்க வேண்டும். இந்தத் தகுதியில் அனைவரும் சரி நிகரானவர்களாக இருந்தால், அடுத்து அவர் களில் மிக அதிகமான நபிமொழிகளை தெரிந்தவராக இருக்க வேண்டும். இதிலும் அனைவரும் சரி நிகரானவர்களாக இருந்தால், அவர்களில் முதன்முதலாக ஹிஜ்ரத் (நாடு துறந்து செல்வது) புரிந்தவர் ஆவார். இதிலும் அவர்கள் அனைவரும் சரிசமமானவர்களாக இருந்தால், அவர்களில் வயதில் மூத்தவர் தலைமையேற்று தொழுகை நடத்தட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம்)
பெரியோர்களிடம் நடந்து கொள்ளும் முறை
ரபீஉ (ரஹ்) கூறுகிறார்: ‘எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நான் தண்ணீர் அருந்த துணியமாட்டேன்’ எனும் பணிவடக்கத்தை தெரிவிக்கிறார்.
மக்கா வெற்றியின்போது, நபித்தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் தந்தை தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு, நபி (ஸல்) அவர்களை தரிசிக்க வரும்போது, நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெரியவரைப் பார்த்து ‘நீங்கள் ஏன் என்னைப் பார்க்க வரவேண்டும்? நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்திருக்கலாமே. நாங்கள் வந்து உம்மை தரிசித்திருப்போமே’ என்று பணிவுடன் கூறினார்கள்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறுவதாவது: ‘நான் எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுக்கு முன்பு அமர்ந்து புத்தகம் படிக்கும்போது, புத்தகத்தின் ஒரு பகுதியை திருப்பும்போது மெதுவாக திருப்புவேன். ஏனென்றால் அதன் சப்தத்தின் தொந்தரவு அவர்கள் கேட்கக்கூடாது என்பதற்காக’ என்கிறார்.
இஸ்லாமிய மார்க்கம் முதியோர்களை அதிகம் மதிக்கிறது. முதியோர்களின் நலனை அதிகம் பாதுகாக்கிறது. குழந்தைகளை விழுந்து விழுந்து, மனமுவந்து, ஆசை ஆசையாய் கவனிப்பது போன்று முதியோர்களையும் கவனிக்கும்படி தூண்டுகிறது.
‘குழந்தைகள் பெற்றோருக்குச் செய்யும் உரிமை போன்று, சிறியவர்கள் மீதும் பெரியோருக்குச் செய்யும் உரிமை கடமையாக உள்ளது’ என்பது நபிமொழியாகும்.
“ஒரு வாலிபர் வயது முதிர்ந்தவருக்கு மரியாதை செலுத்தும் போது, வாலிபர் வயோதிக பருவத்தை அடையும்போது, அவருக்கு மரியாதை செலுத்தும் ஒருவரை இறைவன் ஏற்படுத்தாமல் விடமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்” (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி)
“அபிவிருத்தி என்பது முதியோர்களுடன் உள்ளது என நபி (ஸல்) கூறினார்கள்” (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : ஹாகிம்) அந்திம காலத்தில் அனைத்தையும் இழந்து, பரிதாபமாக நிற்கும் முதியோருக்கு இளையோரும், அவரின் குடும்பத்தினரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் தமது இல்லத்திலேயே வைத்து கண்ணின் இமை போன்று அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி போன்றவற்றிற்கு குழந்தைகள் மனதார பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு செய்தால், பெரியோர்களின் அபிவிருத்தியும், பிரார்த்தனையும் அவர் தம் குடும்பத்தாருக்கும் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,
திருநெல்வேலி டவுன்.
‘நாம் எவரையும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகின்றோம். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?’ (திருக்குர்ஆன் 36:68)
மனிதன் குழந்தையாகப் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சியை அடைகின்றான். ஒரு குறிப்பிட்ட வயோதிகப் பருவத்தை அடைந்த பிறகு, குழந்தையைப் போன்றே நலிந்த நிலைக்கு தள்ளப்படுகின்றான். நடையில், பார்வையில், பேச்சில், செயலில் ஒவ்வொன்றிலும் முதியவர்கள் குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள். இத்தகைய உடல் மாற்றத்தை இறைவன் திருக்குர்ஆனில் பதிவு செய்துள்ளதை காண்போம்.
‘அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக் கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக் கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 30:54)
‘உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனம் தரும் முதுமை வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டுமென்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 16:70)
முதியவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் ‘நரைமுடி’ ஏற்படுவது போன்றவை அனைத்தும் கண்ணியத்தின் அறிகுறிகளாகும். அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதின் குறியீடுகளாகும்.
“நபி (ஸல்) அவர்கள் நரைமுடிகளைப் பிடுங்குவதைத் தடுத்தார்கள். மேலும் ‘அது இறைவிசுவாசியின் ஒளி’ என்றும் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அமர்பின்ஷுஜப் (ரலி) திர்மிதி)
“நம்மில் பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவரும், சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாதவரும் என் சமுதாயத்தைச் சார்ந்தவரல்லர்! என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : உப்பாதாபின் ஸாமித் (ரலி) அஹ்மது)
முதியோர்களை முதன்மைப்படுத்துவோம்
நன்மை - தீமை, லாப - நஷ்டம், இன்பம் - துன்பம், உயர்வு - தாழ்வு, வெற்றி - தோல்வி போன்ற வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் முதியோர்களிடம் முதன்மையாக ஆலோசனை கேட்க வேண்டும். முதியோர்கள் ஒரு சமூகத்தின் விலைமதிக்க முடியாத நட்சத்திரங்கள்: பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் முதல் மரியாதை கொடுக்க வேண்டும்.
‘அப்துல்லாஹ் பின் ஸஹ்ல், (ரலி) அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் கைபர் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அன்று அங்கு (முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே) சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (கைபருக்குச் சென்றதும்) அவர்களிருவரும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர்’.
‘அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் கொல்லப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி விழுந்து கிடக்க, அங்கு முஹய்யிஸா வந்தார்கள். பிறகு அவர்களை அடக்கம் செய்தார்கள். இதன்பிறகு, கொல்லப்பட்டவரின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல், முஹய்யிஸா, அவரது சகோதரர் ஹீவைய்யிஸாவும் நபியவர்களிடம் வருகை புரிந்தார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக்கொண்டே சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘பெரியவர்களைப் பேசவிடு, பெரியவர்களைப் பேசவிடு’ என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல் (ரலி) வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர் (வாய் மூடி) மவுனமானார். பிறகு முஹய்யிஸாவும், ஹீவைய்யிஸாவும் நபியிடம் அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் (ரலி) கொல்லப்பட்டது குறித்து பேசினார்கள்’. (அறிவிப்பாளர் : ஸஹ்ல்பின் அபீ ஹஸ்மா (ரலி) புகாரி : 3173)
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் கனவில் பல் துலக்கும் குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாக என்னைக் கண்டேன். என்னிடம் இருவர் வந்தனர் இருவரில் ஒருவர் மற்றொருவரை விட பெரியவராக இருந்தார். எனவே, நான் அந்தக் குச்சியை சிறியவருக்கு வழங்கிவிட்டேன். அப்போது எனக்கு, ‘பெரியவரிடம் கொடுப்பீராக’ என்று கூறப்பட்டது. நானும் அவ்விருவரில் பெரியவருக்கு அதை வழங்கிவிட்டேன்”. (அறிவிப்பாளர் : இப்னுஉமர் (ரலி) நூல் : முஸ்லிம்)
‘ஒரு கூட்டத்துக்கு தலைமையேற்று தொழுகை நடத்தக் கூடியவர் யாரென்றால் அவர்களில் மிக அதிகமாக திருக்குர்ஆனை ஓதியவராக இருக்க வேண்டும். இந்தத் தகுதியில் அனைவரும் சரி நிகரானவர்களாக இருந்தால், அடுத்து அவர் களில் மிக அதிகமான நபிமொழிகளை தெரிந்தவராக இருக்க வேண்டும். இதிலும் அனைவரும் சரி நிகரானவர்களாக இருந்தால், அவர்களில் முதன்முதலாக ஹிஜ்ரத் (நாடு துறந்து செல்வது) புரிந்தவர் ஆவார். இதிலும் அவர்கள் அனைவரும் சரிசமமானவர்களாக இருந்தால், அவர்களில் வயதில் மூத்தவர் தலைமையேற்று தொழுகை நடத்தட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம்)
பெரியோர்களிடம் நடந்து கொள்ளும் முறை
ரபீஉ (ரஹ்) கூறுகிறார்: ‘எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நான் தண்ணீர் அருந்த துணியமாட்டேன்’ எனும் பணிவடக்கத்தை தெரிவிக்கிறார்.
மக்கா வெற்றியின்போது, நபித்தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் தந்தை தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு, நபி (ஸல்) அவர்களை தரிசிக்க வரும்போது, நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெரியவரைப் பார்த்து ‘நீங்கள் ஏன் என்னைப் பார்க்க வரவேண்டும்? நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்திருக்கலாமே. நாங்கள் வந்து உம்மை தரிசித்திருப்போமே’ என்று பணிவுடன் கூறினார்கள்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறுவதாவது: ‘நான் எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுக்கு முன்பு அமர்ந்து புத்தகம் படிக்கும்போது, புத்தகத்தின் ஒரு பகுதியை திருப்பும்போது மெதுவாக திருப்புவேன். ஏனென்றால் அதன் சப்தத்தின் தொந்தரவு அவர்கள் கேட்கக்கூடாது என்பதற்காக’ என்கிறார்.
இஸ்லாமிய மார்க்கம் முதியோர்களை அதிகம் மதிக்கிறது. முதியோர்களின் நலனை அதிகம் பாதுகாக்கிறது. குழந்தைகளை விழுந்து விழுந்து, மனமுவந்து, ஆசை ஆசையாய் கவனிப்பது போன்று முதியோர்களையும் கவனிக்கும்படி தூண்டுகிறது.
‘குழந்தைகள் பெற்றோருக்குச் செய்யும் உரிமை போன்று, சிறியவர்கள் மீதும் பெரியோருக்குச் செய்யும் உரிமை கடமையாக உள்ளது’ என்பது நபிமொழியாகும்.
“ஒரு வாலிபர் வயது முதிர்ந்தவருக்கு மரியாதை செலுத்தும் போது, வாலிபர் வயோதிக பருவத்தை அடையும்போது, அவருக்கு மரியாதை செலுத்தும் ஒருவரை இறைவன் ஏற்படுத்தாமல் விடமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்” (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி)
“அபிவிருத்தி என்பது முதியோர்களுடன் உள்ளது என நபி (ஸல்) கூறினார்கள்” (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : ஹாகிம்) அந்திம காலத்தில் அனைத்தையும் இழந்து, பரிதாபமாக நிற்கும் முதியோருக்கு இளையோரும், அவரின் குடும்பத்தினரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் தமது இல்லத்திலேயே வைத்து கண்ணின் இமை போன்று அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி போன்றவற்றிற்கு குழந்தைகள் மனதார பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு செய்தால், பெரியோர்களின் அபிவிருத்தியும், பிரார்த்தனையும் அவர் தம் குடும்பத்தாருக்கும் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,
திருநெல்வேலி டவுன்.
எல்லாப் பகுதியிலிருந்தும் படைப் பிரிவுகள் நபிகளாரிடம் திரும்பி செல்வதற்குள் உஸாமா செய்த வினையைப் பற்றிய செய்தி நபி(ஸல்) அவர்களைச் சென்றடைந்திருந்தது.
தாதுர் கா போரில் வெற்றிப் பெற்றுத் திரும்புகையில் இணைவைப்பாளர் ஒருவரின் மனைவியை முஸ்லிம்கள் சிறை பிடித்திருந்தனர். அந்தப் பெண்ணின் கணவர் தன் மனைவியை மீட்க இவர்களைப் பின் தொடர்ந்து ‘ஒரு நபித் தோழரையாவது கொல்வேன்’ என்று சபதம் எடுத்து முஸ்லிம்கள் இரவில் தங்கியிருந்த இடத்திற்கு வந்து கண்காணித்தார்.
பாதுகாப்புப் பணியில் இருந்தவரான அப்பாது இப்னு பிஷ்ர் (ரலி) என்பவர் தொழுது கொண்டிருந்தார். அதுதான் சமயமென்று இணைவைப்பாளர் அம்பெறிந்தார், அதைப் பிடுங்கி எறிந்தவராக அவர் தொழுகையை நிறுத்தாமல் தொடர்ந்தார். மூன்று அம்புகள் எறிந்தும் தொழுகையை அவர் கைவிடவில்லை. தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்த பிறகே அருகிலிருந்த தோழரை எழுப்பினார். அவர் எழுந்து “நீங்கள் என்னை எழுப்பியிருக்கலாமே?” என்று ஆதங்கப்பட்டார். “நான் ஒரு சூராவை ஓதிக் கொண்டிருந்தேன், அதை முறிக்க விரும்பவில்லை” என்று சொல்லும்போதே அவர் உயிர் பிரிந்தது.
அந்த இடத்திலிருந்து பல படைப் பிரிவுகளாகப் பிரிந்து பல இடங்களுக்கு நபி(ஸல்) அவர்களால் அனுப்பப்பட்டனர். அதில் காலிபு இப்னு அப்துல்லாஹ்வின் படைப் பிரிவினர் எதிரிகளைத் தாக்கிவிட்டு அவர்களைத் தோற்கடித்து கால்நடைகளை ஓட்டி வந்தனர். அப்போது அவர்கள் எதிரிப்படை கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சுற்றி வளைத்தபோது அவர், ‘லா இலாஹ் இல்லல்லாஹ் அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை’ என்று சொல்லச் சொல்ல எல்லாரும் அவரைக் கொல்லாமல் விட்டுவிட்ட நிலையில் அவரை உஸாமா இப்னு ஸைத்(ரலி) குத்திக் கொன்றுவிட்டார்.
எல்லாப் பகுதியிலிருந்தும் படைப் பிரிவுகள் நபிகளாரிடம் திரும்பி செல்வதற்குள் உஸாமா செய்த வினையைப் பற்றிய செய்தி நபி(ஸல்) அவர்களைச் சென்றடைந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் ஆவேசமாக உஸாமாவிடம் வந்து ”அவர் ஏகத்துவ வாக்கியத்தை மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று கோபமாகக் கேட்டார்கள்.
இதை எதிர்பாராத உஸாமா(ரலி) “நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல் இருக்க, தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அவர் அதைக் கூறினார்” என்றார். சமாதானமாகாத நபி(ஸல்) ”அவர் உண்மையாளரா? பொய்யரா? என நீ அறிய அவரது உள்ளத்தைப் பிளந்தா பார்த்தாய்?” என்று கேட்டார்கள். உஸாமா தவறு செய்துவிட்டதாக ஆதங்கப்பட்டுத் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்த நபி(ஸல்) ’இப்படி இனி நிகழக் கூடாது’ என்று எச்சரிக்கையும் விடுத்தார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 4:64:4269, இப்னு ஹிஷாம்
- ஜெஸிலா பானு.
பாதுகாப்புப் பணியில் இருந்தவரான அப்பாது இப்னு பிஷ்ர் (ரலி) என்பவர் தொழுது கொண்டிருந்தார். அதுதான் சமயமென்று இணைவைப்பாளர் அம்பெறிந்தார், அதைப் பிடுங்கி எறிந்தவராக அவர் தொழுகையை நிறுத்தாமல் தொடர்ந்தார். மூன்று அம்புகள் எறிந்தும் தொழுகையை அவர் கைவிடவில்லை. தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்த பிறகே அருகிலிருந்த தோழரை எழுப்பினார். அவர் எழுந்து “நீங்கள் என்னை எழுப்பியிருக்கலாமே?” என்று ஆதங்கப்பட்டார். “நான் ஒரு சூராவை ஓதிக் கொண்டிருந்தேன், அதை முறிக்க விரும்பவில்லை” என்று சொல்லும்போதே அவர் உயிர் பிரிந்தது.
அந்த இடத்திலிருந்து பல படைப் பிரிவுகளாகப் பிரிந்து பல இடங்களுக்கு நபி(ஸல்) அவர்களால் அனுப்பப்பட்டனர். அதில் காலிபு இப்னு அப்துல்லாஹ்வின் படைப் பிரிவினர் எதிரிகளைத் தாக்கிவிட்டு அவர்களைத் தோற்கடித்து கால்நடைகளை ஓட்டி வந்தனர். அப்போது அவர்கள் எதிரிப்படை கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சுற்றி வளைத்தபோது அவர், ‘லா இலாஹ் இல்லல்லாஹ் அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை’ என்று சொல்லச் சொல்ல எல்லாரும் அவரைக் கொல்லாமல் விட்டுவிட்ட நிலையில் அவரை உஸாமா இப்னு ஸைத்(ரலி) குத்திக் கொன்றுவிட்டார்.
எல்லாப் பகுதியிலிருந்தும் படைப் பிரிவுகள் நபிகளாரிடம் திரும்பி செல்வதற்குள் உஸாமா செய்த வினையைப் பற்றிய செய்தி நபி(ஸல்) அவர்களைச் சென்றடைந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் ஆவேசமாக உஸாமாவிடம் வந்து ”அவர் ஏகத்துவ வாக்கியத்தை மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று கோபமாகக் கேட்டார்கள்.
இதை எதிர்பாராத உஸாமா(ரலி) “நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல் இருக்க, தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அவர் அதைக் கூறினார்” என்றார். சமாதானமாகாத நபி(ஸல்) ”அவர் உண்மையாளரா? பொய்யரா? என நீ அறிய அவரது உள்ளத்தைப் பிளந்தா பார்த்தாய்?” என்று கேட்டார்கள். உஸாமா தவறு செய்துவிட்டதாக ஆதங்கப்பட்டுத் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்த நபி(ஸல்) ’இப்படி இனி நிகழக் கூடாது’ என்று எச்சரிக்கையும் விடுத்தார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 4:64:4269, இப்னு ஹிஷாம்
- ஜெஸிலா பானு.
உறுப்புகளுக்கு விசாரணை நடத்தப்படும் மறுமை நாளில் நாம் அல்லாஹ்வை நினைவுகூர்ந்ததை நாவும், விரல் நுனிகளும் எடுத்துச் சொல்லும்.
இவ்வுலகில் எங்குமே இல்லாமல் இருந்த நம்மை, தாயின் கருவறையில் உருவாக்கி, உயிர் கொடுத்து, உருவமும் கொடுத்து இப்பூமியில் நம்மை ஜனிக்கச் செய்தவன் எங்கும் நிறைந்திருக்கும் அந்த இறைவனே. அவன் நம்மைப் படைக்க நாடியிராவிட்டால் நாம் இன்று உயிரும் சதையுமாய் உலாவிக் கொண்டிருக்க மாட்டோம்.
எனவே சர்வ வல்லமை பொருந்திய அந்த வல்ல நாயனுக்கே நம்முடைய நன்றியையும், விசுவாசத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அவன் நமக்களித்த அருட்கொடைகளுக்காக அவனிடமே மிக்க அன்பு கொண்டிருக்க வேண்டும். அந்த அன்பினை, வழிபாடுகளில் ஒன்றான ‘திக்ரு’ எனப்படும் ‘நினைவுகூருதல்’ வழியாக வெளிப்படுத்தலாம்.
திக்ரைத் தவிர அல்லாஹ்வை வணங்குவதற்கான வழிபாடுகள் ஒவ்வொன்றிற்கும் வரைமுறைகளை வல்ல நாயன் வகுத்திருக் கிறான். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமையான வழிபாடுகளுக்கு குறிப்பிட்ட காலமும், நேரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் ‘திக்ரு’ செய்வதற்கு காலம், நேரம் பார்க்க வேண்டியதில்லை. மனிதர்கள் எந்நிலையிலும், படுத்தவாறோ, உட்கார்ந்த நிலையிலோ, ஓடிக்கொண்டிருக்கும் பொழுதோ, பிரயாணத்திலோ, இன்னும் தூக்கத்தில் கூட இறைவனை நினைவுகூரலாம். மனதால் மட்டுமன்றி, நாவை அசைத்து அவனை நினைவு கூருவதால் அவனின் பொருத்தத்தையும், நெருக்கத்தையும் பெறலாம்.
கடமையான வழிபாடுகளைத் தவற விடுவதும், சரியாக செய்யாமல் விடுவதும் நாளை மறுமை நாளில் நம்மை அல்லாஹ்வின் முன் குற்றவாளிகளாக நிறுத்தி விடும். திக்ரைப் பொறுத்தவரையில் அதனைச் செய்யாமல் விட்டால் அல்லாஹ்வின் பார்வையில் அது குற்றமாகக் கருதப்பட மாட்டாது. ஆனால் அதனை அல்லாஹ்வின்பால் உள்ளன்பு கொண்டு செய்வதால் நமக்கு ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தருவதுடன், நமது மனம் தேவையில்லாத சிந்தனையில் ஈடுபடுவதை விட்டும், நமது நாவு வீணானவற்றையும், வம்பு பேசுவதை விட்டும் தடுப்பதில் திக்ரைப் போன்ற சிறந்த வழிபாடு ஏதுமில்லை.
திக்ரைப் பற்றி குர் ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள். (திருக்குர் ஆன் 33: 41, 42)
‘அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து அவனை) திக்ரு செய்து வருவது மிகப் பெரிய காரியம்’ என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு கிறான். (29:45)
‘என்னடியான் என்னை நினைவுகூரும் பொழுதெல்லாம், தன் உதடுகளால் என்னை உச்சரிக்கும் பொழுதெல்லாம் நான் அவன் கூடவே இருக்கிறேன்’ என இறைவன் கூறுவதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
‘தன்னை நினைவுகூருபவர்கள் குறித்து அல்லாஹ் வானவர்களிடம் பெருமை பாராட்டுவதாக ஜிப்ரீல் (அலை) தன்னிடம் கூறியதாக அண்ணல் நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள்’.
ஒன்றாகக் கூடியமர்ந்து இறைவனை ‘திக்ரு’ செய்து விட்டு கலைகின்ற ஒவ்வொரு கூட்டத்தார் களிடமும் ‘எழுந்து செல்லுங்கள், உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது’ என்று சொல்லப்படு கிறது.
அல்லாஹ்வை நினைவுகூருபவர்களை அவன் நேசிக்கிறான். எந்த அளவுக்கென்றால் ‘என்னைப் பற்றி அடியான் எப்படிக் கருதுகிறானோ அப்படியே இருக்கிறேன் நான்’ என இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
‘ஒரு அடியான் தன்னுள்ளத்தில் என்னைப் பற்றி எண்ணினால் நானும் என்னுள்ளத்தில் அவனைப் பற்றி எண்ணுகிறேன். தன்னைச் சுற்றியுள்ள மக்களிடையே அவன் என்னை நினைவுகூர்ந்தால் என்னைச் சுற்றியுள்ள அதை விடவும் சிறந்தவர்களிடையே அவனை நானும் நினைவு கூருகிறேன். என்னை நோக்கி அவன் ஒரு சாண் நகர்ந்து வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் நகர்ந்து வருகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் நகர்ந்து வந்தால் நான் அவனை நோக்கி இரண்டு முழம் நகர்ந்து வருகிறேன். இன்னும் என்னை நோக்கி அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடி வருகிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணல் நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள்.
உறுப்புகளுக்கு விசாரணை நடத்தப்படும் மறுமை நாளில் நாம் அல்லாஹ்வை நினைவுகூர்ந்ததை நாவும், விரல் நுனிகளும் எடுத்துச் சொல்லும்.
அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உரிய சொற்கள் நான்கு. அவை, ‘அல்ஹம்துலில்லாஹ்’, ‘ஸுபுஹானல்லாஹ்’, ‘அல்லாஹு அக்பர்’, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ ஆகியவையாகும். இவற்றில் எதை வேண்டுமென்றாலும் முன்பின் சொல்லிக்கொள்ளலாம்.
எப்பொழுதெல்லாம் தேவையில்லாமல் நம் மனம் அலைபாய்கிறதோ அப்பொழுதுகளில் எல்லாம் அதிகமதிகம் அவனை நினைவுகூர்ந்து நன்மைகளை அள்ளிக்கொள்வோம். இன்னும் நம் தவணைக் காலம் முடியும் தறுவாயில், உயிர் பிரியும் அந்த நேரம் உள்ளமெல்லாம் அவனின் நினைவு நிறைந்திருக்க, அவனை சந்திக்கப் போகும் மகிழ்ச்சியில் மனதாலும், நாவாலும் படைத்த இறைவனை நினைவு கூருதல் பெரும் பாக்கியம். அந்த அற்புதமான பெரும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.
ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை.
எனவே சர்வ வல்லமை பொருந்திய அந்த வல்ல நாயனுக்கே நம்முடைய நன்றியையும், விசுவாசத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அவன் நமக்களித்த அருட்கொடைகளுக்காக அவனிடமே மிக்க அன்பு கொண்டிருக்க வேண்டும். அந்த அன்பினை, வழிபாடுகளில் ஒன்றான ‘திக்ரு’ எனப்படும் ‘நினைவுகூருதல்’ வழியாக வெளிப்படுத்தலாம்.
திக்ரைத் தவிர அல்லாஹ்வை வணங்குவதற்கான வழிபாடுகள் ஒவ்வொன்றிற்கும் வரைமுறைகளை வல்ல நாயன் வகுத்திருக் கிறான். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமையான வழிபாடுகளுக்கு குறிப்பிட்ட காலமும், நேரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் ‘திக்ரு’ செய்வதற்கு காலம், நேரம் பார்க்க வேண்டியதில்லை. மனிதர்கள் எந்நிலையிலும், படுத்தவாறோ, உட்கார்ந்த நிலையிலோ, ஓடிக்கொண்டிருக்கும் பொழுதோ, பிரயாணத்திலோ, இன்னும் தூக்கத்தில் கூட இறைவனை நினைவுகூரலாம். மனதால் மட்டுமன்றி, நாவை அசைத்து அவனை நினைவு கூருவதால் அவனின் பொருத்தத்தையும், நெருக்கத்தையும் பெறலாம்.
கடமையான வழிபாடுகளைத் தவற விடுவதும், சரியாக செய்யாமல் விடுவதும் நாளை மறுமை நாளில் நம்மை அல்லாஹ்வின் முன் குற்றவாளிகளாக நிறுத்தி விடும். திக்ரைப் பொறுத்தவரையில் அதனைச் செய்யாமல் விட்டால் அல்லாஹ்வின் பார்வையில் அது குற்றமாகக் கருதப்பட மாட்டாது. ஆனால் அதனை அல்லாஹ்வின்பால் உள்ளன்பு கொண்டு செய்வதால் நமக்கு ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தருவதுடன், நமது மனம் தேவையில்லாத சிந்தனையில் ஈடுபடுவதை விட்டும், நமது நாவு வீணானவற்றையும், வம்பு பேசுவதை விட்டும் தடுப்பதில் திக்ரைப் போன்ற சிறந்த வழிபாடு ஏதுமில்லை.
திக்ரைப் பற்றி குர் ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள். (திருக்குர் ஆன் 33: 41, 42)
‘அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து அவனை) திக்ரு செய்து வருவது மிகப் பெரிய காரியம்’ என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறு கிறான். (29:45)
‘என்னடியான் என்னை நினைவுகூரும் பொழுதெல்லாம், தன் உதடுகளால் என்னை உச்சரிக்கும் பொழுதெல்லாம் நான் அவன் கூடவே இருக்கிறேன்’ என இறைவன் கூறுவதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
‘தன்னை நினைவுகூருபவர்கள் குறித்து அல்லாஹ் வானவர்களிடம் பெருமை பாராட்டுவதாக ஜிப்ரீல் (அலை) தன்னிடம் கூறியதாக அண்ணல் நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள்’.
ஒன்றாகக் கூடியமர்ந்து இறைவனை ‘திக்ரு’ செய்து விட்டு கலைகின்ற ஒவ்வொரு கூட்டத்தார் களிடமும் ‘எழுந்து செல்லுங்கள், உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது’ என்று சொல்லப்படு கிறது.
அல்லாஹ்வை நினைவுகூருபவர்களை அவன் நேசிக்கிறான். எந்த அளவுக்கென்றால் ‘என்னைப் பற்றி அடியான் எப்படிக் கருதுகிறானோ அப்படியே இருக்கிறேன் நான்’ என இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
‘ஒரு அடியான் தன்னுள்ளத்தில் என்னைப் பற்றி எண்ணினால் நானும் என்னுள்ளத்தில் அவனைப் பற்றி எண்ணுகிறேன். தன்னைச் சுற்றியுள்ள மக்களிடையே அவன் என்னை நினைவுகூர்ந்தால் என்னைச் சுற்றியுள்ள அதை விடவும் சிறந்தவர்களிடையே அவனை நானும் நினைவு கூருகிறேன். என்னை நோக்கி அவன் ஒரு சாண் நகர்ந்து வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் நகர்ந்து வருகிறேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் நகர்ந்து வந்தால் நான் அவனை நோக்கி இரண்டு முழம் நகர்ந்து வருகிறேன். இன்னும் என்னை நோக்கி அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடி வருகிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணல் நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள்.
உறுப்புகளுக்கு விசாரணை நடத்தப்படும் மறுமை நாளில் நாம் அல்லாஹ்வை நினைவுகூர்ந்ததை நாவும், விரல் நுனிகளும் எடுத்துச் சொல்லும்.
அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உரிய சொற்கள் நான்கு. அவை, ‘அல்ஹம்துலில்லாஹ்’, ‘ஸுபுஹானல்லாஹ்’, ‘அல்லாஹு அக்பர்’, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ ஆகியவையாகும். இவற்றில் எதை வேண்டுமென்றாலும் முன்பின் சொல்லிக்கொள்ளலாம்.
எப்பொழுதெல்லாம் தேவையில்லாமல் நம் மனம் அலைபாய்கிறதோ அப்பொழுதுகளில் எல்லாம் அதிகமதிகம் அவனை நினைவுகூர்ந்து நன்மைகளை அள்ளிக்கொள்வோம். இன்னும் நம் தவணைக் காலம் முடியும் தறுவாயில், உயிர் பிரியும் அந்த நேரம் உள்ளமெல்லாம் அவனின் நினைவு நிறைந்திருக்க, அவனை சந்திக்கப் போகும் மகிழ்ச்சியில் மனதாலும், நாவாலும் படைத்த இறைவனை நினைவு கூருதல் பெரும் பாக்கியம். அந்த அற்புதமான பெரும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.
ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை.
நபி(ஸல்) அவர்களின் முகத்திற்கு நேராக வாளை நீட்டியவரை நபி(ஸல்) அவர்கள் தண்டிக்காமல் மன்னித்து விட்டுவிட்டார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) மற்றும் அவர்களது தோழர்கள் மதீனாவிற்குத் திரும்பிய சில வாரங்களில் அன்மார், ஸஅலபா மற்றும் முஹாப் என்ற கிளையினர் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்கத் தயாராகின்றனர் என்று நபியவர்களுக்குச் செய்தி வந்தது.
துரிதமாக நபி(ஸல்) அவர்கள் செயல்பட்டு 400 அல்லது 700 தோழர்களை அழைத்துக் கொண்டு விரைந்து அப்போருக்காகப் புறப்பட்டனர். ஓர் ஒட்டகத்தில் மாறி மாறி சவாரி செய்ததால் அதிகம் நடக்க வேண்டி இருந்ததால் கால்களில் நபியின் தோழர்களுக்கு வெடிப்பு ஏற்பட்டு நகங்கள் பெயர்ந்து துண்டுத் துணிகளைக் கொண்டு கால்களில் சுற்றிக் கொண்டு நடந்தனர். அதனாலேயே இந்தப் போருக்கு ‘தாதுர் கா’ அதாவது துண்டுத் துணிகள் உடையது என்ற பெயர் வந்தது.
போகும் வழியில் ஒரு நிழல் தரும் மரத்தின் கீழ் நபி(ஸல்) ஓய்வு எடுக்கும்போது கண் அயர்ந்துவிட்டார்கள். நபித் தோழர்கள் வெவ்வேறு மர நிழலில் கண் அயந்தனர். நபிகளாரின் தனது வாளை மரத்தில் தொங்கவிட்டிருந்தார்கள்.
நபி(ஸல்) கண் அயர்ந்த நேரம் பார்த்து ஓர் இறை நிராகரிப்பாளரான கிராமவாசி அவ்வாளை உருவி நபி(ஸல்) முன்பு நிற்க, கண் விழித்துப் பார்த்த நபி(ஸல்) அவர்களை நோக்கி அந்தக் கிராமவாசி “நீ எனக்குப் பயப்படுகிறாயா?” என்று கேட்டார். நபி(ஸல்) நெஞ்சை நிமிர்த்தியவர்களாக “இல்லை” என்றார்கள். அவரோ, ‘என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?” என்று கேட்க, நபி(ஸல்) கொஞ்சமும் தயங்காமல் “அல்லாஹ்" என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டதும் அந்தக் கிராமவாசி கை நடுங்கி வாளை நழுவ விட்டார்.
அதன்பின் நபித் தோழர்கள் அங்கு சூழ்ந்ததும், நபி(ஸல்) நடந்தவற்றைச் சொன்னார்கள். கிராமவாசி ஒன்றுமே அறியாதவர் தோரணையில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தார். நபி(ஸல்) அவர்களின் முகத்திற்கு நேராக வாளை நீட்டியவரை நபி(ஸல்) அவர்கள் தண்டிக்காமல் மன்னித்து விட்டுவிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி 4:64:4135
-ஜெஸிலா பானு.
துரிதமாக நபி(ஸல்) அவர்கள் செயல்பட்டு 400 அல்லது 700 தோழர்களை அழைத்துக் கொண்டு விரைந்து அப்போருக்காகப் புறப்பட்டனர். ஓர் ஒட்டகத்தில் மாறி மாறி சவாரி செய்ததால் அதிகம் நடக்க வேண்டி இருந்ததால் கால்களில் நபியின் தோழர்களுக்கு வெடிப்பு ஏற்பட்டு நகங்கள் பெயர்ந்து துண்டுத் துணிகளைக் கொண்டு கால்களில் சுற்றிக் கொண்டு நடந்தனர். அதனாலேயே இந்தப் போருக்கு ‘தாதுர் கா’ அதாவது துண்டுத் துணிகள் உடையது என்ற பெயர் வந்தது.
போகும் வழியில் ஒரு நிழல் தரும் மரத்தின் கீழ் நபி(ஸல்) ஓய்வு எடுக்கும்போது கண் அயர்ந்துவிட்டார்கள். நபித் தோழர்கள் வெவ்வேறு மர நிழலில் கண் அயந்தனர். நபிகளாரின் தனது வாளை மரத்தில் தொங்கவிட்டிருந்தார்கள்.
நபி(ஸல்) கண் அயர்ந்த நேரம் பார்த்து ஓர் இறை நிராகரிப்பாளரான கிராமவாசி அவ்வாளை உருவி நபி(ஸல்) முன்பு நிற்க, கண் விழித்துப் பார்த்த நபி(ஸல்) அவர்களை நோக்கி அந்தக் கிராமவாசி “நீ எனக்குப் பயப்படுகிறாயா?” என்று கேட்டார். நபி(ஸல்) நெஞ்சை நிமிர்த்தியவர்களாக “இல்லை” என்றார்கள். அவரோ, ‘என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?” என்று கேட்க, நபி(ஸல்) கொஞ்சமும் தயங்காமல் “அல்லாஹ்" என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டதும் அந்தக் கிராமவாசி கை நடுங்கி வாளை நழுவ விட்டார்.
அதன்பின் நபித் தோழர்கள் அங்கு சூழ்ந்ததும், நபி(ஸல்) நடந்தவற்றைச் சொன்னார்கள். கிராமவாசி ஒன்றுமே அறியாதவர் தோரணையில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தார். நபி(ஸல்) அவர்களின் முகத்திற்கு நேராக வாளை நீட்டியவரை நபி(ஸல்) அவர்கள் தண்டிக்காமல் மன்னித்து விட்டுவிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி 4:64:4135
-ஜெஸிலா பானு.
இறைவனின் விசாலமான கருணை அவன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு கற்றுத் தரும் அதேவேளை, அவனது தண்டனை அச்சம் கொள்ளவும் செய்ய வேண்டும்.
“அந்தக் குழந்தையை அவள் நெருப்பில் வீசுவாளா?”
ஒரு தாயைச் சுட்டிக்காட்டி நபி (ஸல்) அவர்கள் தன்னருகில் நின்றுகொண்டிருந்த தோழர்களிடம் கேட்ட கேள்வி இது.
ஹவஸான் எனும் போரின்போது போர்க் களத்தில் நின்ற போது இந்தக் கேள்வியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
ஹவஸான் போரில் எதிரிகளும் முஸ்லிம்களும் ஏறக்குறைய சம அளவில் இருந்தனர். போர் உக்கிரமாக நடைபெற்றது. முஸ்லிம்கள் பெரும் வெற்றிபெற்றனர். எதிரிகள் கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் பெண்களும் இருந்தனர்.
அப்போது அங்கு நடைபெறும் களேபரம் எது குறித்தும் கவலைப்படாமல் ஒரேயொரு பெண் மட்டும் பெண்கள் பகுதியில் சுற்றிச் சுற்றி வந்து எதையோ தேடிக்கொண்டிருந்தாள். கொலை செய்யப்பட்ட மக்கள் குறித்தோ, கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டிருப்பது பற்றியோ அல்லது போர் குறித்த கவலையோ எதுவுமின்றி எதையோ உன்னிப்பாகத் தேடிக்கொண்டிருந்தாள். பெண்களுக்கு மத்தியில் இருக்கும் குழந்தைகளை உற்று நோக்கத் தொடங்கினாள். தவறிப்போன தனது குழந்தையைத்தான் அவள் தேடுகின்றாள் என்பதை அனைவரும் அறிந்தனர்.
அந்தப் பெண்மணி என்னதான் செய்கிறாள் என்று நபி (ஸல்) அவர்களும் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
திடீரென ஒரு குழந்தையை அந்தப் பெண் கண்டெடுத்தாள். உடனே வாரி எடுத்து உச்சி முகர்ந்தாள். நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்தாள். உலகமே ஒன்று திரண்டு அவளிடமிருந்து அந்தக் குழந்தையைப் பறிக்க முயன்றாலும் முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண்ணுடைய அணைப்பு இருந்தது. கண்ணீருடன் அதன் கன்னத்தில் முத்தமிட்டாள். பொது இடம் என்ற உணர்வையும் மறந்து அமுதூட்டத் தொடங்கிவிட்டாள். அப்போது அவளின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறென வழிந்தோடியது.
இந்தக் காட்சி பெருமானாருக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அப்போதுதான் அந்தப் பெண்ணைச் சுட்டிக்காட்டியவாறு, “அந்தக் குழந்தையை அந்தப் பெண் நெருப்பில் வீசுவாளா?” என்ற கேள்வியை தோழர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
தோழர்கள் கூறினர்: “இல்லை இறைத்தூதர் அவர்களே! ஒருபோதும் அந்தக் குழந்தையை அவள் நெருப்பில் வீசமாட்டாள். கொஞ்ச நேரம் அந்தக் குழந்தையைக் காணாதபோது அவள் என்ன பாடுபட்டாள் என்பதைத்தான் நாம் கண்ணால் கண்டோமே. கண்டெடுத்த பின்னர் அந்தக் குழந்தையை அவள் எப்படி மார்போடு அணைத்து முத்தமிட்டாள் என்பதையும் நாம் கண்டோம். பின் எப்படி அவள் நெருப்பில் வீசுவாள்?”
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணை! இந்தக் குழந்தைமீது இவளுக்குள்ள அன்பைவிட இறைவன் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பும் கருணையும் கொண்டவனாக இருக்கின்றான்” (புகாரி)
தோழர்களுக்கு பாடம் புகட்டுவதற்கான சந்தர்ப்பம் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மிக அழகிய முறையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனைப் பயன்படுத்துவார்கள். இதுவும் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம்தான்.
அடியார்கள் மீது இறைவன் கொண்டிருக்கும் பேரன்பை என்னவென்று சொல்வது..! ஆகவேதான் அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்: “மறுமை விசாரணையை யார் விசாரிக்கவேண்டும்; இறைவனா எனது தாயாரா.. என்று தெரிவு செய்யும் உரிமையை மறுமையில் என் இறைவன் எனக்குத் தந்தால் இறைவனிடம் நான் கூறுவேன்; இல்லை. இறைவா.. நீயே என்னை விசாரிப்பாயாக! என் தாயைவிட நீதான் என்மேல் அதிக கருணை மிக்கவன்”.
இறைவன் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை, நமது பெற்றோர் நம்மீது வைத்திருக்கும் அன்பைவிட அவன் பெரும் கருணையாளன் எனும் கருத்தை பெருமானார் (ஸல்) அவர்களின் அந்தக் கேள்வி சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளை இந்த எண்ணம் தவறு செய்வதற்கு தூண்டு கோலாக ஆகிவிடவும் கூடாது. ஆம், அவன் கருணையாளன் தானே.. என்னவேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம் எனும் சிந்தனை ஒருபோதும் உள்மனதில் தோன்றிவிடக்கூடாது. அவன் கருணையாளன் தானே. கடமையான தொழுகையை பின்னர் தொழுதுகொள்ளலாம் என்றோ, மக்களின் உரிமையில் கை வைக்கலாம் என்றோ, அடுத்தவர் பொருளை அபகரிக்கலாம் என்றோ, நீதி அநீதி, சத்தியம் அசத்தியம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை, எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றிவிடக் கூடாது.
இறைவன் எப்படி மன்னிப்பாளனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றானோ அப்படியே கடுமையாக தண்டிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான் என்ற உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். ஆகவேதான் அறிஞர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்: “இறைவன் மாபெரும் கருணையாளன் என்ற நம்பிக்கை இருப்பதைப் போன்றே தவறு செய்தால் தண்டிப்பான் என்ற அச்சமும் இருக்க வேண்டும்”.
‘பெரும் தவறுகளைக் குறித்து மட்டுமல்ல, மாறாக சிறிய தவறுகளைக் குறித்துகூட இறைவன் தண்டிப்பான்’ என்று அச்சம்கொண்டவனாகவே மனிதன் இருக்க வேண்டும் என்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்: கைபர் வெற்றிகொள்ளப்பட்டது. போர் செல்வமாக எங்களுக்கு மாடு, ஒட்டகம், வீட்டு உபயோகப் பொருட்கள், தோட்டங்கள் ஆகியவை கிடைத்தன. நாங்கள் மதீனாவுக்குத் திரும்பினோம்.
நபி (ஸல்) அவர்களுடன் மித்அம் எனப்படும் ஓர் அடிமையும் இருந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை அந்த அடிமை இறக்கிக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவர்மீது பாய்ந்தது. ‘அவருக்கு இறைவழியில் உயிர்த்தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்’ என்று மக்கள் கூறினர்.
அப்போது நபிகளார் கூறினார்கள்: ‘இல்லை, எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படுமுன் அவர் எடுத்துக்கொண்ட போர்வையே அவருக்கு நரக நெருப்பாகி எரிந்துகொண்டிருக்கிறது’.
இதைக் கேட்டபோது ஒரு மனிதர், இரு செருப்பு வார்களைக் கொண்டுவந்து, ‘இது போர்ச் செல்வம் பங்கிடப்படுமுன் நான் எடுத்துக்கொண்ட பொருள்’ என்று கூறினார்.
அப்போது நபிகளார் கூறினார்கள்: ‘இவை சாதாரண செருப்பு வார்கள் அல்ல. இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே நரகத்தின் செருப்பு வார்கள்’ என்று கூறினார்கள். (புகாரி)
இறைவனின் விசாலமான கருணை அவன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு கற்றுத் தரும் அதேவேளை, அவனது தண்டனை அச்சம் கொள்ளவும் செய்ய வேண்டும். இரண்டுக்கும் மத்தியில் சமநிலை பேணவேண்டும். அதுதான் உண்மையான இறை நம்பிக்கை.
-மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
ஒரு தாயைச் சுட்டிக்காட்டி நபி (ஸல்) அவர்கள் தன்னருகில் நின்றுகொண்டிருந்த தோழர்களிடம் கேட்ட கேள்வி இது.
ஹவஸான் எனும் போரின்போது போர்க் களத்தில் நின்ற போது இந்தக் கேள்வியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
ஹவஸான் போரில் எதிரிகளும் முஸ்லிம்களும் ஏறக்குறைய சம அளவில் இருந்தனர். போர் உக்கிரமாக நடைபெற்றது. முஸ்லிம்கள் பெரும் வெற்றிபெற்றனர். எதிரிகள் கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் பெண்களும் இருந்தனர்.
அப்போது அங்கு நடைபெறும் களேபரம் எது குறித்தும் கவலைப்படாமல் ஒரேயொரு பெண் மட்டும் பெண்கள் பகுதியில் சுற்றிச் சுற்றி வந்து எதையோ தேடிக்கொண்டிருந்தாள். கொலை செய்யப்பட்ட மக்கள் குறித்தோ, கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டிருப்பது பற்றியோ அல்லது போர் குறித்த கவலையோ எதுவுமின்றி எதையோ உன்னிப்பாகத் தேடிக்கொண்டிருந்தாள். பெண்களுக்கு மத்தியில் இருக்கும் குழந்தைகளை உற்று நோக்கத் தொடங்கினாள். தவறிப்போன தனது குழந்தையைத்தான் அவள் தேடுகின்றாள் என்பதை அனைவரும் அறிந்தனர்.
அந்தப் பெண்மணி என்னதான் செய்கிறாள் என்று நபி (ஸல்) அவர்களும் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
திடீரென ஒரு குழந்தையை அந்தப் பெண் கண்டெடுத்தாள். உடனே வாரி எடுத்து உச்சி முகர்ந்தாள். நெஞ்சோடு சேர்த்து இறுக்கி அணைத்தாள். உலகமே ஒன்று திரண்டு அவளிடமிருந்து அந்தக் குழந்தையைப் பறிக்க முயன்றாலும் முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண்ணுடைய அணைப்பு இருந்தது. கண்ணீருடன் அதன் கன்னத்தில் முத்தமிட்டாள். பொது இடம் என்ற உணர்வையும் மறந்து அமுதூட்டத் தொடங்கிவிட்டாள். அப்போது அவளின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறென வழிந்தோடியது.
இந்தக் காட்சி பெருமானாருக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அப்போதுதான் அந்தப் பெண்ணைச் சுட்டிக்காட்டியவாறு, “அந்தக் குழந்தையை அந்தப் பெண் நெருப்பில் வீசுவாளா?” என்ற கேள்வியை தோழர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
தோழர்கள் கூறினர்: “இல்லை இறைத்தூதர் அவர்களே! ஒருபோதும் அந்தக் குழந்தையை அவள் நெருப்பில் வீசமாட்டாள். கொஞ்ச நேரம் அந்தக் குழந்தையைக் காணாதபோது அவள் என்ன பாடுபட்டாள் என்பதைத்தான் நாம் கண்ணால் கண்டோமே. கண்டெடுத்த பின்னர் அந்தக் குழந்தையை அவள் எப்படி மார்போடு அணைத்து முத்தமிட்டாள் என்பதையும் நாம் கண்டோம். பின் எப்படி அவள் நெருப்பில் வீசுவாள்?”
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணை! இந்தக் குழந்தைமீது இவளுக்குள்ள அன்பைவிட இறைவன் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பும் கருணையும் கொண்டவனாக இருக்கின்றான்” (புகாரி)
தோழர்களுக்கு பாடம் புகட்டுவதற்கான சந்தர்ப்பம் எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மிக அழகிய முறையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனைப் பயன்படுத்துவார்கள். இதுவும் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம்தான்.
அடியார்கள் மீது இறைவன் கொண்டிருக்கும் பேரன்பை என்னவென்று சொல்வது..! ஆகவேதான் அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்: “மறுமை விசாரணையை யார் விசாரிக்கவேண்டும்; இறைவனா எனது தாயாரா.. என்று தெரிவு செய்யும் உரிமையை மறுமையில் என் இறைவன் எனக்குத் தந்தால் இறைவனிடம் நான் கூறுவேன்; இல்லை. இறைவா.. நீயே என்னை விசாரிப்பாயாக! என் தாயைவிட நீதான் என்மேல் அதிக கருணை மிக்கவன்”.
இறைவன் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை, நமது பெற்றோர் நம்மீது வைத்திருக்கும் அன்பைவிட அவன் பெரும் கருணையாளன் எனும் கருத்தை பெருமானார் (ஸல்) அவர்களின் அந்தக் கேள்வி சுட்டிக்காட்டுகிறது.
அதேவேளை இந்த எண்ணம் தவறு செய்வதற்கு தூண்டு கோலாக ஆகிவிடவும் கூடாது. ஆம், அவன் கருணையாளன் தானே.. என்னவேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம் எனும் சிந்தனை ஒருபோதும் உள்மனதில் தோன்றிவிடக்கூடாது. அவன் கருணையாளன் தானே. கடமையான தொழுகையை பின்னர் தொழுதுகொள்ளலாம் என்றோ, மக்களின் உரிமையில் கை வைக்கலாம் என்றோ, அடுத்தவர் பொருளை அபகரிக்கலாம் என்றோ, நீதி அநீதி, சத்தியம் அசத்தியம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை, எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றிவிடக் கூடாது.
இறைவன் எப்படி மன்னிப்பாளனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றானோ அப்படியே கடுமையாக தண்டிக்கக்கூடியவனாகவும் இருக்கின்றான் என்ற உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். ஆகவேதான் அறிஞர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்: “இறைவன் மாபெரும் கருணையாளன் என்ற நம்பிக்கை இருப்பதைப் போன்றே தவறு செய்தால் தண்டிப்பான் என்ற அச்சமும் இருக்க வேண்டும்”.
‘பெரும் தவறுகளைக் குறித்து மட்டுமல்ல, மாறாக சிறிய தவறுகளைக் குறித்துகூட இறைவன் தண்டிப்பான்’ என்று அச்சம்கொண்டவனாகவே மனிதன் இருக்க வேண்டும் என்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்: கைபர் வெற்றிகொள்ளப்பட்டது. போர் செல்வமாக எங்களுக்கு மாடு, ஒட்டகம், வீட்டு உபயோகப் பொருட்கள், தோட்டங்கள் ஆகியவை கிடைத்தன. நாங்கள் மதீனாவுக்குத் திரும்பினோம்.
நபி (ஸல்) அவர்களுடன் மித்அம் எனப்படும் ஓர் அடிமையும் இருந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை அந்த அடிமை இறக்கிக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவர்மீது பாய்ந்தது. ‘அவருக்கு இறைவழியில் உயிர்த்தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்’ என்று மக்கள் கூறினர்.
அப்போது நபிகளார் கூறினார்கள்: ‘இல்லை, எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படுமுன் அவர் எடுத்துக்கொண்ட போர்வையே அவருக்கு நரக நெருப்பாகி எரிந்துகொண்டிருக்கிறது’.
இதைக் கேட்டபோது ஒரு மனிதர், இரு செருப்பு வார்களைக் கொண்டுவந்து, ‘இது போர்ச் செல்வம் பங்கிடப்படுமுன் நான் எடுத்துக்கொண்ட பொருள்’ என்று கூறினார்.
அப்போது நபிகளார் கூறினார்கள்: ‘இவை சாதாரண செருப்பு வார்கள் அல்ல. இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே நரகத்தின் செருப்பு வார்கள்’ என்று கூறினார்கள். (புகாரி)
இறைவனின் விசாலமான கருணை அவன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு கற்றுத் தரும் அதேவேளை, அவனது தண்டனை அச்சம் கொள்ளவும் செய்ய வேண்டும். இரண்டுக்கும் மத்தியில் சமநிலை பேணவேண்டும். அதுதான் உண்மையான இறை நம்பிக்கை.
-மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.






